24,829 Views
சம்பவ தினத்தன்று வீட்டுக்கு வந்துள்ள 27 வயதான பெண் , வீட்டு உரிமையாளரை கட்டிலில் கட்டியது மட்டுமன்றி அவரது நெஞ்சில் ஒருவகை ரசாயனத்தையும் ஊற்றி பற்ற வைத்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து வீட்டு உரிமையாளரின் வேனை திருடிக்கொண்டு அவ்விடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
பின்னர் ஒருவாறு சுதாகரித்துக்கொண்ட வீட்டு உரிமையாளர் வீட்டின் இரண்டாவது மாடியிலிருந்து கீழே குதித்து அருகில் உள்ள கடையொன்றுக்குச் சென்றுள்ளார். அவர்கள் உடனடியாக அவசர சேவையின் உதவியை நாடியுள்ளனர். அந்நபர் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை குறித்த பெண் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.