அப்பா உன்னிகிருஷ்ணனைப் போலவே முதன் முதலாக சினிமாவில் பாடிய பாடலுக்கு தேசிய விருது பெற்றுள்ளார் அவரது மகள் உத்ரா. ஒரே ஒரு வித்தியாசம் அப்பா பாடியது ஏ.ஆர். ரகுமான் இசையில் மகள் பாடியது அவரது மருமகன் ஜி.வி.பிரகாஷ் இசையில் என்பதுதான்.
நான்கு வயதில் இருந்து கர்நாடக சங்கீதம் கற்றுக் கொண்டிருந்தாலும் முதன் முதலாக சைவம் படத்தில் ஜி.வி.பிரகாஷ் இசையில் குழந்தைக்காக பாடல் பாடினார் உத்ரா.
இவர் பிரபல கர்நாடக இசைப்பாடகரும், திரைப்பட பாடகருமான உன்னிகிருஷ்ணனின் மகளாவார். சைந்தவி வீட்டில் கொலுவிற்கு பாடிய உத்ராவிற்கு திடீரென ‘அழகே அழகு' பாடலை பாடும் வாய்ப்பு கிடைத்தது என்கிறார் உன்னி கிருஷ்ணன்.
சில நிமிடங்கள் மட்டுமே சினிமா பாடலை பயிற்சி செய்த உத்ரா பாடியது இசையமைப்பாளருக்கு பிடிக்கவே,இயக்குநரும் ஓகே சொல்ல இந்த பாடலைப் பாடும் வாய்ப்பு கிடைத்தது என்று கூறியுள்ளார் உன்னி கிருஷ்ணன்.

முதல் பாடலுக்கு விருது
கர்நாடக சங்கீதம், மேற்கத்திய இசைகள் பாடினாலும் புதிய பாடலை முதன் முறையாக சைவம் படத்தில் அழகே... அழகு என்று பாடி அதற்கு தேசிய விருது பெற்றுள்ளார்
முத்துக்குமாரின் வரிகள்
பாடலாசிரியர் முத்துக்குமாரின் அழகான எளிமையான வரிகள் தனது மகளுக்கு பாட எளிதாக இருந்தது என்று கூறியுள்ள உன்னி கிருஷ்ணன் வாய்ப்பு கொடுத்த அனைவருக்கும் நன்றி கூறியுள்ளார்.
அப்பாவுக்கும் தேசிய விருது
21 ஆண்டுகளுக்கு முன்னர் காதலன் படத்தில் ஜி.வி.பிரகாஷின் மாமா ஏ.ஆர். ரகுமான் இசையமைப்பில் முதன் முதலாக ‘என்னவளே... அடி என்னவளே...' என்று பாடி தேசிய விருது வாங்கினார் உன்னிகிருஷ்ணன் என்பது குறிப்பிடத்தக்கது.
========CASTRO RAHUL ========
547 Views
லிங்கா படத்துக்கு விநியோகஸ்தர்கள் நஷ்ட ஈடு கேட்டது தவறு என்று நடிகர் கமல் ஹாஸன் கூறினார். தனது அடுத்த படமான உத்தம வில்லன் குறித்து முதல் முறையாக செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார் கமல்.
அவரது ஆழ்வார்ப்பேட்டை அலுவலகத்தில் நடந்த இந்த சந்திப்பின்போது, கமலிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டன.
திரைப்படங்களுக்கு வினியோகஸ்தர்கள் நஷ்டஈடு கேட்பது பற்றி உங்கள் கருத்து என்ன.. சமீபத்தில் நடந்தது (லிங்கா) உங்களுக்கே தெரியும்.. என்று கேட்டனர்.
அதற்கு பதிலளித்த அவர், "சினிமா என்பது தயாரிப்பாளர்களுக்கு வியாபாரம். வினியோகஸ்தர்களுக்கு கலை. வியாபாரம் முடிந்தபிறகு நஷ்டம் ஏற்பட்டு விட்டது என்று பணத்தை திருப்பி கேட்பது தவறு.
ரசிகர்கள் படம் பார்க்க வருகிறார்கள். பாதியில் எழுந்து படம் பிடிக்கவில்லை. பாதிப் பணத்தை திருப்பி தாருங்கள் என்று கேட்டால் எப்படி முடியும்? அது சாத்தியமானது அல்ல. பாதி பணத்தை எடுத்துக் கொண்டு மீதி பணத்தை தாருங்கள் என்று ரசிகர்கள் கேட்டால் நன்றாக இருக்குமா? அதுபோல்தான் விநியோகஸ்தர்கள் பணத்தை திருப்பிக் கேட்பதும்," என்றார்.
அப்போது கமல் நடிப்பில் உருவாகியுள்ள 'விஸ்வரூபம்' படத்தின் இரண்டாம் பாகம் வெளியாவதில் ஏன் இவ்வளவு தாமதம், தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரனுக்கும் உங்களுக்கும் இடையிலான கருத்து வேறுபாடுதான் காரணமா? என்று கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த கமல்
"எங்களுக்குள் நிச்சயமாக கருத்து வேறுபாடு கிடையாது ஆனால் இந்தப் படம் தாமதமாவதற்கு சில காரணங்களைச் சொல்கிறார் ஆஸ்கர் ரவிச்சந்திரன். அவை நிச்சயம் ஏற்கும்படி இல்லை என்பதுதான் உண்மை.
அவர் பணக் கஷ்டத்தில் இருப்பதுபோலவும் தெரியவில்லை. இருந்தும் இப்படத்தை வெளியிடுவதில் ஏன் தாமதப்படுத்திகிறார் என்றுதான் புரியவில்லை," என்றார்.
விஸ்வரூபம் முதல் பாகம் வெளியானபோதே, இரண்டாம் பகுதியின் பெருமளவு காட்சிகளை முடித்துவிட்டிருந்தார் கமல். ஆனால் படம் வெளிவந்தபாடில்லை. அந்தப் படம் முடிந்த பிறகு, அடுத்தடுத்து உத்தம வில்லன், பாபநாசம் படங்களில் நடித்துவிட்ட கமல், மேலும் இரு புதிய படங்களில் நடிக்க பேசி வருகிறார்.
ஆனால் விஸ்வரூபம் 2 படத்தின் வர்த்தகம் எதிர்ப்பார்த்த அளவு இல்லாததால், தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன் படத்தை திரும்ப கமலிடமே திருப்பித் தந்துவிடும் முடிவில் இருப்பதாக ஒரு பேச்சு நிலவுகிறது.
277 Views
519 Views
266 Views
275 Views
சிங்கப்பூர் என்ற தேசத்தை செதுக்கிய சிற்பியான 'லீ க்வான் யூ' பாபாக்கள் என்று அழைக்கப்படும் சீனப் பாரம்பரியம் கொண்ட குடும்பத்தில் பிறந்தவர். வாழ்ந்து கெட்ட குடும்பத்தை லீயின் அம்மாதான் தூக்கி நிறுத்தினார்.
சிறு வயதில் லீ க்வான் யூவுக்கு இங்கிலாந்து மீது ஈர்ப்பு அதிகம். முதல் உலகப் போரில் ஜப்பான், இங்கிலாந்தை பந்தாடியபோது அந்த ஈர்ப்பு அவருக்கு போய்விட்டது. அதுவே பின்னாளில் அவரது இங்கிலாந்து எதிர்ப்புக் கொள்கையாக மாறியது.
உலகில் அதிக ஆண்டு காலம் ஜனநாயக அரசு ஒன்றின் பிரதமராக இருந்தவர் லீ. டோயின்பீயின் சிந்தனைகளால் கவரப்பட்டவர். 'கற்பனைத்திறன் கொண்ட சிறுபான்மையினரே நாட்டை செதுக்குவார்கள்' என்ற அவரது கருத்தில் நம்பிக்கை கொண்டவர்.
இந்தியா - பாகிஸ்தான் பிரிவினை காந்திக்கு எவ்வளவு வருத்தத்தைக் கொடுத்ததோ லீக்கு அந்த அளவு வருத்தம் கொடுத்தது மலேசியா - சிங்கப்பூர் பிரிவினை. இயற்கை வளங்கள் இல்லாத சிங்கப்பூரை மலேசியர்கள் சிலர் ஏற்றுக்கொள்ள மறுத்தனர். அந்த கோபமே லீயின் வைராக்கியமாக மாறி சிங்கப்பூரை வளர்ச்சி பெறச் செய்தது.
அடியாத மாடு படியாது' என்பதில் நம்பிக்கை கொண்டவர் லீ. ''பள்ளியில் படிக்கும்போது நான் தவறு செய்தால் ஆசிரியர்கள் பிரம்பால் விளாசுவார்கள். அதுவே என்னை ஒழுக்கமாக மாற்றியது. அதனால்தான் தவறு செய்வோருக்கு பிரம்படி கொடுக்கும் தண்டனை அமல்படுத்தினேன்'' என்பார்.
விளையாட்டு பொழுதுபோக்கு பிரியர் லீ. கோல்ப் நடனம் நீச்சல் அவருக்கு பிடித்தமானவை. சிகரெட் பீர் பழக்கம் இருப்பதை வெளிப்படையாகவே ஒப்புக்கொண்டவர். ஒரு கட்டத்தில் தொப்பை போடுவதால் பீரை நிறுத்தினார். புகைப்பதால் மக்கள் ஓட்டுப்போட யோசிக்கிறார்கள் என்று உளவுத்துறை சொன்னபோது அதையும் நிறுத்தினார்.
லீயை பொறுத்தவரை புனைவு நூல்கள் குப்பை. அவரே பல நூல்கள் எழுதியிருக்கிறார். அவருக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர் டாம் கிளான்சி.
இன்றைய அரசியல்வாதிகள் லீயிடம் கற்கவேண்டியதில் முக்கியமானது மதச்சார்பின்மை. 'அரசியல்இ பொருளாதாரம் பற்றி ஏதேனும் சொல்ல வேண்டுமானால் உங்கள் மத அங்கிகளை கழற்றிவிட்டு வாருங்கள்'' என்பார் லீ.
அவரது ஆட்சியில் கேள்விகள் கேட்ட எதிர்க்கட்சியினர் பத்திரிக்கையாளர்கள் மனித உரிமையாளர்கள் சிறையில் தள்ளப்பட்டனர். ஊழல்இ வறுமை உள்நாட்டு குழப்பம் என்று சிக்கலாக இருந்த சூழலில் நாட்டை முன்னேற்ற தனக்கு வேறு வழி இல்லை என்றார் லீ.
தன்னைப் பற்றிய சர்ச்சைகளை பொருட்டாக எடுத்துக்கொள்ள மாட்டார். படித்தவர்கள்இ படித்தவர்களையே திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்கிற அவரது கொள்கை மிகுந்த சர்ச்சையைக் கிளப்பியது. மனித அறிவு வளர்ச்சிக்கும் மரபணுக்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக கருதிய லீ அவ்வாறு அறிவித்தார்.
278 Views
348 Views
354 Views
277 Views
என் அபிமான தலைவரை இழந்த நாள் எனக்கு கறுப்பு தினமாகும். சிங்கப்பூர் மக்களுக்கு என் ஆழந்த அனுதாபங்கள் என்று தெரிவித்துள்ளார் நடிகர் ரஜினிகாந்த்.
சிங்கப்பூரின் முதல் பிரதமர் லீ க்வான் யூ நேற்று மரணமடைந்தார்.
ரஜினிகாந்துக்கு மிகப் பிடித்த தலைவர் லீ க்வான் யூதான்.

நேற்று லீ க்வான் யூ மறைவுக்கு அனுதாபம் தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட்டிருந்தார் ரஜினி.
அதில், "என் அபிதான தலைவராகிய லீ க்வான் யூ மறைந்த இந்த நாள் உண்மையாகவே கறுப்பு தினம். சிங்கப்பூர் மக்களுக்கு என் அனுதாபங்கள். புதிய பாதை அமைத்துக் கொடுத்த அவரது மறைவு உண்மையான இழப்பு," என்று ரஜினி தெரிவித்துள்ளார்.
384 Views
இம்முறை உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் இதுவரை நடைபெற்றுள்ள போட்டிகளின் பிரகாரம் அதி கூடிய ஓட்டங்களைப் பெற்ற வீரராக இலங்கை அணியின் சங்கக்கார திகழ்கின்றார்.
அவர் இத்தொடரில் 7 இன்னிங்ஸ்களில் 541 ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.
இத் தொடரிலிருந்து இலங்கை அணி வெளியேறியுள்ளதுடன் , சங்கக்கார சர்வதேச ஒருநாள் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெற்றுள்ளார். எனினும் இப்பட்டியலில் சங்கக்கார தொடர்ந்தும் முதலிடத்தில் உள்ளார்.
சங்கக்கார இத்தொடரில் 4 சதங்களைப் பெற்றதுடன் சாதனைகள் பலவற்றையும் நிலைநாட்டியிருந்தார்.
இத் தொடரில் அதிக ஓட்டங்களைப் பெற்றவர்களின் பட்டியலில் 2 ஆவது இடத்தில் நியூசிலாந்து அணி வீர ர் மார்டின் கப்டில் உள்ளார்.
345 Views
844 Views
294 Views
599 Views
296 Views