இந்தியாவின் கேரளாவிலுள்ள கல்லூரி ஒன்றில் கல்வி கற்ற 15 வயது மாணவியொருவர், தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இவரது மரணம் தொடர்பில், கேரள காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். குறித்த மாணவியின் மரணத்திற்கு முன்னர், ஆசிரியைகள் இருவர் அவருக்கு தொல்லை கொடுத்து வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ச்சியாக ஆசிரியர்கள் இருவர், குறித்த மாணவியினை துன்புறுத்தி வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த மாணவி, தமது கல்லூரியின் 5 வது மாடியில் இருந்து கீழே விழுந்து, தற்கொலை செய்துகொண்டதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இதனிடையே குறித்த இரு ஆசிரியைகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கேரள காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.