தென்னிந்திய சினிமாவில் காலடி பதித்த கொஞ்சக் காலத்திலேயே முன்னணி நடிகைகளுக்கெல்லாம் அதிர்ச்சி கொடுத்து தனக்கென ஒரு இடம்பிடித்து, ரசிகர்கள் கனவை கொள்ளையடித்த அந்தக் கேரளத்துச்சிட்டு வேறுயாருமல்ல நடிகை அமலாபால் தான்.
தமிழில் அறிமுகமான முதற்படம் "சிந்து சமவெளி". இந்தப்படம் கொஞ்சம் விவகாரமான படமாக அமைந்ததோடு, அடுத்துவந்த "மைனா" படம் இவருக்கு பெயர் வாங்கித்தந்தது. தொடர்ந்து தமிழில் முன்னணி நாயகர்களுடன் நாயகியாக நடித்த இவர்,கடந்த ஜூன் மாதம் 12-ம் திகதி திருமணம் செய்து கொண்டதோடு தொடர்ந்து நடிப்பதையும் குறைத்துக் கொண்டார்.
இந்தநிலையில் பிரபல இயக்குனரான ஏ.எல்.விஜய்யை கரம்பற்றிய இவர், சந்தோசமான ஒரு செய்தியை தன் ரசிகர்களுடன் சமூக வலைத்தளத்தினூடாக மறைமுகமாக பகிர்ந்து கொண்டிருகிறாராம்."திருமணம் ஆனபிறகு ஒவ்வொரு பெண்ணுக்கும் கட்டாயம் கிடைக்க வேண்டிய "அற்புதமான பரிசு" எனக்கும் கிடைத்துள்ளதாக கருதுகிறேன். அந்தப்பரிசை எனக்கு அளித்த என் அன்புக்கணவர் விஜய்க்கு நான் என்றும் அன்புக்குரியவளாக இருக்க கடமைப்பட்டுள்ளேன். இந்த பரிசு ஒவ்வொரு நாளும் நான் நினைத்து நினைத்து ரசித்து பார்க்க கூடிய அளவுக்கு சிறப்பானது" என்றே அமலாபால் தன் சமூகவலைத்தளப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். இதன்மூலம் அமலாபால் தான் கர்ப்பமாக இருப்பதை எல்லோரிடமும் சந்தோசமாக பகிர்ந்து கொண்டிருக்கிறாராம்.
இதேவேளை, தனது ரசிகர்களிடமிருந்து எந்தவிதமான உணர்வுப்பிரதிபலிப்பு வருகின்றது என்பதை தெரிந்து கொள்வதற்காகவே இந்த சந்தோசமான செய்தியை நேரடியாக சொல்லாமல், இவ்வாறு மறைமுகமாக அமலாபால் சொல்லியிருப்பதாகவும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.அவரின் இந்தச் செய்திக்கு பதில் கருத்துக்களும், நிறைய வாழ்த்துக்களும் அமலாபாலை நோக்கி பறந்துகொண்டிருக்கிறதாம்.
கலைக்குடும்பத்தில் இன்னுமோர் கலை வாரிசா....? வாழ்த்துக்களோடு வரவேற்கிறோம் நாங்களும்.
ஆனால் பேட்டி என்று வந்த இந்திய ஊடகங்களுக்கு தான் கர்ப்பம் என்ற செய்தியை அமலா பால் மறுத்துள்ளார்.
என்ன நடக்குதய்யா?
*கணேசமூர்த்தி ராகவன்.