ICC உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இங்கிலாந்தில் இன்று ஆரம்பமாகியுள்ளன. இன்றைய முதலாவது போட்டி இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் மோதும் போட்டியாக அமைந்துள்ளது. மொத்தமாக 10 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில், 48 போட்டிகள் நடைபெறவுள்ளன. எதிர்வரும் ஜூலை 14ம் திகதிவரை நடைபெறும் இந்த கிரிக்கெட் திருவிழாவில், 5 முறை சம்பியன் பட்டம் பெற்ற அவுஸ்திரேலியா, இருமுறை பட்டம் வென்ற இந்தியா, இங்கிலாந்து, இலங்கை, மேற்கிந்திய தீவுகள், பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், நியூஸிலாந்து உள்ளிட்ட 10 அணிகள் இடம்பெறுள்ளன.
உலக் கிண்ண போட்டிகளை இந்த தடவையும் தொலைக்காட்சி அலைவரிசை மற்றும் லைவ் காட்சிகளாக பல கோடிக்கணக்கான மக்கள் பார்த்து வருகின்றார்கள். முதல் நாளான இன்று போட்டியை நடத்தும் இங்கிலாந்து அணி, தென்ஆப்பிரிக்காவை லண்டன் ஓவலில் மைதானத்தில் எதிர்கொண்டு வருகின்றது.
பலம்வாய்ந்த அணியாக உருவெடுத்துள்ள இங்கிலாந்து அணி இறுதியாக ஆடிய 6 ஒரு நாள் தொடர்களில் 5 வெற்றிகளை கைப்பற்றி அசத்தி இருக்கிறது. இங்கிலாந்து அணி மூன்று முறை இறுதி சுற்றுக்கு வந்தும் உலக கோப்பையை வென்றதில்லை. தென்ஆப்பிரிக்க அணியோ அரையிறுதியை தாண்டியதில்லை.
தங்களது உலக கோப்பை கனவுக்கு அச்சாரம் போட தொடரை வெற்றியோடு தொடங்குவது மனரீதியாக நம்பிக்கையை அளிக்கும். முன்னதாக நேற்று லண்டனில் அரண்மனை அருகே உள்ள திறந்தவெளிப்பகுதியில் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தொடக்க விழா கோலாகலமாக நடந்தது.
இதில் முன்னாள் வீரர்கள் சிறிது நேரம் கிரிக்கெட் ஆடியிருந்தார்கள். அத்துடன் அங்கு நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளை கிட்டத்தட்ட 4 ஆயிரம் ரசிகர்கள் பார்வையிட்டிதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.