நடிகர் ஷாருக்கான் 2018 இறுதியில் வெளிவந்த zero படத்திற்கு பிறகு எந்த புதிய படத்திலும் நடிக்கவில்லை. அந்த படம் படுதோல்வியடைந்த நிலையில் அதன் பிறகு எந்த படத்தையும் ஒப்புக்கொள்ளாமல் இருக்கிறார்.
ஷாருக் தமிழ் இயக்குனர் அட்லீ கூட்டணியில் ஒரு படத்தில் நடிக்கிறார் என செய்தி சில மாதங்களாக பேசப்பட்டது. ஆனால் அந்த படமும் நிறுத்தப்பட்டு விட்டது என்று தற்போது செய்திகள் வருகிறது.
இந்நிலையில் ஷாருக்கான் ரசிகர் ஒருவர் ட்விட்டரில் அவருக்கு தற்கொலை மிரட்டல் விடுத்துள்ளார். பொறுத்தது போதும், நீங்கள் ஜனவரி முதலாம் திகதி எந்த படமும் அறிவிக்கவில்லை என்றால் நான் தற்கொலை செய்துகொள்வேன் என அந்த ரசிகர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்ல. #WeWantAnnouncementSRK என்ற ஹாஸ்டேக் கூட ட்ரெண்ட் ஆகியுள்ளது.