5,157 Views
கடந்த 12 ஆம் திகதி நண்பகல் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஒரு வயதான கவீசா என்ற குழந்தையை முதலில் கிணற்றில் போட்டுள்ள தாய் , பின்னர் 8 வயதான சுதர்சான என்ற பிள்ளையுடன் கிணற்றில் பாய்ந்துள்ளனர்.
எனினும் பின்னர் கிணற்றின் கைற்றைப் பிடித்தவாறு அதனுள் இருந்து கூச்சலிட்டுள்ளார். இதனையடுத்து அயலவர்கள் 8 வயதான குழந்தையையும் , தாயையும் காப்பாற்றியுள்ளனர்.
எனினும் 1 வயதான குழந்தை உயிரழந்து விட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
அப்பெண்ணின் கணவர் விமானப் படை வீரர் என்பதுடன் அவரது கையடக்கத்தொலைபேசிக்கு அடிக்கடி வேறொரு பெண்ணிடம் இருந்து அழைப்பு வந்துள்ளது.
இதன் காரணமாகவே அப்பெண் தற்கொலைக்கு முயன்றதாக தெரிவிக்கப்படுகின்றது.