"வருத்தப்படாத வாலிபர் சங்கம்" படத்தில் நடித்து இளசுகளின் மனசை ஏக்கத்தில் வருத்தப்பட வைத்தவர் நடிகை ஸ்ரீதிவ்யா, தற்போது அரை டஜன் படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். இந்தப் படத்துக்குப்பின், அவர் நடித்த எந்த படங்களுமே இன்னும் வெளிவராததால் இணைய ஊடகங்களில் அவர் பற்றிய பரபரப்பான செய்திகள் காணவில்லை. ஆனால், திரையுலகில் அவருக்கு நல்ல வாய்ப்புக்கள் இருந்து வருகிறதாம்.
லட்சுமிமேனன், ப்ரியாஆனந்த், நந்திதா உள்ளிட்ட இவருக்கு போட்டியான சில நடிகைகள் இயக்குனர்களிடம் ஏகப்பட்ட கண்டிசன்கள் போடுகிறார்களாம். ஆனால், ஸ்ரீதிவ்யாவோ, சில படங்களில் நடிக்க கதையைகூட கேட்பதில்லையாம், பெரிய டைரக்டர் என்றால் ஓ.கே சொல்லி விடுகிறார். அதோடு, படப்பிடிப்பில் தளத்திலும் அமைதியான இவர், படப்பிடிப்பின்போது வழங்கப்படுகின்ற ஆடைகளை எந்த குற்றம் குறையும் சொல்லாமல் அணிந்து கொண்டு நடித்துக்கொடுக்கிறார். இதனால், அவரை வைத்து படம் பண்ணி வரும் டைரக்டர்களெல்லாம் ஸ்ரீதிவ்யாவை தங்களது செல்லப்பிள்ளை என்கிறார்கள்.
இதனால் ஸ்ரீதிவ்யாவுக்கு அடுத்து பிரபல ஹீரோக்களின் படங்களில் நடிக்கவும் வாய்ப்புகள் தேடிவரத் தொடங்கியிருக்கின்றன. இந்தநிலையில் சிவகார்த்திகேயன், அதர்வா மாதிரியான இளவட்ட நடிகர்கள்தான் எனக்கு மேட்சாக இருப்பார்கள் என்று கூறும் ஸ்ரீதிவ்யா, விஜய், சூர்யா போன்ற ஹீரோக்களுக்கும் நான் பொருத்தமாகவே இருப்பேன் என்று கூறி அவர்களுக்கும் மெதுவாக தூண்டில் போடுகின்றாராம்.
வாயுள்ள பிள்ளை பிழைச்சுக்கும்னு யாராச்சும் பழமொழி சொல்லிக்கொடுத்திருப்பாங்க போல...