இப்போ எல்லாம் நாங்க எடுக்கிற படங்கள் நல்லா பிச்சுக்கொண்டு ஓடனும் என்றால், நாமாக தான் விளம்பரத்தை உருவாக்கணும். அந்தக் காலம் போல பணத்தைக் கொட்டி விளம்பரப் படுத்துவதில் எந்த இலாபமும் இல்லை அதுக்கு நான் ஒரு புது வழி வைச்சிருக்கேன்'' என்று , புலிவால் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அந்த திரைப்பட இயக்குனர் பேசியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.
இந்த பரபரப்பு இரசிகர்களுக்கு ஏற்பட்டதோ இல்லையோ, புலிவால் படத்தில் கதாநாயகியாக நடித்த ஓவியாவுக்கு அவமானமும் கோபமும் ஏற்பட்டிருக்கிறது. உடனடியாக மேடையை விட்டு கீழிறங்கி காணாமல் போய் விட்டார்.
என்ன காரணத்துக்காக இந்த கோபமும் பரபரப்பும் என்றால், இயக்குனர் பேசிய புதுவகையான பப்ளிசிட்டி முறையால் தான் என்று அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் கூறுகின்றன. அவர் என்ன சொல்லிருக்கிறார் என்றால், ''நையாண்டி படத்தில் நஸ்ரியாவால் வந்த விளம்பரத்தைப் போல என்னுடைய புலிவால் படத்தில் ஓவியாவுக்கு தெரிந்தோ தெரியாமலோ அவரை பற்றி ஏதாவது காரசாரமான செய்தியையும் புகைப்படத்தியும் கசிய விட்டால் படத்தின் மேல் இரசிகர்களுக்கு இன்னும் பலத்த எதிர்பார்ப்பும் , வரவேற்பும் அதிகரிக்கும் என்று கூற, என்னை வைத்து வியாபாரமா ? அதுவும் என் மானத்தை விற்று .. என்று ஓவியாவுக்கு ஆத்திரம் மேலிட, சொல்லிக் கொள்ளாமலே கிளம்பி விட்டார் ஓவியா!
-என்னமா விளம்பரம் பண்றாங்க யம்மா-