முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவுக்கு, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் வேட்பு மனு வழங்குவதற்கு தாம் எந்த சந்தர்ப்பத்திலும் விரும்பவில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் இன்று அவர் ஆற்றிய சிறப்பு உரையின் போதே இவ்வாறு குறிப்பிட்டார்.
எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையிலான கூட்டமைப்பு வெற்றி பெறும் பட்சத்தில், பிரதமர் பதவிக்காக ஏராளமான சிரேஸ்ட உறுப்பினர்கள் கட்சியில் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கூட்டமைப்பில் பெரும்பான்மையானவர்கள் முன்னாள் ஜனாதிபதிக்கு வேட்பு மனு வழங்குமாறு வலியுறுத்திய போதும், தாம் அதற்கு எந்தவித விருப்பத்தையும் வழங்கவில்லை என ஜனாதிபதி இதன் போது குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் பதவியை ஏற்க தாம் மேற்கொண்ட தீர்மானமானமானது சரியானதே எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதன்போது தெரிவித்தார்.