எத்தனையோ பிரபலமான அழகான நடிகர்களோடு ஜோடி சேர்ந்திருந்தாலும் , உலக நாயகன் கமலோடு மட்டும் இணைந்து நடிக்க மாட்டேனென்று அந்தக் காலம் தொட்டு இன்று வரை பிடிவாதமாய் மறுத்து வந்தவர் இன்றும் இளமை மாறா அழகோடு வலம் வரும் நடிகை நதியா.
இந்த நிலையில், இதுவரை டூயட் பாடாத இவர்கள் இருவரும் த்ரிஷ்யம் தமிழ் ரீமேக்கில் நடிக்க உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.
இந்தப்படத்தின் மலையாள தயாரிப்பில் மோகன்லால் ஜோடியாக மீனா நடித்திருந்தார். அதன் தெலுங்குப் பதிப்பிலும் மீனாதான் நடிக்கிறார். ஹீரோவாக வெங்கடேஷ் நடிக்க ஸ்ரீப்ப்ரியா படத்தினை இயக்குகிறார்.
விஷயம் இவ்வாறு இருக்கும் நிலையில், இதுவரை இணையாமல் இரு துருவங்களாக இருந்த கமலையும் நதியாவையும் இணைத்து இந்த த்ரிஷ்யத்தின் தமிழ் தயாரிப்பில் நடிக்க வைக்கலாம் என ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றது.
இருவரிடமும் பேச்சு வார்த்தை நடை பெற்று வருகின்ற நிலையில், உலக நாயகன் சம்மதித்தாலும் , நதியா சம்மதித்து இணைந்து நடிக்க ஒத்துக் கொள்வாரா என பொறுத்திருந்து பார்ப்போம். ஜோடி இணைந்தால் இரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான்
7,277 Views
வீரம் வெற்றிக்குப் பிறகு அஜித்தின் அடுத்த படம் கவுதம் மேனன் இயக்கத்தில் நடிக்கிறார், இது பழைய செய்தி.
படத்தின் பெயர் இன்னும் வைக்கப்படவில்லை. அல்லது வைக்கப்பட்டும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.
இதன் ஷூட்டிங் மார்ச் மாதம் தொடங்குகிறது.
தற்போது சிம்புவை வைத்து குறுகியகால தயாரிப்பாக ஒரு படத்தை இயக்கிக் கொண்டிருக்கும் கவுதம் மேனன் அதை முடித்து விட்டு அஜீத் படத்தை டைரக்ட் செய்ய இருக்கிறார்.
இந்தப் படத்தில் அஜீத்துடன், சிம்புவும் நடிப்பது உறுதியாகி இருக்கிறது. தலயின் தீவிர ரசிகரான சிம்புவை அஜீத்துக்கும் ரொம்பவும் பிடிக்கும்.
சமீபத்தில்கூட தி.மு.கவில் டி.ராஜேந்தர் சேர்ந்த செய்தி கேள்விப்பட்டு சிம்புவுடன் பேசிய அஜீத். உங்க படத்துக்கு பொலிட்டிக்கல் பிரஷர் எதுவும் வராம கவனமா பார்த்துக்குங்கன்னு அறிவுரை வழங்கினாராம்.
இப்போது ஆரம்பத்தில் ஆர்யா, வீரத்தில் விதார்த்துக்கு வாய்ப்பு கொடுத்ததைப்போல அடுத்த படத்தில் சிம்புவுக்கு கொடுக்கப் போகிறார்.
அவருக்கும் படத்தில் ஒரு முக்கியமான, அழுத்தமான பாத்திரத்தை உருவாக்குமாறு கவுதம் மேனனுக்கு உத்தரவிட்டிருக்கிறார். சிம்புவின் நண்பரான கவுதம் மேனனும் இன்னும் ஒரு மடங்கு உற்சாகத்தோடு களத்தில் இறங்கிவிட்டார்
6,327 Views
விஜய் அஜித் மோதிக்கொள்கிறார்களோ இல்லை, இவர்களது ரசிகர்கள் அடுத்த சூப்பர் ஸ்டார் பட்டத்துக்காக மோதிக்கொள்வது வழமையே.
போதாக்குறைக்கு சிம்புவும் இன்னும் சில நண்டு சுண்டுகளும் சின்ன, லிட்டில் ஸ்டார்களாக அடிக்கடி கிளம்பிக்கொள்வார்கள்.
இந்த தள்ளுமுள்ளு காரணமாகத்தான், ரஜினி, கமலுக்கு அடுத்தபடியாக முன்னணியில் இருக்கும் அஜீத்,விஜய் ரசிகர்களுக்கிடையே அடிக்கடி மோதலும் வெடித்துக்கொண்டிருக்கிறது.
அதனால், விஜய் படம் சம்பந்தப்பட்ட விழாக்களில், அவரது அபிமானிகள் அவரை அடுத்த சூப்பர் ஸ்டார் என்று சொல்வது போன்று, அஜீத் வட்டாரத்திலும் அவரை அடுத்த சூப்பர் ஸ்டார் என்கிறார்கள். ஆனால் ரஜினி ரசிகர்களோ, எங்கள் தலைவர் ஒருவரே சூப்பர் ஸ்டார் என்று அவர்கள் ஒரு பக்கம் கொடிபிடித்துக்கொண்டிருக்கிறார்கள்.
இந்த பரபரப்பான சூழ்நிலையில்தான், சூர்யா நடிக்கும் அஞ்சான் படத்தை தயாரிப்பவர்கள் 'செளத் சூப்பர் ஸ்டார்' என்று சூர்யாவுக்கு பட்டம் சூட்டியிருக்கிறார்களாம். இதனால் ஏற்கெனவே தள்ளுமுள்ளுவில் இருக்கும் அத்தனை பேரும் இதென்ன புது கலாட்டாவாக இருக்கு என்று அஞ்சானை ஆத்திரத்தோடு பார்த்துக்கொண்டு நிற்கிறார்கள்.
இதற்கிடையே, சின்ன வயதில் நடித்தபோது லிட்டில் சூப்பர் ஸ்டார். பின்னர் இளைஞனானபோது யங் சூப்பர் ஸ்டார் என்று தனக்குததானே பட்டம் சூட்டிக்கொண்டு வரும் சிம்பு, அப்படின்னா நான் என்ன ஸ்டாரு என்று கேட்டுக்கெண்டு நிற்கிறாராம்.
ஆக, கோடம்பாக்கத்தில் சூப்பர் ஸ்டார் இன்னும் நடித்துக்கொண்டிருக்கையிலேயே சூப்பர் ஸ்டார் பட்டத்தை முன்வைத்து ஒரு களோபரமே நடந்து கொண்டிருக்கிறது
6,105 Views
தனுஷ், தற்போது வேலையில்லா பட்டதாரி, அனேகன், ஆகிய படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இதில் தனுஷிற்கு ஜோடியாக வேலையில்லா பட்டதாரி படத்தில் அமலா பாலும், அனேகன் படத்தில் அமிராவும் நடிக்கின்றனர். இவ்விரு படங்களுக்குப் பிறகு தனுஷின் அடுத்தப் படத்தினை வெற்றி மாறன் இயக்குகிறார்.
Cloud Nine மூவிஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் தனுஷிற்கு ஜோடியாக அலியா பட் நடிக்கவிருக்கிறார். கே.வி.ஆனந்த் இயக்கும் ‘அனேகன்’ படத்திலேயே தனுஷுக்கு ஜோடியாக அலியா பட் நடிக்கவேண்டியது. ஆனால் அந்த நேரத்தில் கால்ஷீட் பிரச்சனையால் அந்த வாய்ப்பு கைநழுவிப்போனது.
இந்தியில் கரண் ஜோஹர் இயக்கத்தில் 2012-ல் வெளிவந்து ஹிட்டான ‘ஸ்டூடன்ட் ஆஃப் த இயர்’ பாலிவுட் படத்தில் கதாநாயகியாக நடித்தவர்தான் அலியா பட். தன் முதல் படத்திலேயே அழகினாலும் கவர்ச்சியாலும் பாலிவுட் ரசிகர்களை மெய் மறக்கச் செய்தவர், தற்போது தமிழ் ரசிகர்களின் நெஞ்சத்திலும் குடியிருக்க வருகிறார்.
6,090 Views
2012ம்ஆண்டு விஜய் நடிப்பில் மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் துப்பாக்கி. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய இந்தப் படம் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.
ஜில்லா வந்து சராசரியான வரவேற்பு + வசூல் பெற்ற இந்நிலையில் விஜய்க்கு வெற்றிப்படம் தேவையான நிலையில், விஜய்-முருகதாஸ் கூட்டணி மீண்டும் ஒரு புதிய படத்தில் இணைய உள்ளது.
துப்பாக்கி படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதால் இந்தப் படத்திற்கு துப்பாக்கி 2 என்கிற தலைப்பு வைக்கப்படலாம் என கூறப்பட்டது. எனவே, படத்தின் தலைப்பு குறித்து ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பு இருந்து வந்தது. இந்நிலையில் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு வாள் என்று தகவல் வெளியாகி பரபரப்பை கிளப்பி வருகிறது.
இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார் என்ற தகவல் முதலிலேயே வெளியாகி இருந்தது.
விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. முதலில் இந்தப் படத்தில் நடிப்பதற்கு தீபிகா படுகோனிடம் தேதி கேட்கப்பட்டதாம். ஆனால் தற்போது அவர் மிகவும் பரபரப்பாக இருப்பதால் சமந்தாவை தேர்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
முருகதாசோ விஜய்யோ இன்னும் பகிரங்கமாக இதுபற்றி எதுவும் அறிவிக்கவில்லை.
1,937 Views
வீரம் படத்தின் மாபெரும் வெற்றியை அடுத்து அஜீத் குமார், இயக்குனர் சிவா மீண்டும் சேர்ந்து பணியாற்றவிருக்கிறார்கள்.
இயக்குனர் சிவா தமிழில் இரண்டு படங்கள் தான் எடுத்துள்ளார். ஆனால் இரண்டு படங்களுமே ஹிட்.
சிவா எடுத்த முதல் தமிழ் படமான சிறுத்தை ஹிட்டானது. அதையடுத்து அவர் அஜீத் குமாரை வைத்து வீரம் படத்தை எடுத்து பொங்கல் பண்டிகையையொட்டி ரிலீஸ் செய்தார். இந்த படமும் மெகா ஹிட்டாகியுள்ளது.
வீரம் படத்தை அடுத்து அஜீத், கௌதம் மேனன் இயக்கத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்குகிறது.
இந்நிலையில் கௌதம் மேனன் படத்தை முடித்த பிறகு அஜீத்தும், இயக்குனர் சிவாவும் மீண்டும் சேர்ந்து பணியாற்றுகிறார்களாம்.
ஏற்கனவே வீரம் படத்தை ரீமேக் செய்ய சிவாவுக்கு ஹிந்தி, தெலுங்கு இன்னும் பல வாய்ப்புகள் வந்து குவிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
2,807 Views
‘உத்தம வில்லன்’ படத்தில் உலகநாயகன் கமலஹாசனும், அவரது குருநாதர் இயக்குனர் கே.பாலசந்தரும் இணைந்து நடிக்கிறார்கள். இந்த தகவலை கமலஹாசனே வெளியிட்டுள்ளார்.
கே.பாலசந்தர் இயக்கத்தில் அறிமுகமான கமல் அரங்கேற்றம், அபூர்வ ராகங்கள், மன்மத லீலை, மூன்று முடிச்சு, நினைத்தாலே இனிக்கும் உள்பட ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.
இயக்குனர் பாலசந்தர் சமீபத்தில் ‘ரெட்டை சுழி’ என்ற படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்தார். ‘பொய்’ என்ற படத்திலும் கவுரவ தோற்றத்தில் வந்தார். இப்போது கமலுடன் நடிக்க இருக்கிறார்.
கமல் நடிக்கும் ‘விஸ்வரூபம் 2’ படம் முடிவடைந்துள்ளது. இப்படம் ரிலீசானதும் ‘உத்தம வில்லன்’ படப்பிடிப்பு துவங்குகிறது.
இது குறித்து கமலஹாசன் கூறும் போது, ‘நான் நடிக்க உள்ள அடுத்த படம் உத்தம வில்லன். ரமேஷ் அரவிந்த் இப்படத்தை இயக்குகிறார். இதில் கே.பாலசந்தரும் என்னுடன் இணைந்து நடிக்கிறார். இதற்காக அவர் தாடி வளர்த்து வருகிறார். ‘விஸ்வரூபம் 2’ படம் ரிலீசானதும் உத்தம வில்லன் படப்பிடிப்பு துவங்கும்’ என்றார்.
2,044 Views
'கொலைவெறி' இசையமைப்பாளர் அனிருத் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.
உடனடியாக இவர் அண்மையில் வெளியிட்ட ஆங்கில 4 கெட்டவார்த்தை அடங்கிய பாடல் முன்னோட்டத்துக்காக என்று நினைத்திடாதீங்க.
‘3’ படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிய அனிருத் எதிர்நீச்சல், வணக்கம் சென்னை படங்களுக்கும் இசையமைத்துள்ளார்.
தற்போது வாயை மூடி பேசவும் படத்துக்கு இசையமைக்க ஒப்புக் கொண்டு அட்வான்ஸ் வாங்கி விட்டு பிறகு இசையமைக்க மறுத்து விட்டதாக அப்படத்தின் தயாரிப்பாளர் வருண்மணியன் குற்றம் சாட்டி உள்ளார். அவர் தயாரிப்பாளர் சங்கத்தில் அளித்த புகார் மனுவில் கூறி இருப்பதாவது:–
வாயை மூடி பேசவும் படத்துக்கு அனிருத்தை இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்தோம். இதற்காக அவருக்கு ரூ.5 லட்சம் அட்வான்ஸ் வழங்கப்பட்டது. ஆனால் ஒப்புக் கொண்டபடி படத்துக்கு அவர் இசையமைக்கவில்லை. இதனால் அனிருத்துக்கு பதில் ஷான் ராகவேந்திரா இசையமைத்தார்.
எங்களிடம் வாங்கிய அட்வான்ஸ் பணத்தையும் அனிருத் திருப்பி தரவில்லை. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தயாரிப்பாளர் சங்கம் அனிருத்துக்கு அனுப்பியுள்ள கடிதத்துக்கு இதுவரை பதில் இல்லையாம்.
1,747 Views
13 வருட திருமண வாழ்க்கைக்குப் பிறகு ஹ்ரித்திக் ரோஷன்-சுசான் தம்பதி விவாகரத்துப் பெறுவதாக அறிவித்துள்ளார்கள்.
ஹிந்தி முன்னணி நடிகர் ஹ்ரித்திக் ரோஷனுக்கும் பழம்பெரும் ஹிந்தி நடிகர் சஞ்சய் கான் மகள் சுசானுக்கும் கடந்த 2000மாவது ஆண்டில் திருமணம் நடந்தது.
ஹிந்தி திரையுலகமே போற்றும் அளவுக்கு கருத்தொற்றுமை மிக்க கணவன் மனைவியாக இவர்கள் வாழ்ந்தார்கள். இல்லற வாழ்வின் பயனாக ஹீரே,ஹிருதான் என்ற இரு மகன்களை பெற்றெடுத்தார்கள். அவர்களுக்கு இப்போது முறையே 7 மற்றும் 5 வயதாகிறது.
இந்த நிலையில் கணவன் மனைவி இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கிறார்கள் என்ற செய்தி கசிய ஆரம்பித்தது. இதை உறுதிப்படுத்தவது போல எப்போதும் எந்த விழாவாக இருந்தாலும் இணைந்தே வலம் வரும் இந்த தம்பதிகள் தனித்தனியாக வர ஆரம்பித்தார்கள், சுசான் பொது விழாக்களில் பங்கேற்பதை தவிர்த்து வந்தார்.
இரண்டு மாதங்களுக்கு முன்பு
ஹ்ரித்திக் ரோஷனின் தந்தை ராகேஷ் ரோஷனின் 64வது பிறந்த நாளுக்கு தாமதமாக வந்த சுசானே, வந்த சிறிது நேரத்திலேயே கிளம்பி விட்டார். இந்த சம்பவம் இருவரும் பிரிந்து வாழ்வதை உறுதி செய்தது. அதன் பிறகு கிரிஷ் 3 படத்தின் எந்த நிகழ்ச்சியிலும் சுசான் கலந்து கொள்ளவில்லை.
இது தொடர்பாக ஒரு நேர்காணலில் பேசிய ஹ்ரித்திக் ரோஷன் “எங்களது 17 ஆண்டுகால உறவுமுறை முடிவுக்கு வந்துவிட்டது. என்னைவிட்டு பிரிய சுசான் முடிவு செய்துவிட்டார். அவரின் முடிவு எங்கள் குடும்பத்தை வருத்ததில் ஆழ்த்திவிட்டது” என்று கூறினார்.
ஆனால் இதனை சுசானேவின் தந்தை சஞ்சய்கான் மறுத்துள்ளார். “எல்லா குடும்பத்திலும் இருப்பதை போல அவர்கள் இருவருக்கும் சிற்சில விஷயங்களில் கருத்து வேறுபாடு இருப்பது உண்மைதான். இருவரும் பிரிய முடிவு செய்யவில்லை. அவர்கள் நன்கு படித்தவர்கள் நல்ல முடிவையே எடுப்பார்கள்” என்று தெரிவித்துள்ளார்.
ஏனைய ஹிந்தி நட்சத்திரங்களின் விவாகரத்துக்களைப் போல இந்த விவாகரத்துக்கு வேறு நடிக,நடிகையர் காரணமில்லை என்பது ஆறுதலான விஷயமே.
1,681 Views
பாரதிராஜாவின் அறிமுகமாக இருந்தும் கொஞ்சம் லேட்டாகவே பிக் அப் ஆனா காஜல் இப்போது உச்சத்துக்கு ஏற ஆரம்பித்துள்ளார்.
துறுதுறு கண்களும் அழகான உடல்வாகுமாக காஜல் அகர்வாலுக்கு தொடர்ச்சியாகப் படங்கள்.
நடிகர் விஜய், நடிகர் மோகன்லாலுடன் இணைந்து தான் நடித்து பொங்கலுக்கு வெளிவந்துள்ள ‘ஜில்லா’ படம் வென்றதோ இல்லையோ காஜல் அகர்வாலை பாராட்டுக்கள் சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது.
இளைய தளபதி விஜயுடன் தான் நடித்த ‘துப்பாக்கி’க்கு அடுத்து வந்த இந்தப் படமும் ரசிகர்களின் குறிப்பாக விஜய் ரசிகர்களின் பாராட்டுதல்களைப் பெற்றுள்ளது குறித்து காஜல் தனது மகிழ்ச்சியைத் தெரிவித்தார். இந்தப் படத்தில் இரு வேறு பெரிய நடிகர்களுடன் நடித்தது தனக்கு ஒரு சிறந்த அனுபவமாக இருந்தது என்றும் அவர் குறிப்பிட்டார்.
நல்ல கதையம்சம் கொண்டிருந்த இந்தப் படத்தின் தயாரிப்புக் குழுவினரும் கடின உழைப்பை வெளிப்படுத்தினார்கள். இவர்களுடன் பணி புரிந்தது தனக்கு ஒரு நல்ல அனுபவத்தைத் தந்தது என்றும் காஜல் அகர்வால் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து தமிழில் பாலாஜி மோகன் இயக்கத்தில் நடிகர் தனுஷுடன் ஒரு படத்திலும், தெலுங்குப் படம் ஒன்றிலும் ஒப்பந்தமாகியுள்ளதாக அவர் கூறினார். ‘பொல்லாதவன்’ படத்தில் தனுஷுடன் இணையும் வாய்ப்பு கை நழுவிப் போனபின் இப்போது அதற்கான வாய்ப்பு கூடிவந்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். அது மட்டுமின்றி இந்திப் படம் ஒன்றிலும் ஒப்பந்தமாகி உள்ளதாகத் தெரிவித்த காஜல், இப்படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு பிப்ரவரி அல்லது மார்ச்சில் தொடங்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறினார்.
1,779 Views
இப்போ எல்லாம் நாங்க எடுக்கிற படங்கள் நல்லா பிச்சுக்கொண்டு ஓடனும் என்றால், நாமாக தான் விளம்பரத்தை உருவாக்கணும். அந்தக் காலம் போல பணத்தைக் கொட்டி விளம்பரப் படுத்துவதில் எந்த இலாபமும் இல்லை அதுக்கு நான் ஒரு புது வழி வைச்சிருக்கேன்'' என்று , புலிவால் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அந்த திரைப்பட இயக்குனர் பேசியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.
இந்த பரபரப்பு இரசிகர்களுக்கு ஏற்பட்டதோ இல்லையோ, புலிவால் படத்தில் கதாநாயகியாக நடித்த ஓவியாவுக்கு அவமானமும் கோபமும் ஏற்பட்டிருக்கிறது. உடனடியாக மேடையை விட்டு கீழிறங்கி காணாமல் போய் விட்டார்.
என்ன காரணத்துக்காக இந்த கோபமும் பரபரப்பும் என்றால், இயக்குனர் பேசிய புதுவகையான பப்ளிசிட்டி முறையால் தான் என்று அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் கூறுகின்றன. அவர் என்ன சொல்லிருக்கிறார் என்றால், ''நையாண்டி படத்தில் நஸ்ரியாவால் வந்த விளம்பரத்தைப் போல என்னுடைய புலிவால் படத்தில் ஓவியாவுக்கு தெரிந்தோ தெரியாமலோ அவரை பற்றி ஏதாவது காரசாரமான செய்தியையும் புகைப்படத்தியும் கசிய விட்டால் படத்தின் மேல் இரசிகர்களுக்கு இன்னும் பலத்த எதிர்பார்ப்பும் , வரவேற்பும் அதிகரிக்கும் என்று கூற, என்னை வைத்து வியாபாரமா ? அதுவும் என் மானத்தை விற்று .. என்று ஓவியாவுக்கு ஆத்திரம் மேலிட, சொல்லிக் கொள்ளாமலே கிளம்பி விட்டார் ஓவியா!
-என்னமா விளம்பரம் பண்றாங்க யம்மா-
1,743 Views
இது இரண்டாம் பாக சீசன் போல...
பில்லா -2, அமைதிப்படை-2, சிங்கம்-2 (பாகம் 3உம் வருமோ?) ஆகிய படங்களைத் தொடர்ந்து இப்போது விஸ்வரூபம்-2, ஜெய்ஹிந்த்-2 ஆகிய படங்கள் வளர்ந்து கொண்டிருக்கின்றன.
இந்த நிலையில், 18 ஆண்டுகளுக்கு முன்பு ரஜினி நடித்த பாட்ஷா படத்தின் இரண்டாம் பாகத்தையும் சுரேஷ் கிருஷ்ணா இயக்கப்போவதாக செய்திகள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன.
அப்படம் சம்பந்தமாக, கதை தயார் செய்துவிட்ட அவர், ரஜினியை ஏற்கனவே சந்தித்ததாகவும், இப்போதைக்கு வேண்டாம் என்று அவர் சொன்னதாகவும் கூறப்பட்டது. ஆனால், தற்போது கமல்,அஜித், சத்யராஜ், சூர்யா,அர்ஜூன் போன்ற நடிகர்களெல்லாம் ஏற்கனவே ஹிட்டான படங்களின் இரண்டாம் பாகத்தில் நடிப்பதால் ரஜினியும் நடிப்பார் என்ற நம்பிக்கையில், கோச்சடையானை அடுத்து ரஜினியை சந்தித்து பாட்ஷா-2 கதையை சொல்ல முடிவெடுத்திருந்தாராம் சுரேஷ்கிருஷ்ணா.
ஆனால், இந்த செய்தி ரஜினியின் காதுகளை எட்டியபோது, பாட்ஷா-2வில் நடிக்க தனக்கு விருப்பம் இல்லை என்று தெரிவித்து விட்டாராம். 18 ஆண்டுகளுக்கு முந்தைய படத்தில் அதே வேகத்துடன் இப்போது நடிக்க முடியாது. அதோடு, இப்போதைய தன் உடல் நிலையம் மாறி விட்டது. அதனால் இனி அந்த படத்தின் தொடர்ச்சியில் நடிப்பது சாத்தியப்படாது என்று கூறி விட்டாராம். அதனால், பாட்ஷா-2 முயற்சியை விட்டு விட்டாராம் சுரேஷ்கிருஷ்ணா.
2,138 Views
நய்யாண்டி தொப்புள் விவகாரத்துக்குப்பிறகு நஸ்ரியாவின் மார்க்கெட் வீழ்ச்சி கண்டாலும் தட்டுத்தடுமாறி எழுந்து நிற்கிறார். காரணம் மலையாளப் பக்கம் அவருக்கு இருக்கும் வரவேற்பு.
இதனால் தங்களது படங்களை தமிழ், மலையாளம் என இரண்டு மொழிகளிலும் வெளியிட வேண்டும் என்று நினைக்கும் டைரக்டர்கள் சிலர் அவரையே ஒப்பந்தம் செய்துள்ளனர்.
அதனால் நய்யாண்டிக்கு பிறகு தனது மார்க்கெட் சரிந்து விட்டதாக சொல்லப்படும் கருத்து தவறு என்று கூறும் நஸ்ரியா, தான் எப்போதும் போலவே இப்போதும் பிசியாகத்தான் இருப்பதாகவும். தன்னை எந்த இயக்குனர்களும் நிராகரிக்கவில்லை என்றும் கூறி வருகிறார். அதோடு, ஏற்கனவே தனுஷ், ஆர்யா, ஜெய் போன்ற நடிகர்களுடன் நடித்து விட்டவர் கூடிய சீக்கிரமே விஜய், அஜீத், சூர்யா என்று ஜோடி சேரக்கூடிய நேரமும் வந்துகொண்டிருக்கிறது என்கிறார்.
குறிப்பாக, தனது அபிமான ஹீரோவான அஜீத்துடன் நடிக்க வேண்டும் என்பது நீண்டநாள் கனவு. அதனால் கைவசம் இருக்கும் படங்களுக்குப்பிறகு அவருடன் நடிப்பேன் என்று நினைக்கிறேன் என்று சொல்லும் நஸ்ரியா, யாரையும் தேடிச்சென்று மட்டும் சான்ஸ் கேட்க மாட்டாராம். அப்படி தானாக இறங்கி சென்றால் அவர்கள் கிளாமராக நடிக்க சொல்வார்கள். ஆனால் அவர்களே என்னைத்தேடி வந்தால் நான் சொல்ற மாதிரி கேட்பார்கள், என் பேச்சுக்கும் மரியாதை இருக்கும் என்கிறார் நஸ்ரியா.
நல்லா பேசுது மலையாள சேச்சி.
அடுத்த படம் 'திருமணம் எனும் நிக்கா' வெளிவந்த பிறகு தான் தெரியும் கதை.
1,811 Views
முன்னதாக தலைவா படத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் மூலம் தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டதால், மீண்டும் அதே நிலை தனது படங்களுக்கு வரக்கூடாது என்று உஷாராக செயல்பட்டு வருகிறார் விஜய்.
குறிப்பாக, ஆர்.பி.செளத்ரியின் தயாரிப்பில் நடித்துள்ள ஜில்லா படத்தில் எந்தவொரு பஞ்ச் வசனமும் இல்லாமல், கதைக்கு தேவையான வசனங்களை மட்டுமே பேசி நடித்துள்ளார்.
அப்படி பேசி நடித்துள்ள வசனமும் யாரையாவது மறைமுகமாக தாக்குவது போல் தெரிந்தால், அந்த வசனத்தையும் மாற்றி பேசி நடித்திருக்கிறார். அதனால், ஜில்லாவுக்கு எந்த ரூபத்திலும் தடைகள் ஏற்படாது என்பதுதான் அனைவரது எண்ணமாக இருந்து கொண்டிருக்கிறது.
பொங்கலுக்கு படம் திரைக்கு வருவது உறுதியாகி விட்டதால், ஜில்லா படத்தின் bannerகள் தமிழகத்தில் ஆங்காங்கே வைக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், சில தினங்களுக்கு முன்பு சென்னை நகரத்திலுள்ள சில ஏரியாக்களில் ஜில்லா விஜய்யின் ராட்சத கட்அவுட் மற்றும் பேனர்களை வைக்க அவரது ரசிகர்கள் மன்றத்தினர் ஈடுபட்டபோது, அந்த வழியாக வந்த காவல்துறையினர் தடை விதித்து விட்டார்களாம்.
அதனால் bannerகளை எடுத்துக்கொண்டு ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றார்களாம் விஜய் ரசிகர்கள். இதன்காரணமாக, ஒருவேளை இதுவும் தமிழக அரச 'அம்மா'வின் உத்தரவாக இருக்குமோ என்று விஜய் தரப்பு அதிர்ச்சியடைந்துள்ளதாம்.
படத்தை தயாரித்தவர்களோ, படம் திரைக்கு வரும் நேரத்தில் இன்னும் என்னென்ன ரூபத்தில் பிரச்னைகள் வரப்போகிறதோ என்று கலவரமடைந்திருக்கிறார்களாம்.
2,015 Views
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன்னிடம் கதை சொல்லும் இயக்குனர்கள் அனைவரையும் தனது ராகவேந்திரா கல்யாண மண்டபத்துக்கு வரவைத்து மணிக்கணக்கில் அலுக்காமல் சளைக்காமல் கதை கேட்பாராம். அதையடுத்து, அதில் ஒன்றை தேர்வு செய்து விட்டு, மற்ற இயக்குனர்களிடம் இன்னொரு முறை நாம் சேர்ந்து படம் பண்ணுவோம் என்று நோகாமல் நாசூக்காக சொல்லி விடுவார்.
அதேபோல்தான், சூப்பர் ஸ்டார் சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்று பூரண குணமடைந்து விட்டு சென்னை திரும்பியபோதும், சில இயக்குனர்கள் அவரை நோக்கி படையெடுத்தனர். அப்படி சென்றவர்களில் கே.வி.ஆனந்த் சொன்ன கதையையும் கேட்டார் ரஜினி. ஆனால், இன்று வரை அந்த கதை பற்றி எதுவுமே சொல்லவில்லையாம்.
பல மாதங்களாக நம்பிக்கையோடு காத்திருந்த அவர், பின்னர் ரஜினியிடமிருந்து க்ரீன் சிக்னல் விழும் என்ற நம்பிக்கையை இழந்து விட்டார். அதையடுத்து அவரது மருமகன் தனுஷை வைத்து அநேகன் என்ற படத்தை தொடங்கி விட்டார்.
இந்த நிலையில், சூப்பர் ஸ்டார்க்காக உருவாக்கிய கதைக்கு வேறு எந்த நடிகர் பொருத்தமாக இருப்பார் என்று பலரோடும் ஆராய்ந்த கே.வி.ஆனந்த், இப்போது அந்த கதையை அஜீத்தை சந்தித்து கூறியுள்ளதாக ஒரு தகவல் வெளி வந்துள்ளது.
வருகிற பிப்ரவரியில் கெளதம்மேனன் இயக்கும் படத்தில் நடிக்கும் அஜீத், அதை முடித்ததும் நடித்துத்தருவதாக கே.வி.ஆனந்திடம் கூறியிருப்பதாகவும் சொல்கிறார்கள்.
மீண்டும் அடுத்த சூப்பர் ஸ்டார் தல என்று கிளம்புமோ கதை?
9,311 Views