அண்மையில் மேடை நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்கும் போது இடம்பெற்ற அசம்பாவிதமே இது.. நடிகை பத்மப்பிரியா இயக்குனர் சேரனுடன் 'தவமாய் தவமிருந்து' திரைப்படத்தில் நடித்தவர், அதை தொடர்ந்து 'பட்டியல்' , 'சத்தம் போடாதே', 'மிருகம்', 'பொக்கிஷம்', 'இரும்புக்கோட்டை முரட்டுசிங்கம்' , 'தங்கமீன்கள்' போன்ற படங்களில் நடித்திருந்தார்.
அண்மையில் பிரம்மன் திரைபடத்தில் ஒரு பாடலுக்கு குத்து நடனம் போட்டிருந்த இவர் திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்ட மேடை நிகழ்ச்சியொன்றை தொகுத்து வழங்கியிருந்தார்.
இந்தசந்தர்ப்பத்தில் பிரபலங்களை மேடைக்கு அழைக்கும் போது இரண்டு மூன்று தடவைகள் இயக்குனர் இமயம் பாரதிராஜாவைப் பார்த்து திரு. பாக்கியராஜ் அவர்களை மேடைக்கு அழைக்கிறோம் என்று அழைத்திருக்கின்றார். இது இரு முறை நடந்திருக்கிறது, உடனேயே ஒரு ஓரமாக அமர்ந்திருந்த பாக்கியராஜ் அவர்கள் 'அம்மா நா தான்மா பாக்கியராஜ் அவர் பாரதிராஜா" என கூறியும் பத்மபிரியா தொடர்ந்து அதே தவறை செய்துள்ளார்.
இது இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திரையுலகினரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. பத்து ஆண்டு காலமாக சினிமாவிலுள்ள இவருக்கு பாரதிராஜாவையும், பாக்யராஜையும் அடையாளம் தெரியாமல் இருந்தமை என்பது அனைவரின் கோபப்பார்வையையும் பத்மபிரியாவின் பக்கம் திருப்பியது. இது இவ்வாறிருக்க இவருடன் நிகழ்ச்சி தொகுத்து வழங்கிய சக தொகுப்பாளர், இயக்குனர் இமயம் என்றழைக்கப்படும் பாரதிராஜாவைப் பார்த்து 'இயக்குனர் சிகரம்' என்று அழைத்துள்ளார் இது எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவதைப் போன்ற ஒரு சம்பவமாக அமைந்துள்ளது.
சச்சின் டென்டுல்கரைத் தெரியாது என்று சொன்ன மரியா ஷரப்போவாவாவது ரஷ்யாவைச் சேர்ந்தவர்.
தமிழ் உலகமே அறிந்த இரு இயக்குனர்களைத் தெரியாமலே பத்து வருடங்களாக சினிமாவில் குப்பை கொட்டும் இவரை என்னவென்பது?