மருதாணியை கைகளில் வைப்பதால் உடல் சூடு தணிந்து கண்களுக்கு குளிர்ச்சியை வழங்குகின்றது. மருதாணி பூக்களை பறித்து தலையணைகளில் பரப்பி இரவு நித்திரைக்கு சென்றால் நல்ல தூக்கம் வரும்.
நகங்களுக்கிடையில் மறைத்திருக்கும் கிருமிகளைக்கூட மருதாணி அழிக்கிறது. தோல் தொடர்பான நோய்களுக்கும் மருதாணி நல்ல தீர்வை வழங்குகின்றது. மருதாணியை கைகளில் போடுவதற்கு முன்னர் அதில் சிறிது கிராம்பு சேர்த்து அரைக்க விரைவாக சிவக்கும். மருதாணி இலைகளை அரைத்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி தலைக்குத் தேய்த்து வர, பொடுகுத் தொல்லை நீங்கும் மற்றும் இளநரை கட்டுப்படும்.
சர்க்கரை நோயாளிகளுக்குப் பாதங்களில் ஏற்படும் எரிச்சல் மற்றும் குடைச்சலைத் தடுத்து, இரத்த ஓட்டத்தைச் சீராக்க மருதாணி உதவுகிறது.