ஆனால் சீனாவில், காதலன் ஒருவன் காதலியிடம் 52 முறை அறை வாங்கிய சம்பவம் பதிவாகியுள்ளது. காதலர் தினத்தன்று கைப்பேசி வாங்கி தரவில்லை என்று காதலி தன் காதனை 52 முறை அறைந்த காணொளி சமூக ஊடங்களில் பரவி வருகிறது.
பொதுவாக காதலிகளை பொறுத்தவரை தாம் நினைப்பதையே தமக்கு பிடித்தவற்றை அவர்களின் பிறந்த தினம் காதலர் தினம் போன்ற நாட்களில் அன்பளிப்பாக கொடுக்க வேண்டும். இல்லை என்றால் அந்த நாள் காதலனுக்கு ஒரு நின்மதி இல்லாத நாளாக மாறி விடும்.
இப்படி நிலைமை இருக்க, சீனாவில் காதலன் அறை வேண்டிய சம்பவம் கடந்த மே 20 அன்று நிகழ்ந்துள்ளது. மே 20 ஆனது சீனாவின் அதிகாரப்பூர்வ காதலர் தினமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்த நிலையில், காதலர் தினமான அன்றைய நாளில் தனது காதலன் தனக்கு கைப்பேசி ஒன்றை அன்பளிப்பாக தரவில்லை என்ற கோபத்தில் காதலி சற்று அதிகமாகவே கோபம் கொண்டு விட்டார். காதலியை குறித்த காதலி அறைந்த காணொளி CCTV யில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது.
குறித்த காணொளியில் காதலி தனது காதலனுக்கு முகத்தில் அடிப்பதும் காதலன், அந்த அடிகளை வாங்கும்போது அந்த இடத்தில் நின்ற பலரும் அந்த சம்பவத்தை பார்ப்பது, சிலர் அந்த பெண்ணை தடுப்பதும் அதில் பதிவாகியுள்ளது.
மேலும் இதன்போது குறித்த இடத்திற்கு வந்த காவல்துறையினர் இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து, சமாதானம் செய்ய முற்பட்டுள்ளனர். எனினும் காவல் நிலையம் சென்றால் தனது காதலிக்கு பிரச்சினை வந்துவிடும் என காதலன் காவல்நிலையம் வர மறுத்துள்ளார். பின்னர் இருவரையும் சமாதானம் செய்த காவல்துறையினர், பிரச்சினைகள் இன்றி பிரித்து அனுப்பிவைத்துள்ளனர்.