சுற்றுலா பாகிஸ்தான் அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையில் நேற்று ஹம்பாந்தோட்டை சூரியவெவ மைதானத்தில் இடம்பெற்ற 5 வது சர்வதேச ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 165 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.
நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்து 50 ஓவர்களில் 4 விக்கட்டுகளை இழந்து 368 ஓட்டங்களை பெற்றது.
பாகிஸ்தான் அணிக்கு எதிராக இலங்கை அணி பெற்ற அதி கூடிய ஓட்டம் இதுவாகும்.
இதன்போது திலகரட்ன தில்ஷான் ஒருநாள் போட்டிகளில் தனது 10 ஆயிரம் ஓட்டங்களை கடந்தார்.
பதிலளித்தாடிய பாகிஸ்தான் அணி 37.2 ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்டுகளையும் இழந்து 203 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.
5 சர்வதேச ஒருநாள் போட்டிகளைக் கொண்ட இந்த தொடரை பாகிஸ்தான் அணி 3 க்கு 2 என்ற எண்ணிக்கையில் வெற்றிகொண்டது .
நேற்றைய ஆட்டத்தில் சிறப்பாட்டக்காரராக 116 ஓட்டங்களை பெற்ற குசல் பெரேரா தெரிவு செய்யப்பட்டார்.