70 Views
கடலில் அலைகள் உருவாவதற்கு முக்கிய காரணம் காற்று. காற்றானது கடலின் மேற்பரப்பில் வீசும்போது ஏற்படும் உராய்வினால் நீர் அலைகளாக மாறுகிறது. குளம் அல்லது குட்டைகளில் பெரிய அளவில் அலைகள் தோன்றுவதில்லை. ஏனெனில், காற்று தொடர்ந்து வீசி அலைகளை உருவாக்குவதற்கு கடலைப்போல பரந்த வெளி அங்கு இல்லை.
கடலில் ஏற்படும் அலைகள் பிரதானமாக மூன்று வகைப்படுகின்றன . காற்று கடலின் மேல் வேகமாக வீசும்போது, தன் ஆற்றலை தண்ணீருக்குக் கடத்துகிறது. இதன் மூலம் சிறிய சிற்றலைகள் முதல் பெரிய அலைகள் வரை உருவாகின்றன.
அதே போல நிலவு மற்றும் சூரியனின் ஈர்ப்பு விசையினால் கடலில் நீர் மட்ட உயர்வு மற்றும் தாழ்வு ஏற்படுகிறது. இதுவும் ஒரு வகை அலைஆகும். மூன்றாவதாக கடலுக்கு அடியில் ஏற்படும் நிலநடுக்கங்கள் , எரிமலை வெடிப்புகள் அல்லது நிலச்சரிவுகள் போன்றவற்றால் 'சுனாமி' எனப்படும் பேரலைகள் உருவாகின்றன.