புருவங்கள் அழகு பெற, அற்புத குறிப்புக்கள் இதோ...
SooriyanFM Gossip - புருவங்கள் அழகு பெற, அற்புத குறிப்புக்கள் இதோ...Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
பெண்களுக்கு அழகு சேர்ப்பதில், புருவத்திற்கு முதன்மையான இடமொன்று உள்ளது. புருவங்கள், வில் போல் இருக்க வேண்டும் என, இளம் பெண்கள் பலர் அதிகமாக ஆசைப்படுவார்கள். பொதுவாக பெண்கள் தத்தமது புருவத்தை சரியான முறையில் பாராமரித்து வந்தால் அழகாக தெரிவார்கள்.
கண்கள் அழகாக இருந்தாலும், அவர்களது புருவங்கள் அழகாக இல்லையென்றால், முகத்தின் அழகே மறைந்து விடும்.
இத்தனை முக்கியத்துவம் கொண்ட புருவங்களை பாதுகாக்க, சிறந்த வழிமுறைகள் உள்ளன.
புருவமே இல்லாதவர்களுக்கு, சிறு வயதிலிருந்தே நல்ல தரமான மையை புருவத்தில் பூசி வந்தால், அதே வடிவத்தில் புருவங்கள் அழகாக வளரும். கறுப்பு நிறம் கொண்ட ஐ ப்ரோ பென்சிலை இரவில் தூங்குவதற்கு முன் விளக்கெண்ணெய்யால் தொட்டு, புருவத்தில் வரைந்து கொண்டு தூங்கினால் புருவம் அடர்த்தியாக வளரும்.
தினமும் தூங்குவதுற்கு முன்பு புருவங்களில் விளக்கெண்ணெய் தேய்து வந்தால், இரண்டே மாதங்களில் புருவம் அடர்த்தியாக மாறும்.
அத்துடன் வெங்காயச் சாற்றினை ஒரு பஞ்சில் நனைத்து தினமும் தூங்குவதற்கு முன்பு தடவி வந்தால், புருவத்தில் முடி வளர்வதை விரைவில் நம்மால் காண முடியும்.
புருவங்கள் அழகு பெற, கற்றாழைக்கும் தனியாதானதொரு இடமுள்ளது. கற்றாழை சதைப் பகுதியை எடுத்து புருவத்தில் தடவி வந்தால், புருவம் அழகாக காட்சியளிக்கும்.