பொதுவாக வாழைமரத்தின் அனைத்து பகுதிகளும் நமக்கு பலன் தரக்கூடியது. வாழைப்பூவை நாம் சமையலில் சேர்ப்பது மிகவும் அபூர்வமான ஒன்றாக மாறிவிட்டது. வாழைப்பூ மிகவும் அரிதாக கிடைக்கக் கூடிய ஒரு பொருள், ஆனாலும் இதனை நாம் அதிகம் பயன்படுத்துவதில்லை.
வாழை மரத்தின் இலை, பூ, காய், பழம், தண்டு என அனைத்துமே உடலுக்கு நல்ல பலன் தரக்கூடியது. இங்கு வாழைப்பூவை உட்கொள்வதால் கிடைக்கும் நன்மைகளைப் பார்ப்போம்.
வாழைப்பூவை வாரம் இருமுறை சமைத்து உண்டு வந்தால் இரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற கொழுப்புகளை வெளியேற்றும். இதனால் இரத்தத்தின் பசைத்தன்மை குறைந்து, இரத்தம் வேகமாகச் செல்லும்.
மூலநோயின் பாதிப்பினால் மலத்துடன் இரத்தம் வெளியேறுதல், உள்மூலம், வெளிமூலப் புண்கள் ஆகியவற்றுக்கு சிறந்த மருந்தாக வாழைப்பூவைப் பயன்படுத்தலாம். வாழைப்பூ மூலக்கடுப்பு, இரத்த மூலம் போன்றவற்றைக் குணப்படுத்தும்.
பெண்களுக்கு உண்டாகும் கற்பப்பைக் கோளாறுகள். மாதவிலக்கு காலங்களில் அதிக இரத்தப்போக்கு, அல்லது இரத்த போக்கின்மை, வெள்ளைப்படுதல் போன்ற நோய்களுக்கு வாழைப்பூவை உணவில் சேர்த்துக்கொண்டு வந்தால் உடனடித் தீர்வு கிடைக்கும்.
வாழைப்பூவின் துவர்ப்புத்தன்மையானது இரத்தத்தில் கலந்துள்ள அதிகளவு சர்க்கரைப் பொருளைக் கரைத்து வெளியேற்ற உதவுகிறது. இதனால் இரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையின் அளவு குறைகிறது.
இவ்வாறு பல நன்மைகளைத் தரும் வாழைப்பூவை ஒரு வேளை உணவின் போது எடுத்துக்கொண்டால்,நமது ஆரோக்கியத்தை மேலும் மேம்படுத்திக்கொள்ளலாம்.