3,721 Views
சிங்கப்பூர்-தமிழ்நாட்டை சேர்ந்த 2 குடும்பங்களிடையே பல்வேறு அதிசய சம்பவங்கள் நடைபெறுகின்றன. இதற்கு காரணம் என்ன? தீர்வு என்ன என்பதை சொல்லும் இந்த படத்தில் அனு என்ற சிறுமி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
தீபக் பரமேஷ் நாயகனாகவும், ஜாக்லின் பிரகாஷ் நாயகியாகவும் அறிமுகமாகிறார்கள். இவர்களுடன் குணாளன் மோகன், மோர்ணா அனிதா ஆகியோரும் நடித்துள்ளனர். அனைவரும் புதுமுகங்கள்.
இசை: சிவசரவணன், ஒளிப்பதிவு: மனீஷ் மூர்த்தி, கதை, திரைக்கதை, வசனத்தை ஸ்ரீநாத் ராமலிங்கம், ஸ்ரீகிருஷ்ணா ஆகியோர் எழுதி இருக்கிறார்கள். தயாரிப்பு: என்.சண்முகசுந்தரம், கே.முகமதுயாசின்.
இந்தியா மற்றும் இலங்கையிலும் இத்திரைப்படம் வெளியாகியுள்ளது.
திரைப்படம் உருவான விதம் தொடர்பான படங்கள் மற்றும் காணொளி: