9,638 Views
கழுத்தறுக்கும் காணொளிகளை வெளியிடுவது , மிரட்டும் படங்களை சமூகவலைதளங்களில் தரவேற்றுவது என பிரச்சார பீரங்கிகளாகவே உள்ளனர் அவர்கள்.
இந்நிலையில், ஈபில் கோபுரம் தகர்க்கப்பட்டு கீழே விழுவது போன்ற காட்சியடங்கிய காணொளியொன்றை ஐ.எஸ் இயக்கம் வெளியிட்டுள்ளது.
பிரான்ஸின் , பாரிஸில் மேலும் தாக்குதல் நட த்தப்படுமென எச்சரிக்கை செய்வதாக இக்காணொளி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஈபில் கோபுரம் தகர்க்கப்பட்டு கீழே விழுவது போன்ற காட்சி ஆங்கிலப் படமொன்றின் காட்சியென்பதுடன் , இதனை தமது பிரச்சாரத்துக்காக பயன்படுத்தியுள்ளனர் ஐ.எஸ் இயக்கத்தினர்.
6 நிமிட காணொளிக் காட்சியில் தோன்றும் ஐ.எஸ் உறுப்பினர்கள் , பிரான்ஸ் ஜனாதிபதியின் சிரியா தொடர்பான கொள்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்ததுடன் பாரிஸ் நகர் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் வெறும் ஆரம்பம் மட்டுமே எனவும் அந்நகர் மீது மேலும் தாக்குதல்களை நடத்தப் போவதாகவும் எச்சரித்துள்ளனர்.
திரைப்படக் காட்சி