முதல் பாடலிலேயே புகழின் உச்சத்தை எட்டியவர் அனிருத், இப்போது டங்கமாரி,டண்டனக்கா பாடல்களை பாடி இளைஞர்களின் மனதையும் கொள்ளை கொண்ட ஓர் இளம் பாடகராகவும் மாறி இருக்கின்றார் இவருக்கு தெலுங்கின் மெகா பவர் ஸ்டார் ராம் சரணின் படத்திற்கு இசையமைப்பதன் மூலம் தெலுங்கிலும் கால் பதிக்க வாய்ப்பு கிடைத்திருந்தது.
இயக்குனர் ஸ்ரீனு வட்லா இயக்கத்தில் ராம் சரண் மற்றும் ராகுல் பிரித் சிங் நடிப்பில் உருவாகிக்கொண்டிருக்கும் பெயரிடப்படாத படத்திற்கு இசையமைக்க அனிருத்தை நியமித்தார் ஸ்ரீனு.
ஆனாலும், அஜித்பட வாய்ப்பு வந்ததால், இந்தப் படத்துக்காக அந்தப் படத்திலிருந்து விலகிக் கொண்டார் அனிருத்.
தமிழில் நிறைய படங்களுக்கு இசையமைத்துக்கொண்டிருக்கும் அனிருத் தெலுங்கு படத்திற்கு இசையமைக்கும் பணியை சற்று ஒத்திவைத்திருந்தார். இதில் கோபமடைந்த ஸ்ரீனு இந்த பெயரிடப்படா படத்திற்கு இசையமைக்கும் பொறுப்பை தன் ஆஸ்தான இசையமைப்பாளரான தேவி ஸ்ரீ பிரசாத்திடமே ஒப்படைத்துவிட்டார். தேவிஸ்ரீ பிரசாத் என்ன பண்ணுகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் !!
- எழுதியது வர்ஷி-