3,091 Views
விஜயந்தி மாலி என்ற 42 வயதான என்ற அப்பெண் கடந்த சில தினங்களுக்கு முன்னர் உயிரிழந்துள்ளார்.
அவரின் கணவர் மனநிலை பாதிக்கப்பட்டவரெனவும், 4 வருடங்களுக்கு முன்னர் அவர்களுக்கு திருமணம் நடைபெற்றதாகவும் , குழந்தைகள் யாரும் இல்லையெனவும் தெரிவிக்கப்படுகின்றது.
தனது மனைவி உயிரிழந்து விட்டதாகவும், ஆனால் அவர் மீது கொண்டுள்ள அதீத அன்பினால் அவரது சடலத்தை அங்கேயே வைத்துள்ளதாகவும் குறித்த நபர் பிரதேசவாசியொருவருக்கு தெரிவித்துள்ளார்.
மேலும் பொலிஸாருக்கு கிடைத்த தகவலொன்றின் அடிப்படையில் அவரது வீட்டை சோதனையிட்ட போது சடலம் அங்கிருப்பதை கண்டுபிடித்துள்ளனர்.
பின்னர் நட த்தப்பட்ட மரண பரிசோதனைகளின் போது அப்பெண் நிமோனியாவால் உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது.