ஆங்கிலேயர்களின் பிடியில் இருந்த இந்தியாவை, அக்காலத்தில் ஆட்சி செய்த பேரரசர் திப்பு சுல்தான், ஆங்கிலேயர்களுக்கு எதிரான போரில் வீர மரணம் அடைந்தார்.
அதன் பின்னர் மன்னரின் தங்கக் கைப்பிடி பதித்த வாள், அவரது அரிய வகை துப்பாக்கி மற்றும் சில போர் வாள்கள் அடங்கிய 8 அரிய பொருட்கள் இந்தியாவிற்கு எடுத்துச் செல்லப்பட்டன.
இந்த அனைத்து கலைப்பொருட்களும், சுமார் 220 ஆண்டுகளுக்குப் பிறகு இங்கிலாந்தின் பெர்க்சைர் நகரை சேர்ந்த ஒரு தம்பதிகளுக்கு கிடைத்தது.
அதனை தொடர்ந்து குறித்த தம்பதிகள், மன்னரின் துப்பாக்கி உள்ளிட்ட பொருட்களை தனியார் ஏல நிறுவனத்திடம் கொடுத்தனர்.
இதையடுத்து திப்பு சுல்தான் பயன்படுத்திய 8 பொருட்களும் மார்ச் ஏலத்தில் விடப்பட்டது. இதன்போது மன்னர் திப்பு சுல்தான் பயன்படுத்திய வெள்ளி பொருத்தப்பட்ட அரிய வகை துப்பாக்கி 55 லட்சத்து 20 ஆயிரம் இந்திய ரூபாய்களுக்கு விற்பனையானது.