13,564 Views
இலங்கை கிரிக்கட் வீரர் குசல் பெரேரா, தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்து பாவனை சோதனையில் தோல்வி கண்டுள்ளார்.
ஸ்ரீ லங்கா கிரிக்கட்டின் அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானுடனான கிரிக்கட் தொடரின் போது அவரிடம் இதற்கான சோதனை நடத்தப்பட்டிருந்தது.
இதில் அவர் குறித்த ஊக்க மருந்துகளை பாவித்துள்ளமை தெரியவந்துள்ளது.
இதனை அடுத்து நியூசிலாந்து அணியுடனான தொடருக்கான இலங்கை குழாமில் இருந்து நீக்கப்பட்டு, மீண்டும் நாட்டுக்கு திருப்பி அழைக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு பதிலாக கௌசல் சில்வா, இலங்கை குழாமில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலா இலங்கை அணிக்கும் நியூசிலாந்து அணிக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நாளை மறுதினம் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை அண்மையில் குஷல் பெரேராவின் அந்தரங்க செல்பியெனக் கூறி படமொன்று இணையத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த து.
இதற்கு அவர் விளக்கமும் அளித்திருந்தார்.
"அந்தரங்க செல்பியில் இருப்பது நானே ஆனால்" : குஷல் ஜனித் - இணையத்தைக் கலக்கும் படம் (காணொளி)