தெலுங்கில் முன்னணி நடிகர், இன்றும் இளமையோடு வளம் வருகின்றவர் நடிகர் மகேஷ் பாபு. இவரை வைத்து பல படம் எடுக்க பலரும் முயன்றுவரும் நிலையில், இவர் தெரிவு செய்த சில படங்களில் மட்டுமே அக்கறையோடு நடித்து வருகிறார். அடுத்தடுத்து பல ஹிட்ஸ் கொடுக்கும் நடிகரான மகேஷ்பாபு, இப்பொழுது ஸ்ரீமந்து படத்தில் நடித்து வருகிறார்.
ஆக்டு படத்தின் ஹிட்டை அடுத்து, இந்தப்படத்தில் மிகக் கவனமாக நடிக்கிறார். அனல் அரசு படத்துக்கான சண்டைக் காட்சிகளை அமைக்கிறார். அத்தோடு, தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்க, ஸ்ருதிஹாசன் மற்றும் நதியா, பூர்ணா, பிரம்மானந்தம் போன்ற நட்சத்திரங்கள் கலந்து கட்டி வருகின்றன.
இந்நிலையில், படத்தின் பாடல் காட்சி ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. யார் இதை பரப்பினார்கள் என, கண்டுபிடிக்கப்படவில்லை. காரணமும் தெரியவில்லை. இந்த சம்பவத்தால் மகேஷ்பாபு மிகுந்த கோபத்தோடும் மன உளைச்சலோடும் காணப்படுகிறார். உழைப்பு வீணாகி விட்டதே என வருத்ததோடு படப்பிடிப்புகளுக்கு வந்து போகிறார் என்கிறது படக்குழு.
-கோடம்பாக்கக் குருவி-