7,634 Views
கனடாவின் , கிழக்கு வன்கூவரிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ரெண்டி ஜேன்சன் என்ற அந் நபர் தனது கொலைகள் தொடர்பாக பேஸ்புக்கில் பதிவொன்றையும் இட்டுள்ளார்.
அதில், எமிலி ஜேன்சன் என்ற 19 வயதான தனது மகள் ஒற்றைத் தலைவலியால் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்த தாகவும் , இது அவரது வாழ்க்கையில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியிருந்த தாகவும் தெரிவித்துள்ளார். இதனால் அவரை கொலைசெய்த தாகவும், பின்னர் மகள் இறந்த செய்தியை தாயொருவர் தெரிந்து கொள்ளக் கூடாது எனவே அவரது மனைவியையும் கொன்றாதாக தனது பேஸ்புக் நிலைத்தகவலில் குறிப்பிட்டுள்ளார். மேலும் சில தின ங்களின் பின்னர் தனது சகோதரியைக் கொன்றதாகவும், தன்னால் இப்படியொரு சம்பவம் இடம்பெற்று விட்ட து என்ற வெட்கத்தில் அவர் வாழக்கூடாது என்ற காரணத்தினாலேயே அவரையும் கொன்றதாக ரெண்டி ஜேன்சன் தனது நிலைத்தகவலில் மேலும் தெரிவித்துள்ளார்.
மேற்படி நிலைத்தகவல் தொடர்பாக பொலிஸிக்கு தெரியவந்து அவர்கள் ரெண்டி ஜேன்சனை கைதுசெய்ய வரும் முன்னர் அவர் தனக்கு தானே தீ மூட்டி தற்கொலைசெய்துகொண்டுள்ளார்.

இச்சம்பவம் அங்கு பரபரப்பையும் , சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ரெண்டி ஜேன்சன் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவரது உறவினர்கள் அவர் மிகவும் நல்ல மனிதன் எனவும் மகளின் தலைவலிப் பிரச்சினையால் பல காலமாக சோகத்தில் இருந்த தாகவும் தெரிவித்துள்ளனர்.