ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பங்குபற்றிய நிகழ்வொன்றில் துப்பாக்கியுடன் சென்ற நாமல் ராஜபக்ஸவின் மெய்ப்பாதுகாவலர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அவரை எதிர்வரும் 12ம் திகதி வரையில் விளக்கமறியல் வைக்கும்படி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இவ்வாறு துப்பாக்கியுடன் கூட்டத்தில் பங்கேற்ற இராணுவ கோப்ரல் கொமாண்டோ படைப் பிரிவைச் சேர்ந்த சேனக குமார எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இச்சம்பவம் தொடர்பில் பொலிஸ் மா அதிபரின் உத்தரவுக்கமைய குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நடத்திய விசாரணைகளின் அடிப்படையில் குறித்த இராணுவ கோப்ரல் கைதுசெய்யப்பட்டார்.
கடந்த 2 ஆம் திகதி கைதுசெய்யப்பட்ட அவர் அன்றைய தினமே அங்குனகொல பெலஸ்ச நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.