9 yrs old boy suicide - 9 வயது சிறுவன் தற்கொலை: 4 வருடங்களுக்கு முன் சகோதரியும் தற்கொலை செய்துகொண்ட மர்மம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
9,501 Views
ஹொரணை- ஹங்குருவாதொட பிரதேசத்தில் தூக்கில் தொங்கி உயிரை மாய்த்துக்கொண்ட தாக நம்பப்படும் சிறுவனொருவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. சிறுவனின் வயது 9 என தெரிவிக்கப்படுகின்றது. சிறுவனின் தந்தை இது தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
சிறுவனின் மூத்த சகோதரியொருவரும் நான்கு வருடங்களுக்கு முன்னர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்ட தாக தெரிவிக்கப்படுகின்றது.
காலை 7.30 மணியளவில் , முந்திரி மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் அவரது சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இம்மரணத்தில் சந்தேகம் நிலவுவதால் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.