திரையுலக பிரபலங்கள் ஒவ்வொருவரும் தனக்கென ஒரு தனி இடத்தை ரசிகர்கள் மனதில் பிடித்து விடுவார்கள். ரசிகர்களும் அவர்களுக்கு கோவில் கட்டுவது, பாலாபிஷேகம் செய்வது என்று தலையில் வைத்து கொண்டாடுவார்கள். தமிழ் சினிமாவில் புதிதாக அறிமுகமாகும் நடிக நடிகர்களுக்கும் ரசிகர் மன்றங்களை ஆரம்பித்துவிடுவார்கள். இது ரசிகர்கள் தங்களின் அன்பை வெளிப்படுத்தும் ஒரு முறை.
குஷ்புவுக்கு கோயில் கட்டியது ஞாபகமிருக்கும்..
இந்த வகையில் மதுரையைச் சேர்ந்த ராஜ்குமார் என்ற சிற்பியின் மகன்களான நாகராஜன், சுப்புரு எனும் இருவரும் சேர்ந்து தங்கள் அபிமான நடிகர் விஜயின் சிலையின் செதுக்கியிருக்கிறார்கள்.
சிறு வயதிலிருந்தே இளைய தளபதியின் தீவிர ரசிகர்களான இவர்கள் இருவரும் 'வேலாயுதம'; படத்தில் காட்சியளித்த விஜயின் தோற்றத்தையே சிமென்டினால் சிலையாக்கி வர்ணம் தீட்டியுள்ளனர். தத்ரூபமாக நடிகர் விஜய் போன்று காட்சியளிக்கும் இந்த சிலையின் படத்தை பேஸ்புக்கில் பார்த்த நடிகர் விஜய் அவர்களுக்கு தொலைபேசியில் அழைத்து பாராட்டியுள்ளார்.
மேலும் அண்மையில் மதுரைக்குச் சென்றிருந்த நடிகர் விஜயின் தந்தையான இயக்குனர் ளு.யு சந்திரசேகரும் நாகராஜன் மற்றும் சுப்புரு ஆகிய இருவருக்கும் வாழ்த்து கூறியுள்ளார். சிலையை செதுக்கிய இருவரும் சென்னைக்கு சென்று நடிகர் விஜயை நேரில் சந்தித்து சிலையை பரிசளிக்க திட்டமிட்டுள்ளனர்.