ஓட்டுநர் இல்லாத கார், ஆளில்லா Helicopter , Drone, ஆளில்லா உளவு விமானங்கள் வரிசையில், தற்போது தயாராகியுள்ளது ஆளில்லா Helicopter.
இதில், விமானிகள் யாரும் இருக்க மாட்டார்கள். நிலப்பகுதியிலிருந்தே இயக்கும் வகையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், சென்சார்கள், தொலைத்தொடர்பு அம்சங்கள் ஆகியவை இடம்பெற்றிருக்கும்.
சுமார் 1,200 கிலோகிராம் எடைகொண்ட இந்த Helicopter இல் சுமார் 600 கிலோகிராம் எடை அளவுக்கு பொருட்களை எடுத்துச் செல்ல முடியும்.
குறிப்பாக, காட்டுத்தீயை அணைப்பது, விவசாய நிலங்களில் பூச்சிக் கொல்லி மருந்துகளை தெளிப்பது , உரமிடுவது, கடல் பகுதிகளில் மீட்புப்பணி, பேரிடர் மீட்பு போன்றவற்றுக்கு இதனை பயன்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.