61 Views
தேவைக்காக பயன்படுத்த வேண்டிய சமூக ஊடகங்கள், பலருக்கு நேரத்தை வீணடிக்கும் பழக்கமாக மாறியுள்ளது. இதனால் படிப்பு, வேலை, உடல்நலம், மனநலம் உள்ளிட்ட பல துறைகளில் பாதிப்புகள் ஏற்படும் அபாயம் இருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
குறிப்பாக மாணவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்தும் நேரத்திற்கு பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்கள் வரம்பு நிர்ணயிப்பது நல்லது. தினசரி பயன்பாட்டில் கட்டுப்பாடு இருந்தால், அதன் எதிர்மறை விளைவுகளை பெருமளவில் குறைக்க முடியும்.
மேலும், ஒவ்வொரு தருணத்தையும் புகைப்படம், வீடியோ, இருப்பிடம் உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்களுடன் சமூக ஊடகங்களில் பகிர்வதைத் தவிர்ப்பது பாதுகாப்பான நடைமுறையாகும். சமூக ஊடகங்களை புத்திசாலித்தனமாகவும், அளவோடும் பயன்படுத்துவதே சிறந்த வழியாகும்.