17,914 Views
மேற்படி சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேகநபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் குறித்த சிறுமி வசித்து வந்த பிரதேசத்தில் தங்கியிருந்ததாக கூறப்படும் நபரொருவர் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
அந்நபர் கம்பஹா பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும் அவர் பல்வேறு துஷ்பிரயோக சம்பவங்களுடன் தொடர்புபட்டவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
துஷ்பிரயோக குற்றச்சாட்டுக்களின் பேரில் சிறையில் இருந்தவர் எனத் தெரிவிக்கப்படுக்கப்படும் அந்நபர் சிறுமிகளை கடத்தில் துஷ்பிரயோகநடவடிக்கைகளில் ஈடுபட்டவர் என தெரியவருகின்றது.
அந்நபரின் சகோதரியின் வீடே கொடகெதனியாவயில் அமைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அந்நபர் தனது சொந்த பிரதேசத்தில் ஏற்பட்ட எதிர்ப்பையடுத்தே சகோதரியின் வீட்டில் தங்கியிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது அவர் தலைமறைவாகியுள்ளதால் அவரை விசேட பொலிஸ் குழுவொன்று தேடிவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.