Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.




இந்திய கிரிக்கெட்டில் தொடரும் சிக்கல் நிலை, மீட்டுக் கொடுக்கும் முயற்சியில் இந்திய உயர் நீதிமன்றம்.

இந்திய கிரிக்கெட்டின் அடுத்த தலைவராக முன்னாள் அணித்தலைவர் சுனில் கவாஸ்கர் நியமிக்கப்படவேண்டும் என்ற கருத்துக்கள் வலுப்பெற்று வருகின்றன.

இது பற்றி நேற்றைய தினம் முதலில் வெளியான செய்தியை இங்கே வாசியுங்கள்.

இந்திய கிரிக்கெட் சபையின் தலைமை பொறுப்பு கிடைத்தால் சந்தோசப்படுவேன். அத்தோடு எந்த சவாலாயினும் அதனை எதிர் கொண்டு உயர் நீதிமன்றத்தின் கட்டளைக்கு அமைவாக சுயாதீன விசாரணைகள் இடம்பெற சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்வேன் என்ற கருத்தை கவாஸ்கர் வெளியிட்டுள்ளார்.

இப்படி இவர் கருத்துக்களை வெளியிட்டாலும் பல கோணங்களில் பலரால் இந்த உயரிய பதவி குறிவைக்கப்படுகின்றது.

வங்காள விளையாட்டுத் துறை அமைச்சராக இருக்கும் மடான் மித்த்ராவின் கருத்துக்களை பொறுத்தவரை அந்த பதவியில் ஆளுமை பொருந்திய முன்னாள் அணித்தலைவர் கங்குலி நியமிக்கபடுவதே சிறந்தது என்ற கருத்தை முன் வைத்துள்ளார்.

இந்திய கிரிக்கெட்டில் என்னையும் மறந்து விடாதீர்கள் என்ற போர்வையில் எக்குத் தப்பான கருத்துக்களை அடிக்கடி அள்ளி வீசிவரும் சர்சைக்குரிய பிஷன் சிங் பேடியின் கருத்துப்படி அந்த பதவியில் முன்னாள் BCCI தலைவர் சசாங் மனோகர் நியமிக்கபடவேண்டும் என்ற கருத்தை முன்வைத்துள்ளார்.

இந்தியாவின் முன்னாள் வீரர்கள் கும்ப்ளே,ஸ்ரீகாந்த்,டிராவிட் ஆகிய வீரர்கள் இந்திய கிரிக்கெட் சபையின் தற்போதைய நெருக்கடி நிலை குறித்து கவலை வெளியிட்டுள்ளனர்.



இப்படியான சிக்கல்களுக்கு மத்தியில் IPL ஆரம்ப விழா ,அறிமுக விழா தொடர்பான செய்தியாளர் சந்திப்பு டுபாயில் ஒழுங்கு செய்யபட்டிருந்து பிற்போடப்பட்டு கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

ஆனாலும் பிந்தி கிடைத்த BCCI யின் தகவல்படி இப்படியாக கவாஸ்கரின் வரவை இந்திய கிரிக்கெட் சபையில் இருப்பவர்கள் விரும்பவில்லை என்றும் பேசப்படுகின்றது.இவருக்கு பதிலாக முன்னாள் ஹைதராபாத் சுழல்பந்துவீசாளர் சிவ்லால் யாதவ் அல்லது அனில் கும்ப்ளே ஆகியோரின் வரவையே BCCI யின் உயர் மட்டத்தினர் விரும்புவதாகவும் அறியக்கிடைக்கிறது.

இந்த சிவ்லால் யாதவ் BCCI யின் பிரதி தலைவராக இருப்பவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.இதேவேளை BCCI யின் யாப்பு பிரகாரம் சபையின் தலைவர் மரணித்தாலோ அல்லது அவரால் செயற்பட முடியாது போனால் அடுத்த 15 நாட்களுக்குள் அடுத்த தலைவர் தேர்வாகும் வரை அந்த தலைமை பொறுப்பை செயலாளரே கவனிக்க வேண்டும் என்ற விதி முறை இருக்கின்றமையும் சுனில் கவாஸ்கர் பதில் தலைவராவதில் சிக்கலை ஏற்படுத்துகிறது எனலாம்.



இந்த நிலையில் அடுத்து வரப்போகும் நாட்களில் இந்திய கிரிக்கெட் சபையில் திடுக்கிடும் மாற்றங்களும் ,மாறுதல்களும் வரலாம் என்று எதிர்பார்க்கபடுகின்றது.
1,348 Views
எதிர்வரும் ஐபிஎல் தொடரில் சென்னை சுப்பர் கிங்க்ஸ் , ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகள் பங்கேற்கக் கூடாது என்று இந்திய உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது.
 
அத்துடன் இந்திய கிரிக்கெட் சபைத் தலைவர் N. சீனிவாசன் பதவி விலக வேண்டும் என்றும் இவருக்கு பதிலாக முன்னாள் இந்திய அணித் தலைவர் சுனில் கவாஸ்கரை இடைக்கால தலைவராக நியமிக்கலாம் என்றும் நீதிபதிகள் தங்களின் பரிந்துரைகளைத் தெரிவித்துள்ளனர்.



இன்று காலை விசாரணைகளுக்கு வழிவிட தான் பதவி விலகத் தயார் என்று ஸ்ரீனிவாசன் குறிப்பிட்டதாக இந்திய கிரிக்கெட் சபை நீதிமன்றுக்கு அறிவித்திருந்தது.

இப்போது பரிந்துரைகளை வழங்கியுள்ள நீதிபதிகள், நாளை அதிகாரபூர்வ உத்தரவைப் பிரப்பிக்கவுள்ளனர்.

ஊழல் விசாரணைகளை செல்வதற்காகவே இந்தப் பரிந்துரைகளை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் வெளியுட்டுள்ளார்கள்.

இந்த குற்றச்சாட்டுக்களில் இந்திய கிரிக்கெட் சபைத் தலைவர் N. சீனிவாசன், அவரது மருமகனும் சென்னை அணியின் உரிமையாளர்களில் ஒருவருமான குருநாத் மெய்யப்பன், சென்னை மற்றும் இந்திய அணிகளின் தலைவரான மகேந்திரசிங் தோனி, ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் உரிமையாளர் ராஜ் குந்த்ரா இன்னும் பலரின் பெயர்கள் அடிபடுகின்றமை முக்கியமானது.



இன்றைய பரிந்துரைகளும் நாளைய தீர்ப்பும் இவர்களில் எல்லோருக்கும் அல்லது பெரும்பாலோனோருக்கும் சிக்கலை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது.
2,576 Views
வெள்ளித் திரைகளில் அள்ளிப்பூசிக்கொண்டு அழகு காட்டும் எங்கள் நடிகைகளின் அரிதாரம் கலைத்த உண்மை முகங்கள் இவை.

















மேக் அப் செய்யும் மஜிக் பார்த்தீங்களா?

மேக் அப் பூசி மினுக்கும் வித வித நடிகைகளின் படங்களை இங்கே பாருங்கள்.
2,292 Views
குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகி பின்னர் சிறிது காலம் காணாமல் போயிருந்த ஸ்ரீதேவியை , மீண்டும் தமிழுக்கு அறிமுகம் செய்து வைக்க​ ​அழைத்து வந்தவர் பாரதிராஜா.

கமலுக்கு ஜோடியாக அவரது 16 வயதினிலே படத்தில் நடிக்க வைத்து ஸ்ரீதேவிக்கு நல்ல பாதையை ஏற்படுத்திக் கொடுத்தார் ​பாரதி​ராஜா. படமும் செம ஹிட் ஆகி ஸ்ரீதேவியை முதன்மை நாயகியாக்கியது.

தென்னிந்திய சினிமாவில் மும்முரமாக எல்லா நடிகர்களோடும் போட்டி போட்டு நடித்து புகழின் உச்சியில் வ​ல​ம் வந்தவர், ஹிந்தி திரையிலும் தன்னை அடையாளப்படுத்த நுழைந்தார். அங்கும் எல்லோருக்கும் கனவு தேவதையாகவே ​வ​ல​ம் வந்தார். பின்னர், தன்னை ஹிந்தியில் அறிமுகம் செய்த தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்து 3 குழந்தைகளுக்கும் தாயாகி நடிப்புக்கு முழுக்கு போட்டிருந்தார்.

பின்னர், மீண்டும் மறுபிரவேசம் செய்தார் சவாலான வேடமொன்றில் நடித்ததன் மூலம். இங்கிலீஷ் விங்க்ளிஷ் அவரது பெயரை மறுபடியும் எல்லோர் மனங்களிலும் பதித்தது.
இதன் பிறகு, ஸ்ரீதேவி எதிர்பார்த்தளவுக்கு வாய்ப்புக்கள் கைக்கு எட்டவில்லை. ஆனாலும், அண்மையில் , ஜி.வீ.பிரகாஷ் குமார் நடிக்கும் த்ரிஷா இல்லைன்னா நயன்தாரா படத்தில் ஒரு நல்ல வேடம் கிடைத்துள்ளது.

இந்த திரைப்படத்தில் ஸ்ரீதேவிக்கு ஜோடியாக நடிக்கப் போகிறவ​ர்​ யாரென்றால், அவர்தான் இயக்குனர் பாரதிராஜா. அறிமுகம் செய்து வைத்த பாரதிராஜாவும் ஸ்ரீதேவியும் இந்தப் படத்தில் முக்கியமான பாத்திரங்களான பெற்றோர் வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்கள் என்பது நமது இரசிக்க பெருமக்களுக்கு சந்தோசமான செய்திதான். ஆனாலும், பாரதிராஜா எல்லோரையும் காய்ச்சி எடுப்பது போல இந்தப் படத்தை வறுத்தெடுக்காமல் விட்டால் சரி!​
1,734 Views
முத்தமிட்ட மாலுமி - Kissing Sailorஎன்ற பெயரில் பிரபலமானவர் அமெரிக்காவின் க்லென் மக்டபி (Glenn McDuffie).

இரண்டாம் உலக மகா யுத்தத்தின் போது அமெரிக்கா ஜப்பானை வெற்றி கொண்டதை அறிந்து ஆனந்தத்தில் அல்லோலகல்லோலப்பட்டு அருகே சிவனே என்று நின்று இருந்த ஒரு பெண்மணியை இழுத்து அணைத்து உதட்டில் உம்மா கொடுத்த கப்பலோட்டி மக்டபீ தனது 86 வயதில் மரணமாகி இருக்கிறார்.

ஒரு முத்தம் இவருக்கு உச்சபட்ச புகழைக் கொடுத்தது.



இவர் அடைந்த பிறவிப் பயன் என்ன தெரியுமா??

இவர் அந்த கிளுகிளுப்பான வீர செயலை புரிந்ததை அதே இடத்தில் இருந்த புகைப்பட கலைஞர் தன்னுடைய தன்னுடைய புகைப்பட கருவியில் போட்டோவாக பிடித்து பத்திரிகையில் வெளியிட்டு இருக்கிறார்.

பின்னாளில் இவர்தானா அந்த போட்டோவில் இருக்கும் நபர் என்பதை அறிந்து கொள்வதற்காக இவரை அழைத்து அதே இடத்தில் அதாவது சம்பவ இடத்தில் மீண்டும் ஒரு முறை நிறுத்தி அதே போன்று உம்மா கொடுக்க சொல்லி (முதியவரான பின்னரும் கூட) 100 முறை போட்டோவை எடுத்து பார்த்திருக்கிறார்கள்.





கிழவரான பின்னரும் தன முத்தமிட்ட மாலுமி நாட்களை குஷியாக ஞாபகப்படுத்தி கலக்கியிருந்தார் மக்டபி.
1,508 Views
இந்த மானிட பிறவியில் மனிதனாக படைக்கப் பட்ட ஒவ்வொருவரும் மாட்டை அடக்கி பாத்திருப்பீர்கள் காளையை அடக்கி பாத்திருப்பீர்கள் அவ்வளவு ஏன் வியஜகாந்துடைய படங்களில் மதங் கொண்ட யானையை கூட அடக்கி பாத்திருக்கோம்.

ஆனால் நாங்க இப்ப பாக்க போறது வெறும் 22 வயதான தாய்லாந்து கட்டிளம் காளை ஒருவர் தன்னுடைய பார்வையிலேயே (பாவையை மயக்கி இருக்கிறார் என்று தானே நினைப்பீர்கள்.. ஆசையை பாருங்க.. ) நானும் அப்படிதான் நினைத்தேன்.

ஆனால் இந்த நபர் பாம்பை - அதுவும் கடும் விஷம் கொண்ட ராஜ நாகத்தை  அடக்கி கஞ்சத்தனம் இன்றி ஆசை முத்தங்களை அள்ளி அள்ளி வழங்கி இருக்கிறார்.


முதல் கட்டத்தில் குறிப்பிட்ட நபரை அந்த பாம்பு நெருங்கவே விடவில்லையாம் என்றாலும் நிமிடங்கள் கழிய கழிய குறித்த தாய்வான் நபரின் கட்டுபாட்டுக்குள் பாம்பு வந்துவிட்டதாம்.



பாருங்களேன் பாம்பைக்கூட விட்டுவைக்கவில்லையே..... பாசம் பாசம்..
1,945 Views
கழுத்தளவு சேற்று நீரில் தினந்தோறும் நீந்திச் சென்று தன மாணவர்களின் கல்விப்பசி போக்கும் ஆசிரியர் இந்தக் காலத்திலும் இருக்கிறார் என்றால் அது ஆச்சரியத்துக்குரியது மட்டுமில்லை, போற்றக்கூடியதுமாகும்.

இந்தியாவின் கேரளா மாநிலத்தின் மலப்புரம் மாவட்டத்தின் சிறிய கிராமம் ஒன்றைச் சேர்ந்த 40 வயதான ஆசிரியர் அப்துல் மாலிக் ஒவ்வொரு நாளும் காலையில் 9 மணிக்கு தன் கிராமத்தின் ஆற்றங்கரையின் ஒரு புறத்தில் நின்று ஆடைகளை மாற்றி, அவற்றை நனையாத மாதிரி பத்திரப்படுத்திக்கொண்டு கழுத்தளவு நீந்தி மறுகரை அடைகிறார்.

மீண்டும் நல்ல ஆடைகளுக்குள் தன்னை உட்புகுத்தி காட்டு வழியாக மலையேறி 20 வருடங்களாகக் கற்பிக்கும் பாடசாலையைச் சேர்கிறார்.



இவ்வளவும் எதற்காக?

"பஸ்ஸில் ஏறினால் 12 கிலோ மீட்டர் தூரம், 3 மணி நேரம் எடுக்கும். இப்படியே நீந்தி, பின் நடந்து போனால் 25 நிமிடங்கள். நேரத்தையும் மிச்சப்படுத்தலாம், அந்த நேரத்தில் மாணவர்களுக்கு ஏதாவது பயனுள்ளதா சொல்லிக் கொடுக்கலாம்" என்கிற மாலிக்குக்கு 20 வருட அனுபவம் அலுக்கவில்லையாம்.

வெறும் 25000 ரூபாய் சம்பளத்துக்காக அல்ல இது; அதையும் தாண்டிய ஆத்ம திருப்தி என்கிற அப்துல் மாலிக்கின் மாணவர்கள் இவரது பெயரைச் சொன்னாலே உருகிப் போகிறார்கள்.

அதில் ஒரு பத்து வயது மாணவன் தன் எதிர்கால லட்சியம் பற்றிக் கேட்டபோது "மாலிக் சேர் போல ஆசிரியராக வரவேண்டும்" என்கிறான்.
1,607 Views
ஆடுகளம் திரைப்படத்தின் மூலமாக தனுஸ் ஜோடியாக தமிழில் அறிமுகமான நடிகை டாப்ஸி எங்க இப்போ என்று கேட்கும் அளவுக்கு ஆளே தமிழ் சினிமாவில் இல்லை.

என்ன டாப்சி இப்பிடி ஆகிட்டீங்கன்னு கேட்டால், பொண்ணு புலம்ப ஆரம்பிச்சிட்டாங்க. ''இங்க நடிக்குறதுக்கு ஏற்றவங்களை யாரும் தேடுறதில்லை. எல்லோருமே கவர்ச்சிக்கே முதல்ல நடிகைகளை பயன்படுத்துறாங்க. நான் அந்த மாதிரி நடிக்கிறதுக்கு விரும்பவில்லை. எனக்கு தகுந்த பாத்திரங்கள் அமையும் போது மட்டுமே நடிக்க சம்மதிப்பேன். இல்லைன்னா... வேற தொழிலை பார்த்துட்டு போய்ட்டே இருப்பேன்'' என்று டாப்ஷி எகிறி விட்டார்.

ஆனாலும், இப்பொழுது இன்னுமொரு தகவல் கிடைத்திருக்கிறது.
தமிழில் தனக்கு சரியான வாய்ப்புக்கள் கிடைக்காமையால், தனது மனேஜரிடம் இயக்குனர்களுக்கு இனிக்கும் செய்தி ஒன்றை வழங்கியிருக்கிறார். என்ன தெரியுமா?
கதைக்கு தேவைப்பட்டால் கவர்ச்சியில் எல்லை இல்லாமல் நடிக்கவும் ஆடைக்குறைப்பை எந்தளவுக்கு வேண்டுமென்றாலும் குறைக்கவும் தயாராக தான் இருக்கும் செய்தியை தெளித்திருக்கிறார்.

அப்போ நீங்க யோசிக்கலாம், முதல்ல ஏதோ சொன்ன போல இருக்கேன்னு ! அது அப்பிடித்தான்...! ஒருத்தருக்கு ஒரு மாதிரி பேசுவம்ல...
6,067 Views
கமல், விஜய், சூர்யா, விக்ரம் உட்பட தமிழ் சினிமாவின் அனேக முன்னணி நாயகர்களின் படங்களுக்கும் இசையமைத்திருக்கிறார் ஹரிஸ் ஜெயராஜ்.
ஆனால், சூப்பர் ஸ்டார் ரஜினிக்கும், ‘தல’ அஜித்துக்கும் இதுவரை இசையமைக்கும் வாய்ப்பு அவருக்கு அமையவில்லை. இது பற்றி நண்பர் வட்டாரத்தில் வருத்தப்பட்டும் இருந்தார் ஹரிஸ்.

தற்போது, கே.வி.ஆனந்த் இயக்கத்தில் அஜித் நடிக்கவிருக்கும் படத்திற்கு இசையமைக்க ஹரிஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார் என நம்பத்தகுந்த வட்டாரத்திலிருந்து தகவல்கள் கிடைத்திருக்கின்றன.

கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவிருக்கிறது. இப்படம் முடிவடைந்ததும் கே.வி.ஆனந்த் இயக்கும் படத்தின் படப்பிடிப்பில் அஜித் கலந்து கொள்வார் என்கிறார்கள். முதலில் இந்தக் கதையை ரஜினிக்குதான் சொன்னாராம் கே.வி.ஆனந்த். ஆனால், இந்தக் கதைக்கு பொருத்தமானவர் அஜித்தான் என ரஜினியே சொல்லி கே.வி.ஆனந்தை ‘தல’யிடம் அனுப்பி வைத்தார் என்றும் கூறுகிறார்கள்.
(இங்கே இதே பக்கத்தில்இது பற்றி நாம் முன்பு சொல்லியும் இருந்தோம்)

எது எப்படியோ ஹரிஸின் நீண்டநாள் ஆசை தற்போது இப்படத்திற்கு இசையமைப்பதன் மூலம் நிறைவேறப் போகிறது
1,723 Views
இந்த வருட ஆரம்பத்திலேயே பொங்கல் களை கட்டியது.
பொங்கல் வெளியீடுகளான அஜித்தின் ‘வீரம்’ படமும், விஜய்யின் ‘ஜில்லா’ படமும் மோதிக் கொண்டன.

இரு படங்களுமே வசூலில் குறைவில்லாமல் ஓடியதால், ‘தல தளபதி’ கூட்டணி வரும் தீபாவளிக்கும் மோதவிருக்கின்றன.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தற்போது பரபரப்பாக நடைபெற்று வருகிறது. ‘தீரன்’ எனப் பெயரிடப்பட்டிருப்பதாக சொல்லப்படும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக முதன்முறையாக சமந்தா நடிக்கிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தை தீபவாளிக்கு வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார்கள்.

அதேபோல் கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் படமும் தீபாவளிக்கே வெளியிடப் போவதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இன்னும் படப்பிடிப்பு துவங்காத இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக அனுஷ்கா ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். இசையமைப்பாளர் யார் என்பதை சஸ்பென்ஸாக வைத்திருக்கிறார் இயக்குனர் கௌதம்.
(ஹரிஸ் ஜெயராஜ் என்று சினிமாப் பட்சிகள் கூவுகின்றன)

இந்த இரண்டு படங்களும் தீபாவளிக்கு ரிலீஸாகுமானால் தியேட்டர்களில் சரவெடிதான் என ‘தல தளபதி’ ரசிகர்கள் சந்தோஷத்தில் மிதக்கின்றனர்.
1,715 Views
ஒரு கால கட்டத்தில் , அதாவது கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் சினிமாவில் உச்சத்திலிருந்த நடிகைகளுக்கு ரொம்ப பிடித்தவராக வலம் வந்தவர் நவரச நாயகன் கார்த்திக்.

அம்பிகா, ராதா, ரேவதி முதல் அடுத்த தலைமுறையின் குஷ்பு, ரோஜா வரை கார்த்திக் என்றால் உருகி விடுவார்கள்.

இப்போது காலம் உருண்டோடி, இப்போது உள்ள இளம் நடிகைகளின் பிரியமான தோழனாக வலம் வருகின்றவர், அப்பா வழியில் தப்பாத கௌதம் கார்த்திக்.

அவரோடு கூடவே நடிக்கும் நடிகைகளை ரொம்ப நட்போடு நெருங்கிப் பழகுகிறாராம் கௌதம். ப்ரியா ஆனந்த், லட்சுமி மேனன், ராகுல் ப்ரீத் சிங், கார்த்திகா போன்ற நடிகைகளின் நேசமான நண்பன் கௌதம் என்பது நம்ம திரையுலகின் முக்கிய இளைய தலைமுறை நடிகர்களுக்கு வயிற்றில் புளியை கரைத்திருக்கிறது.

கௌதம் கார்த்திக்கை இப்படியே விட்டால், இது எங்க போய் முடியுமோ என்று கணக்குப் போட்டுள்ள நாயகர்கள், கௌதமின் இமேஜை டமேஜ் பண்ணும் முயற்சியில் இறங்கி இருக்கிறார்கள்.

உங்களை மாதிரி அலையுறேனா, அலப்பறை பண்றேனா, அறை போடுறேனா, அன்பாகத் தானேடா பழகுறேன் இதுவும் குற்றமான்னு புலம்புகிறார் கௌதம்.
1,779 Views
அடடா... தமிழ் சினிமாவில் இப்படியொரு அறிவிப்பா? பொதுவாக இந்தப் படத்தில் எனக்கு முத்தக் காட்சி ஏதாவது இருக்கிறதா என்று தான் முதல் கேள்வியை இயக்குனர்களிடம் கேட்பார்கள் நம்ம தமிழ்த் திரையில் தோன்றும் அதிகமான நடிகைகள்.

ஆனால், முத்தக் காட்சியா ..? வாங்க பழகலாம் ரேஞ்சில் ஒருவர் அறிக்கை விட்டுள்ளார்.

அவர் வேறு யாருமல்ல , ஆஹா கல்யாணம் படத்தில் நடித்திருக்கும் வாணி கபூர் தான் ஸ்டேட்மெண்டுக்கு சொந்தமானவர்.

அறிமுகமான முதல் படத்திலேயே மிக நெருக்கமான முத்தக் காட்சியில் நடிகர் நானியொடு நடித்துள்ளாராம் அம்மணி. இன்னும் இருக்கும் ஏனைய வாய்ப்புக்களை தன் வசப் படுத்தவே இந்த அம்பலமான அறிவிப்பு என்று சில குடும்ப குத்துவிளக்கு நடிகைகள் புலம்பி வருகிறார்கள்.
-ஆனாலும், அம்மணி பிழைக்கத் தெரிந்தவர் என்பது இந்த அறிவிப்பில் இருந்தே தெரிகிறது.

அம்மணியின் அம்சமான படங்களை சூரியனின் இணையத்தளத்தின் புதுப்படங்கள் பக்கத்தில் பார்த்து மோட்சம் பெறுங்கள் ரசிக சிகாமணிகளே.

Click here

6,266 Views
களவாணி படத்தில் அறிமுகமானவர் ஓவியமான ஓவியா.
ஆரம்பமான அந்தப் படத்தில் அழகான பள்ளி மாணவி வேடம் என்பதால், பாவாடை தாவணியில் தோன்றி ஒரு kudumpap பாங்கான இடத்துக்கு சொந்தக்காரர் என தன்னை அடையாளப்படுத்தி இருந்தார் ஓவியா.
ஆனாலும், அதன் பிறகு வெளியான கலகலப்பு படத்தில் அஞ்சலியோடு போட்டி போட்டு கவர்ச்சியில் கலக்கியிருந்தார்.
ரைட் .. இனி இப்பிடி நடிக்க மாட்டாங்கன்னு நெடிய பெருமூச்செறிந்த நம்ம மக்களுக்கு மீண்டும், தான் ஒரு எல்லாம் வல்ல நடிகை என்பதை நிரூபணம் செய்திருக்கிறார் அம்மணி.
சமீபத்தில் வெளியான புலிவால் படத்தில் கவர்ச்சியில் கதகளி ஆடியிருக்கும் ஓவியமானவர், இப்பொழுது எல்லா இயக்குனர்களுக்கும் ஒரு குதூகலமான செய்தியை எட்ட விட்டிருக்கிறார். இனி கதைக்கு ஏற்ற அளவுக்கு கவர்ச்சிக்கு நான் ரெடி! என்னை வைத்து படம் எடுப்பவர்களுக்கு நஷ்டம் தராத அளவுக்கு என்னால் நீங்கள் எதிர்பார்க்கும் கவர்ச்சியை வாரி வழங்க முடியும் என்று தாராளம் காட்ட தான் தயார் என்பதை அறிக்கையாய் விட்டிருக்கிறார்.

இந்த பப்ளிக்கான ஸ்டேட்மெண்டால் இனி எங்கும் ஓவியாவின் புகழும், அவருக்கான கதைகளும் ஓவியாவின் கிளுகிளு படங்களும் தான் !
5,772 Views
என்னடா ரொம்ப நல்ல பையனா எந்த சர்ச்சைகளிலும் சிக்காமல் இருக்காரே இவரு என்று, எண்ணிய எல்லோருக்கும் வயிற்றில் புளியைக் கரைத்திருக்கிறார் நடிகர் அதரவா முரளி.
அதாவது, விடயம் என்னவென்றால், அப்பா முரளி போலவே அடக்கமாகத்தான் சில காலங்கள் இருந்தார் அதர்வா. ஆனாலும் இப்போது இவர் செய்திருக்கும் அதிரடி மாற்றம் திரையுலகை கொஞ்சம் மிரள வைத்திருக்கிறது.
அப்பா முரளி காலத்திருந்தே தமக்கு மனேஜராக இருந்த சம்பத் என்பவரை , தடாலடியாக வேலையிலிருந்து நீக்கி இருக்கிறார் அதர்வா.
இப்படி இவர் மனேஜரை துணிந்து தூக்கியெறிய காரணம் என்ன என்று தேடிய பொது நம்ம காதில் கிடைத்த செய்தி , கொஞ்சம் புதுசாய் நிறைய கேள்விகளையும் தோற்றுவித்து வந்து விழுந்தது.

புதிதாக கோடம்பாக்கத்தில் காதலில் சுற்றும் ஜோடியாக கிசுகிசுக்கப்படுகின்றவர்கள் அதர்வாவும் ப்ரியா ஆனந்தும் தான். இதன் காரணமாக , இவர்களது காதல் தெரிந்தவர் தான் சம்பத்.
எனவே காதலை கண்டு பிடித்ததால், வேலையும் பறி போய் விட்டது.
இது ப்ரியா ஆனந்தின் வேலையாகவும் இருக்கலாம் என்று மனேஜரின் தரப்பில் கூறப்படுகிறது.
எது எப்படி இருந்தாலும், இது கொஞ்ச ஓவர் தான் என்று திரையுல புள்ளிகள் எரிச்சலை வார்த்தையாய் கக்கி வருகிறார்கள்.
2,076 Views
இளையராஜாவின் இளைய மகன் யுவன் மதம் மாறியது சினிமா உலகில் பல எதிர்வலைகளையும் , அதிகமான சர்ச்சைகளையும் விமர்சனங்களையும் ஏற்படுத்தி இன்னும் பேச்சு ஓயாமல் இருக்கும் நிலையில், அடுத்து இப்போது இன்னுமொரு திரையுலக பிரபல குடும்பமே மதம் மாறிய செய்தி அம்பலத்துக்கு வந்துள்ளது.

கடந்த சில வருடங்களுக்கு முன்பே சிம்பு உட்பட டி.ஆரின் குடும்ப உறுப்பினர்கள் அனைவருமே கிறிஸ்தவ மதத்துக்கு மாறி இருந்தும், விடயம் வெளியில் தெரியாமல் ரொம்ப கப்சிப்பாக பேணப்பட்டு வந்திருக்கிறது. இந்த நிலையில், அண்மையில் நடைபெற்ற சிம்புவின் தங்கை இலக்கியாவின் திருமண நிகழ்வினால் மத மாற்ற சம்பவம் வெளிக்கிளம்பியுள்ளது.

இந்த மத மாற்ற முடிவை எடுத்தவர் டி.ஆரின் மனைவி உஷா!
ஆரம்பத்தில் பிள்ளைகள் மூவருக்கும் உடன்பாடில்லா விட்டாலும் அன்னையின் வேண்டுகோளுக்கு தலை வணங்கியவர்களாக கிறிஸ்தவ மதத்தை தழுவி இருக்கிறார்கள் மொத்தக் குடும்பமும்.
அப்போது தன் மத மாற்றம் தொடர்பில் நெருக்கமான வட்டாரத்திடம் தன மனக் குமுறலை வெளிப்படுத்தி ஆதங்கப்பட்ட சிம்பு, இப்போது சந்தோசமாக காணப்படுகிறார் என்பது புதுச் செய்தி.
காரணம், நயனோடான காதல் மீண்டும் துளிர்க்கத் தொடங்கியுள்ள நிலையில், நயன்தாராவும் பிறப்பில் கிறிஸ்தவராகவும் டயானா குரியன் எனும் இயற்பெயருக்கும் சொந்தமானவராகவும் இருக்கிறார்.

இப்பொழுது உங்கள் அனைவருக்கும் புரிந்திருக்கும். சிம்பு எதற்க்காக சந்தோசத்தில் திளைத்திருக்கிறார் என்பது!
-இனி எந்த பிரச்சினையும் சிம்பு நயன் வாழ்க்கையில் வராமல் இருந்தால் சரி-
34,302 Views
[1]      «      1785   |   1786   |   1787      »      [1788]




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top