Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

கேரளத்துப் பட்சிகள் எல்லாம், வாரி வழங்கும் தமிழ்நாட்டுக்கு படையெடுக்க, இந்த காவ்யா மாதவனோ தமிழ் உள்ளிட்ட ஏனைய மொழிப் படங்களில் நடிக்க மாட்டேன் என்றும், மலையாளத்தில் மட்டுமே நடிப்பேன் என்றும் கதை அளந்துள்ளார்.

வருகின்றவர்கள் அனைவருக்கும் வாய்ப்புக்களும், நல்ல வாழ்க்கையும் கொடுக்கும் கொடம்பாக்கத்தையா வெறுக்கிறீர்கள் அம்மணி என்று கேட்கத் தோன்றியது. ஆனாலும், என்னை உள்ளே விட மாட்டார்கள் என்பதால் பொறுத்துக் கொண்டேன்.

காசி, என்மன வானில், சாதுமிரண்டா போன்ற தமிழ் படங்களில் நடித்தவர் காவ்யா மாதவன். இவர் நீஷால் சந்த்ரா என்பவரை திருமணம் செய்துகொண்டு தனது நடிப்புக்கு முற்றுப் போட்டிருந்தார். இப்பொழுது கணவரைப் பிரிந்து விவாகரத்துப் பெற்றுக் கொண்டு, மீண்டும் தனது தொழிலுக்கு திரும்பியிருக்கிறார். வந்த வேகத்தில் தான் இந்த விளக்கங்களையும் வெளியிட்டுள்ளார்.

திருமணமாகி விட்டது எனபதால், கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என எண்ணாதீர்கள. கதைக்கு தேவைப்பட்டால், எப்படியும் நடிக்க நன் தயார் என காவ்யா மாதவன் ஓபன் டாக் செய்திருக்கிறார்.

அம்மாடி, இது நல்லதுக்கு இல்லைம்மா! இருக்கிற வாய்ப்பும் இல்லாமல் போகப் போகுதுடியோவ் !!

-கோடம்பாக்கக் குருவி-
333 Views
இப்பொழுதுள்ள நாயகிகள் திகில் படங்களிலும், சரித்திர, புராண படங்களிலும் நடிக்க ஆர்வம் காட்டுகின்றனர். ரசிகர்களும் இதுபோன்ற படங்களை விரும்பி பார்க்கிறார்கள். இதுபோன்ற படங்கள் வசூலிலும் சாதனையில் முன்னிலை பெற்றுள்ளன. இந்த நாயகிகளில் முதல் மூன்று முக்கியமானவர்கள் இவர்கள்தான். அனுஷ்கா, நயன்தாரா, த்ரிஷா.

அனுஷ்காவுக்கு ஒரே மாதிரியான படங்கள் குவிகின்றன. ஏற்கனவே ‘அருந்ததி’ படம் அவரை உச்சத்துக்கு கொண்டு போனது. தற்போது ‘ருத்ரமா தேவி’, ‘பாகுபலி’ என இரு சரித்திர படங்களில் நடித்து வருகிறார்.. இவை கதாநாயகி பாத்திரத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதையம்சம் கொண்ட படங்கள் என்பது முக்கியமானது. . ருத்ரமா தேவியில் ராணி வேடத்தில் வருகிறார். குதிரை சவாரி, வாள் சண்டை பயிற்சிகள் பெற்று நடிக்கிறார். இப்படங்களுக்கு பிறகு அனுஷ்கா மார்க்கெட் இன்னும் உயரும் என்கின்றனர்.

நயன்தாரா ‘மாயா’ என்ற பேய் படத்தில் நடிக்கிறார். இதில் வித்தியாசமான வேடத்தில் ஆக்ரோஷமாக வருகிறார். ஏற்கனவே ஸ்ரீராமராஜ்ஜியம் படத்தில் சீதை வேடத்தில் நடித்து பாராட்டுகள் பெற்றார் இந்த அம்மணி என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதுவரை காதல், டூயட் என வந்த திரிஷாவும் தற்போது திகில் படமொன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் என மூன்று மொழிகளில் தயாராகி வருகிறது. விரைவில் நடிக்க ஆயத்தமாகி விட்டார் த்ரிஷா. இவரது பாத்திரம் மட்டும் இரகசியமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது.

இவர்களோடு, லட்சுமிராய், ஹன்சிகா, டாப்சி, ஆண்ட்ரியா ஆகியோர் திகில்  படங்களில் நடித்தவர்கள் என்பதும் முக்கியமானது. அழகிகளை அகோரிகளாக  காட்டுவதில் நம்ம இயக்குனர்களுக்கு என்ன ஆசையோ தெரியாது போங்க.

-கோடம்பாக்கக் குருவி-
324 Views

வந்த வேகத்திலேயே தனது கரகர குரல்மூலம் பல கட்டங்களைக் கடந்து இன்று தனக்கென இடத்தையும் தக்கவைத்துக் கொண்டவர் பாடலாசிரியர் மற்றும் பாடகர் கானா பாலா. ஆண்களை ஏமாற்றி அலைக்கழிக்கும் பெண்களையும், கணவன்களுக்கு துரோகமிழைக்கும் பெண்மணிகளையும் குறிவைத்து தனது பாடலாக்கங்களை படைத்துவரும் இந்த பாடகர் மீது, இயக்குனர் பேரரசு கண்டித்து கொதித்து எழுந்துள்ளார்.

எப்படி இப்படியாக, பெண்களை அவமதிக்கும் பாடல்களை இவர் மட்டும் பாடுகிறார். இவ்வாறு பெண்ணியத்தை இழிவுபடுத்தும் பாடல்களை எழுதுவதியும், பாடுவதையும் கானா பாலா உடனே நிறுத்த வேண்டும். இவ்வாறு இனப் பிரிவுகளையும் வக்கிரங்களையும் தொற்றுவிக்காதீர்கள் என்று பொங்கியுள்ளார் பேரரசு.

இதற்க்கு பதில் வழங்கிய பாலா, நான் ஆசையில் இப்படியான பாடல்களை எழுதவில்லை. இயக்குனர்களே என்னை வற்புறுத்துகிறார்கள். நான் வருகின்ற இப்படியான வாய்ப்புக்களையே பயன்படுத்துகிறேன் என்றுள்ளார்.

-கோடம்பாக்கக் குருவி-
272 Views
ஜெயம் ரவி-ஹன்சிகா நடிப்பில் காதலர்களின் பிடித்தமான திரைப்படமாக ரோமியோ ஜுலியட் ஏப்ரல் மாதம் வெளிவரவுள்ளதாக அடிக்கடி நினைவுபடுத்தினார்கள்.
       ஆனால் வரவில்லை என இப்பொழுது கிடைத்த செய்திகள் கூறுகின்றன. இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் பட்டி தொட்டியெல்லாம் ஆக்கிரமித்துவரும் நிலையில், படம் மட்டும் கொஞ்சம் தள்ளிப் போகிறது.

சமீபத்தில் வந்த தகவலின் படி இப்படம் ஏப்ரல் மாதத்திலிருந்து மே மாதம்வரைக்கும் தள்ளிப்போனதாக கூறப்படுகிறது. நீண்ட இடைவேளைக்கு பிறகு ஜெயம் ரவியை இளமை கொஞ்சும் அழகில் பார்க்கலாம் என்று காத்திருந்த ரசிகர்களுக்கு, இந்த செய்தி கொஞ்சம் கவலையை தருகின்ற செய்தியாக இருக்கும். ஆனாலும், என்ன செய்வது ? பொறுத்திருந்து பார்க்கத்தான் வேண்டியதாகி விட்டது.

-கோடம்பாக்கக் குருவி-
277 Views


வெங்கட்பிரபு இயக்க சூர்யா நடித்து வரும் 'மாஸ்' படத்தின் உரையாடல் பகுதிகளின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. தற்போது இந்த படத்தின் டப்பிங் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. மாஸ் எதிர்வரும் மே மாதம் 1ஆம் திகதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இறுதிக்கட்டப் பணிகளில் வெங்கட்பிரபு கடுமையாக உழைத்து வருகிறார்.

இந்நிலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினமாக இருப்பினும், இந்த படத்தின் டப்பிங் பணிகளுக்காக சூர்யா மற்றும் வெங்கட்பிரபு ஆகிய இருவரும் பணியாற்றியுள்ளனர். இருவரும் டப்பிங் தியேட்டர் முன்னிலையில் எடுத்து கொண்ட செல்பி புகைப்படம் சூர்யாவின் அதிகாரபூர்வ சமூக இணையதள பக்கத்தில் நேற்று வெளியாகியுள்ளது. இதனைக் கொண்டு நம்மவர்கள் ஊகித்துள்ளதும் இறுதியில் சரியாகவே தெரிந்துள்ளது.

உழைத்தால் மட்டுமே முன்னேற முடியும் மக்கள்ஸ்.

-கோடம்பாக்கக் குருவி-
278 Views
ஜெயம் ரவி த்ரிஷா, அஞ்சலி நடித்துவரும் படம் அப்பாடக்கர். படுவேகமாக வளர்ந்துவரும் திரைப்படம் இந்தப்படம். எல்லா நட்சத்திரங்களும் பரபரப்பாக நடித்துவருகின்ர படமாகவும் எதிர்பார்ப்பை பல கோணங்களில் திருப்பி விட்டுள்ள படமும் அப்பாடக்கர்.

இந்நிலையில், இந்தப் படத்தில் ஒரு குத்துப் பாடலை இணைக்க இயக்குனர் சுராஜ் முடிவு செய்துள்ளார். இதனால், இசையமைப்பாளர் எஸ்.தமனிடம் தன் எண்ணத்தை அப்படியே ஒப்புவித்துள்ளார்.

அவரும் அதற்க்கேற்ப, ஒரு குத்துப்பாடலை உருவாக்கி விட்டு இந்தப் பாடலை சிம்புவும், அவரோடு சுப்பிரமணியபுரம், கனிமொழி, போராளி, இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, வடகறி போன்ற படங்களில் நாயகியாக நடித்திருக்கும் ஸ்வாதி ரெட்டி பாடினால் சிறப்பாக வருமென எண்ணியுள்ளார்கள்.

இதனடிப்படையில், ஸ்வாதியும் சம்மதித்து சிம்புவுடன் இணைந்து பாடுவதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார். ஆக, சிம்புவுடன் இணைந்து பாடுவதற்கு சரி அம்மணி. நடிக்க ஆசைப்பட்டு விடாதீர்கள்.
ஹீ ஹீ ஹீ ஹீ

-கோடம்பாக்கக் குருவி-
262 Views
தமிழில் ஒரு காலத்தில் சதாவும் முன்னணி நடிகைதான் . ஷங்கரின் அந்நியன் படம் அந்த அந்தஸ்தை அவருக்கு கொடுத்தது . ஜெயம் திரைப்படம் மூலம் சதாவை அணைத்துகொண்ட தமிழ் சினிமா புலிவேஷம் படத்தோடு அவரை கைகழுவி விட்டது .
திறமையான நடிகைதான் ஆனால் போட்டிகள் புது வரவுகள் இவரை ஓரம் கட்ட வைத்தது . மீண்டும் தெலுங்கு தேசம் சென்றார். ஆனால் அங்கும் இதே நிலைதான். ஆனாலும் ... மீண்டும் வாழவைக்க வடிவேலு இவரை அழைக்கிறார் தமிழுக்கு!

இந்த காமெடி கிங் நடிக்கும் எலி படத்தில், ஒரு முக்கிய வேடத்திற்காக இவர் மீண்டும் அழைக்கப்பட்டிருக்குறார். இன்னும் சில நாட்களில் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார் ....

ஆக புலியோடு போனவர் எலியோடு வருகிறார்

- கந்தப்பன் பிரசாந்த் -
317 Views
கிரிக்கெட்டின் தாய் விளையாட்டுக்கு கோச்சராக நடிக்கிறாராம் நம்ம சமுத்திரகனி, நீங்க குழம்புறது புரியுது .

இதுக்கும் கோச்சரா? அதை இயக்குனரிடம் கேட்டால் படம் பார்த்து தெரிந்து கொள்ளட்டாம் ....பாதிப்படப்பிடிப்பு முடிந்து விட்ட பெட்டிகடைக்கு இன்று விடுமுறை என்ற புதிய படத்தில்தான் இவர் கில்லி விளையாட்டின் கோச்சராக நடிக்கிறாராம்

வித்தியாசமான கதாபாத்திரங்களை சவாலாக தேடிச்சென்று நடித்து அதில் பெயரும் வாங்கியவர் இந்த தனித்துவ இயக்குனரும் சிறந்த குணச்சித்திர நடிகருமான சமுத்திரகனி. அப்போ இந்த படத்திற்கும் சிறந்த நடுநிலைமை வகித்து வெற்றியை தீர்மானிப்பார் என்று நாமும் எதிர்பார்க்கலாம் .

-கந்தப்பன் பிரஷாந்த்-
287 Views

‘ஆச்சி’..!

தலைமுறைகளின் சாட்சியாக உலாவரும் மனோரமா, இன்று தன் இல்லத்தில் ஓய்வில் இருக்கிறார். உடல் நலக் குறைவு காரணமாக வீட்டைவிட்டே வெளியே வராதவரைப் பற்றிய வதந்தி மட்டும் உலகம்  முழுக்கப் பரவுகிறது.

”வாழ்க்கையில எல்லா இன்ப துன்பங்களையும் பார்த்துட்டேன். அதுல, ‘நான் இன்னும் உயிரோடத்தான் இருக்கேன்’னு நானே சொல்ற கொடுப்பினையும் எனக்குக் கிடைச்சிருச்சு. இதுக்கு மேல என்ன இருக்கு தம்பி?” – விரக்தியைக்கூட அத்தனை வாஞ்சை நிரம்பிய குரலில்தான் சொல்கிறார் ஆச்சி.

”என்ன பேசணும் என்கிட்ட..? எனக்கு எதுவுமே ஞாபகம் இல்லையே தம்பி! நான் என்னனு பேசுறது?” – கைகளைப் பிசைந்தபடி யோசிப்பவர், ஆழ்ந்த அமைதிக்குச் செல்கிறார். திடுக் திடுக்கெனத் தூக்கிப்போட்டதுபோல, நினைவுகளைச் சேகரித்துப் பேசுகிறார்.

”அப்போ தினமும் ஷூட்டிங் இருக்கும். அதிகாலையிலயே எந்திரிச்சு, குளிச்சு முருகனைக் கும்பிட்டுக் கிளம்பிருவேன். விடியக்காலையில போய் விடிய விடிய நடிச்சிருக்கேன். களைச்சுப்போய் வந்தா, வீட்லயும் அவ்வளவு வேலை இருக்கும். இப்போ காலையில எந்திரிச்சா, கொஞ்சம் ஓட்ஸ் குடிக்கிறேன்.

அப்புறம் மதியம் வரை பொழுது போக்கணும். மதியச் சாப்பாடு கொஞ்சம் சாதம். தூங்கி எந்திரிச்சா சாயங்காலம் ஆகிடும். பல்லைக் கடிச்சுட்டே உக்கார்ந்திருந்தா, ராத்திரி டிபன் வந்துரும். நடு நடுவுல மருந்து மாத்திரை. எதையோ பிடிக்கப்போறதா நினைச்சு ஓடிட்டே இருந்த என்னோட வாழ்க்கை, இப்போ பத்து பதினைஞ்சு மாத்திரையில சுருங்கிருச்சு.”

முதல் பாராட்டு!

”பள்ளிக்கூடம் போறப்பவே நான் நல்லா பாடுவேன். செட்டிநாடு பகுதிகள்ல நாடகம் போடுறப்ப ஆண்கள்தான் பெண் வேஷம் கட்டி ஆடுவாங்க; நடிப்பாங்க. மேடைக்குப் பின்னால இருந்து குரல் கொடுக்கவும் பாடவும் மட்டும்தான் பெண்களைப் பயன்படுத்துவாங்க. அப்போ எனக்கு 15 வயசு இருக்கும். ‘அந்தமான் கைதி’னு ஒரு நாடகத்துல மேடைக்குப் பின்னாடி இருந்து நான் பாடினேன்.

‘நல்லா பாடுதே இந்தப் பொண்ணு’னு எல்லாரும் சொல்லவும் நிறைய வாய்ப்புகள் வந்துச்சு. அப்படியே மேடை ஏறி நடிக்கும் வாய்ப்பும் வந்தது. ‘யார் மகன்?’னு ஒரு நாடகத்துல நான் ஹீரோயினா அறிமுகம் ஆனேன்.

அந்த நாடகத்துக்குத் தலைமை, இயக்குநர் வீணை எஸ்.பாலசந்தர். நாடகத்தில் என்கூட நடிச்ச ஒரு நடிகைக்கு, எஸ்.பாலசந்தர் கையால் பரிசு கொடுக்கச் சொன்னார் ஒருவர். அப்போ அவர் சொன்னார்… ‘நான் இந்தப் பரிசைக் கொடுப்பதாக இருந்தால், இதில் ஹீரோயினாக நடித்த பெண்ணுக்குத்தான் கொடுப்பேன்’னு சொல்லி என்னை வெளிப்படையாப் பாராட்டினார். அந்த முதல் பாராட்டுத்தான் என் சினிமா பயணத்துக்கான ஆரம்பம்.”

முதல் புகைப்படம்!

”ஆரம்பத்தில் ஒரு நாடகத்துக்கு 10 ரூபாய் சம்பளம் வாங்கினேன். அது 40 ரூபாயாக உயர்ந்த சமயம், புதுக்கோட்டையில் பி.ஏ.குமார்னு ஒருத்தர் ஒரு திரைப் படத்தைத் தயாரிக்க முன்வந்தார். அவரே இயக்குநர். எஸ்.எஸ்.ராஜேந்திரன் அண்ணன், தேவிகா, நான்… எல்லாரும் படத்துல நடிக்கிறதுக்காக அவரோட வீட்ல தங்கியிருந்து ரிகர்சல் பார்த்துட்டு இருந்தோம்.

அப்போ 15 வயசுல எனக்கு மேக்கப் போட்டு அவர் எடுத்ததுதான் என் முதல் புகைப்படம். அந்தப் படத்தை அப்புறம் பார்க்கிறப்ப எல்லாம் எனக்கே பொறாமையா இருக்கும். குமார் வீட்டு மாடியில இருந்த குடிசை திடீர்னு எரிஞ்சிருச்சு.

அதை அவர் அபசகுனமா நினைச்சார்போல, ‘நான் சினிமாவே எடுக்கலை. நீங்கள் எல்லாம் கிளம்புங்க’னு அனுப்பி வெச்சுட்டார். அப்போ 15 வயசுல எனக்குப் பழக்கமான எஸ்.எஸ்.ராஜேந்திரன் அண்ணன்தான், சில வருஷம் கழிச்சு என்னை சென்னைக்கு வரவெச்சு கலைஞர் எழுதிய ‘மணிமகுடம்’ நாடகத்தில் ஹீரோயினா நடிக்கவெச்சார்.”


நகைச்சுவை நடிகையாக மாற்றிய கண்ணதாசன்!

”சென்னைக்கு நான் கிளம்புறப்பவே எனக்கு பூபதி பிறந்துட்டான். அவனையும் கைப்பிள்ளையா தூக்கிட்டு வந்துதான் நான் நாடகத்தில் நடிச்சேன். எனக்கு சென்னையில் யாரையும் தெரியாது. எஸ்.எஸ்.ஆர் அண்ணன்தான் அவரது வீட்டு மாடியில் தங்கவெச்சார். ‘மணிமகுடம்’ நாடகத்தை சென்னை, சேலம், வேலூர், குடியாத்தம் போன்ற ஊர்கள்ல மாசக்கணக்கில் நடத்தினோம்.

பல நாடகங்களில் நடிக்கும் வாய்ப்பு தேடி வந்தது. பேரறிஞர் அண்ணாவுக்கு ஜோடியா நடிச்சேன்; ‘உதயசூரியன்’ நாடகத்தில் கலைஞருக்கு ஜோடியா நடிச்சேன். ‘மணிமகுடம்’ நாடகத்தில் என் நடிப்பைப் பார்த்துட்டு, கவிஞர் கண்ணதாசன் ‘மாலையிட்டமங்கை’ படத்தில் என்னை நடிக்கச் சொன்னார்.

ஆனா, அது ஹீரோயின் பாத்திரம் இல்லை… காமெடி ரோல். ‘எனக்கு நகைச்சுவையா நடிக்கத் தெரியாது. நான் இதுவரை நாடகத்தில் ஹீரோயினாத்தான் நடிச்சிருக்கேன்’னு சொன்னேன். அப்போ கண்ணதாசன், ‘நீ சினிமாவுல ஹீரோயினா நடிச்சா ரெண்டு, மூணு வருஷம்தான் ஃபீல்டில் இருக்க முடியும். ஆனா, காமெடி நடிகையா நடிச்சா, ஆயுசுக்கும் நடிச்சுட்டே இருக்கலாம்’னு சொன்னார். நான் சமாதானமாகி நடிச்சேன். இப்போ யோசிச்சா அவர் சொன்னது நூத்துக்கு நூறு சரினு தோணுது.

கடவுள் புண்ணியத்துல சினிமாவில் நல்லா சம்பாதிச்சேன். ஆரம்பத்துல ஆயிரம், ரெண்டாயிரம்னுதான் சம்பளம் கொடுத்தாங்க. முதன்முதலா தேவர் ஃபிலிம்ஸ்காரங்கதான் ‘வேட்டைக்காரன்’ படத்துக்காக 10 ஆயிரம் ரூபாய் சம்பளம் கொடுத்தாங்க. அப்போ அது ரொம்பப் பெரிய சம்பளம்.

சினிமாவில் நடிக்க ஆரம்பிச்ச சில வருஷங்களிலேயே, ஜானகிராம் தெருவில் 22 ஆயிரம் ரூபாய்க்கு மூணு கிரவுண்டு நிலத்துல ஒரு வீட்டை வாங்கினேன். சினிமாவில் நான் நடிக்கவும் அவ்வளவு சம்பாதிக்கவும் காரணமா இருந்தது அண்ணன் எஸ்.எஸ்.ராஜேந்திரன்தான். அண்ணன் இறந்தது, என் கூடப்பிறந்த அண்ணனையே இழந்துட்டது மாதிரி இருக்கு!”

கல்யாணம் எனும் கசப்பு!

”என்கூட நாடகங்களில் வில்லனாக நடிச்சவர் எஸ்.எம்.ராமநாதன். எனக்கும் அவருக்கும் ஏற்பட்ட பழக்கத்தை நான் காதல்னு நம்பினேன். திருச்செந்தூர் முருகன் கோயிலில் வெச்சு அவரைக் கல்யாணம் பண்ணிக்கிட்டேன். எனக்காகச் சாட்சிக் கையெழுத்துப் போட்டது நான் அண்ணனா நினைச்ச சக நடிகர் எஸ்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி. அப்புறம் நான் கர்ப்பமாகி ஒன்பது மாதம் வரைக்கும் நாடகத்தில் நடிச்சுட்டு, பிள்ளை பெத்துக்க என் சொந்த ஊரான பள்ளத்தூருக்கு வந்துட்டேன்.

குழந்தை பிறந்து 16-வது நாள் என்னை வந்து பார்த்தார் என் கணவர். அதுக்கு அப்புறம் அவர் என்னைப் பார்க்கவே இல்லை. என்னையும் பிள்ளையையும் காப்பாத்திக்க நான் சென்னை வந்து சினிமாவில் நடிக்க ஆரம்பிச்ச சமயம், விவாகரத்து கேட்டு நோட்டீஸ் அனுப்பினார்.

என் திருமண வாழ்க்கை எனக்கு மிகப் பெரிய ஏமாற்றம். அப்புறம் அவர் ரெண்டாவது கல்யாணம் பண்ணிக்கிட்டார். அவரோட ரெண்டாவது சம்சாரம் யார் தெரியுமா? எங்க கல்யாணத்துல எனக்காகச் சாட்சிக் கையெழுத்து போட்டாரே எஸ்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி… அவரோட தங்கச்சி. நானும் எல்லாத்தையும் மறந்துட்டு அம்மாவை மட்டும் துணைக்கு வெச்சுட்டு வாழப் பழகிட்டேன்.

நடிப்பு, நடிப்பு, நடிப்புன்னே ஓடிட்டு இருந்தேன். என் கணவர் இறந்த தகவல் கிடைச்சப்போ, நானும் பூபதியும் கிளம்பினோம். அப்போ என் அம்மா, ‘அந்த ஆளோட என்ன பெருசா வாழ்ந்து கிழிச்ச… இப்போ எதுக்குப் பார்க்கப்போற?’னு கேட்டாங்க.

ஆனா, எனக்கு மனசு கேட்கலை. நான் போனேன். பூபதியை அவர் வளர்க்கவும் இல்லை; படிக்கவும் வைக்கலை. அவரோட ரெண்டாவது சம்சாரத்துக்குக் குழந்தையே கிடையாது. அவருக்கு பூபதிதான் கொள்ளி போட்டான். அவருக்குக் கொள்ளிபோட ஒரு மகனைப் பெத்துக் கொடுத்தேன். அதுதான் எனக்கும் என் புருஷனுக்குமான ஒரே பந்தம்.”

என் அம்மா!

”என் அப்பா, என் அம்மாவின் தங்கச்சியையும் கட்டிக்கிட்டார். அப்பாவும் சின்னம்மாவும் சேர்ந்து என் அம்மாவைத் துரத்திவிட்டுட்டாங்க. நான் பத்து மாசக் குழந்தையா இருந்தப்போ, என் அம்மா ராமாமிர்தம் என்னைத் தூக்கிட்டு பள்ளத்தூருக்கு வந்துட்டாங்க. வீட்டு வேலை செஞ்சு என்னைப் படிக்கவெச்சாங்க. ஒரு கட்டத்துல அவங்களுக்கு உடம்பு முடியாமப்போச்சு. இல்லைன்னா என்னை இன்னும் நல்லா படிக்கவெச்சிருப்பாங்க. அம்மா கடைசி வரை என் கூடவேதான் இருந்தாங்க.

ஒருநாள் நான் அதிகாலையில் ஷூட்டிங் கிளம்பும்போது அம்மா இறந்துட்டாங்க. ‘இனிமே என்ன பண்ணப்போறோம்?’னு நான் திக்பிரமை பிடிச்ச மாதிரி உட்கார்ந்துட்டேன். அம்மா இறந்த தகவல் தெரியவும் சிவாஜி அண்ணன் உடனே கிளம்பிவந்துட்டார்.

அவருக்கு என்னைப் பத்தி, என் குடும்ப வாழ்க்கை பத்தி எல்லாமே நல்லா தெரியும். ‘இங்க பாரும்மா… நீ எதுக்கும் கவலைப்படாதே. எப்போ எடுக்கிறதுனு மட்டும் சொல்லு. மத்ததை நான் பார்த்துக்கிறேன்’னு சொல்லிட்டுப் போய் ஒரு வெண்பட்டுப் புடவையும், துளசி மாலையும் வாங்கிட்டு வந்தார். தலைப்பாகை கட்டிக்கிட்டு என் அம்மாவைக் குளிப்பாட்டி பட்டுப்புடவை போத்தி அம்மாவுக்கு ஒரு மகனா, எனக்கு அண்ணனா நின்னு எல்லா காரியங்களையும் செஞ்சார். அந்தவகையில் எங்க அம்மாவுக்கு அது நல்ல சாவு.”

உடல் நலம்!

”கொஞ்சம் நாள், உடம்புக்கு ரொம்ப முடியாம இருந்துச்சுப்பா. 15 வயசுல இருந்து ஓடிட்டே இருந்தேன்ல… அதான் இப்போ ஓய்வு தேடுது. எத்தனை வருஷ ஓட்டம்… என்னா உழைப்பு. அப்பப்பா! இப்போ நினைச்சா எனக்கே ஆச்சர்யமா இருக்கு. என் ரெண்டு மூட்டுகளும் தேஞ்சிருச்சு. அதனால செயற்கை மூட்டுகள் பொருத்தியிருக்காங்க. மத்தபடி நான் நல்லாத்தான் இருக்கேன். இன்னும் நிறைய நடிக்கணும்னுதான் ஆசை. எங்கே..?!

என்கூட ‘மணிமகுடம்’ நாடகத்துல சம்பத்குமாரினு ஒருத்தங்க நடிச்சாங்க. இப்போ அவங்க பெங்களூருவுல இருக்காங்க. சென்னை வந்தா என்னைப் பார்த்துட்டுப் போவாங்க. நடிகை லட்சுமி அடிக்கடி போன்ல விசாரிப்பாங்க, எம்.என்.ராஜம் அடிக்கடி பேசுவாங்க.

சிவகுமார் அப்பப்போ நேர்ல வந்து விசாரிச்சுட்டுப் போவார். அவங்க எல்லாரும் அந்தக் காலத்துல பழக்கமானவங்க. இப்ப உள்ளவங்களுக்கு என்னை வந்து பார்க்கணும்னு எந்த அவசியமும் இல்லையே…

அண்ணா, கலைஞர், என்.டி.ஆர்., எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா…னு ஐந்து முதலமைச்சர்களோடும், நான்கு தலைமுறை நடிகர்களோடும் நடிச்சிருக்கேன்னு நானா என் கதையை என்கிட்டயே சொல்லிட்டு இருக்கேன் தம்பி. சினிமாவில் காமெடி காட்சிகள்ல மட்டுமே நடிச்ச எனக்கு, நிஜ வாழ்க்கையில அது மருந்துக்குக்கூட இல்லாம போச்சு!” – சிரித்துக்கொண்டேதான் சொல்கிறார் ஆச்சி!

===== CASTRO RAHUL=====
348 Views
கடந்த 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐ பீ எல் இன் போது பொலிவூட் நடிகர் ஷாருக்கான் மைதானத்தில் வைத்து ரகளையில் ஈடு பட்டமைக்காக அவர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தன இதன் மூலம் அவருக்கு அந்த மைதானத்துக்கு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. இப்போது அவர் மீது இன்னுமொரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது, .அந்த சந்தர்ப்பத்தில் அவர் நடந்த விதம் பற்றி ஊடகங்களில் பெரிதாக பேசப்பட்டிருந்தன கெட்ட வார்த்தைகளை அதிகமாக பிரயோகித்தார் என்று அவரின் ரசிகர்கள் கூட இதை விமர்சித்த்திருந்தார்கள். அவர் அந்த வார்த்தைகளை பயன் படுத்திய போது அதிகளவான சிறுவர்கள் இருந்தார்கள் என்று இப்போது மீண்டும் எல்லோரின் விமர்சனங்களுக்கு தள்ளப்பட்டு தவிக்கிறார்.

இந்நிலையில் அந்த சம்பவத்தின் போது குழந்தைகளின் முன்னால் தகாத வார்த்தைகளை பயன் படுத்தியது குறித்து ஷாருக்கான் மீது அமித் மரு என்ற சமூக ஆய்வாளர் மகாராஷ்டிரா மாநில குழந்தைகள் பாதுகாப்பு உரிமைகள் ஆணையத்திடம் புகார் அளித்தார். இதன் பின்னர் குழந்தைகள் முன்னால் தகாத வார்த்தைகளை கூறியமைக்காக வழக்கு தொடருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
325 Views

குறுகிய காலத்திலேயே பலரின் மனதை கொள்ளைகொண்ட நாயகன் சிவகார்த்திகேயன் பலகுரல் கலைஞனாக தொலைக்காட்சியில் கால் பதித்து தொகுப்பாளராகி நாயகனாக அவதாரம் பெற்றவர் என்பது எல்லோருக்கும் தெரிந்ததே நகைச்சுவை நாயகனாக வலம் வந்த கார்த்தி Action நாயகனாக நடித்து வெளிவந்த படம் காக்கிசட்டை.
இந்த படத்தின் வெற்றியை ரசிகர்களோடு பகிந்துகொள்ள எண்ணிய சிவா நேற்று டிவிட்டரில் ரசிகர்களோடு சாட்டிங் மூலம் கலந்துரையாடினார் இதோ உங்களுக்காக அந்த chat

 

கேள்வி:ரஜினிமுருகன் படத்திற்கு பிறகு உங்களின் அடுத்த படம் என்ன?

பதில்: இன்னமும் நான் அது குறித்து முடிவு செய்யவில்லை.

 

கேள்வி: சமீப வருடங்களாகவே தமிழ் நாடுகேரளாகர்நாடகா என பிசி வகுப்பு மக்களிடம் அதிகம் பேசப்படுவது நீங்கள் மட்டுமே என்ன செய்கிறீர்கள் அதற்கு?

பதில்: எனக்கு தெரிந்து பார்வையாளர்கள் என்னிடம் சிறப்பான இணைப்பில் உள்ளனர். பலரும் என்னை சகோதரனாக, நண்பனாக உணர்கீறார்கள். மேலும் காமெடியும் மற்றொரு காரணம்.

 

கேள்வி: தனுஷ் படங்களில் உங்களுக்கு பிடித்த படம்

பதில்: புதுபேட்டை தான் தனுஷ் படத்தில் என் மனம் கவர்ந்த படம்.

 

கேள்வி: பாண்டிராஜ் தானா உங்களுக்கு கே.பி?

பதில்: தேசிய விருது பெற்ற இயக்குநர் . அவரது படத்தில் எனக்கு முதல் வாய்ப்பு கிடைத்தது பெருமை.

 

கேள்வி: விஜய் சேதுபதியை உங்களுக்கு போட்டியாக நினைக்கிறீர்களாஅவரது படங்களில் உங்களுக்கு பிடித்த படம்?

பதில்: எனக்கு போட்டிகளில் நம்பிக்கை இல்லை. அவரது படங்களில் பீட்சா எனக்கு பிடிக்கும்.

 

கேள்வி: அஜித்தை சந்தித்த தருணம் பற்றி?

பதில்: அவருடன் 5 மணி நேரம் பேசினேன். வாழ்க்கைக்கு தேவையான தன்னம்பிக்கை கிடைத்தது போல் உணர்கிறேன்.

 

கேள்வி: விஜய்யை பற்றி உங்கள் கருத்து?

பதில்: அவர் Complete Entertainer

 

கேள்வி:உங்கள் வாழ்கையின் சிறந்த தருணம் எது?

பதில்:விஜய் சார் இடமிருந்து பெற்ற விருது அதை அப்பாவுக்கு சமரப்பணமாக்கியது.

 

கேள்வி:இந்த புகழின் காரணமாக நீங்க இழந்த ஒன்று

பதில்:எதுவும் இல்லை

 

கேள்வி:உங்களை Action நாயகனாக பார்ப்பதற்கு சந்தோஷம். இருப்பினும் உங்களின் நேரத்திற்கேற்ற நகைச்சுவையை மிகவும் விரும்புகின்றோம் மீண்டும் வாய்ப்பு கிடைக்குமா?

பதில்: "ரஜினி முருகன்" முழு நகைச்சுவை திரைப்படம்

 

கேள்வி:அனிருத்தின் இசை பற்றி?

பதில்:Energetic

 

கேள்வி:தனுஷின் போன் நம்பர எப்படி save பண்ணிருக்கிங்க?

பதில்:Genius

 

கேள்வி:விஜய் சேதுபதியின் தயாரிப்பில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால்?

பதில்:நல்ல கதையாக இருந்தால் நான் தயார்

 

கேள்வி:நகைச்சுவையா அதிரடியா பிடிக்கும்

பதில்:நகைச்சுவை

கேள்வி:ஸ்ருதிஹாசன் பற்றி இரண்டு வார்த்தை?

பதில்:எளிமையானவர் சிறந்தவர்   

கேள்வி:தலைவர் படத்த எப்போ இருந்து முதல் நாள் முதல் ஷோ பாக்க ஆரம்பிச்சிங்க?

பதில்:தளபதி படத்துல இருந்து

 கேள்வி:நீங்க எப்போ வில்லன் கதாபாத்திரத்தில நடிக்க போறீங்க?

பதில்:முதல் நான் சிறந்த நடிகனாகணும் பிறகு பார்ப்போம்

 

என்று இதுபோல் பல கேள்விகளுக்கு மனதில் தோன்றிய பதில்களை கூறினார்.

 

-சிவகர்த்திகேயனின் டிவிட்டரில் இருந்து சுட்டது வர்ஷி-

361 Views

இந்திய மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான காலிறுதிப் போட்டியின் போது வழங்கப்பட்ட நடுவர்களின் தீர்ப்புகள் சில பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தன.

இப்போட்டியில் பங்களாதேஷ் அணி தோல்வியடைந்தமைக்கு காரணம் நடுவர்களின் தீர்ப்பே என பங்களாதேஷ் ரசிகர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.


இந்நிலையில் பங்களாதேஷ் நாட்டின் பிரதமர் ஷேய்க் ஹசீனாவும் தமது அணியின் தோல்வி தொடர்பில் நடுவர்களை சாடியுள்ளார்.


மெல்பேர்னில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வொன்றில் பங்களாதேஷ் அணி வீரர்கள் மற்றும் அணியின் முகாமைத்துவத்தைச் சேர்ந்த சிலரும் கலந்துகொண்டுள்ளனர்.


இதன்போது அங்கு அழைப்பை மேற்கொண்டுள்ள பங்களாதேஷ் பிரதமர் ஹசினா, வீரர்களிடம் உரையாற்றியுள்ளார்.


இதன்போது அவர் தெரிவித்துள்ளதாவது; " நடுவர்கள் தவறான தீர்ப்பை வழங்காமல் இருந்திருந்தால் நாம் வெற்றி பெற்றிருப்போம்.இன்ஷா அல்லா, பங்களாதேஷ் எதிர்காலத்தில் வெற்றிபெறும். பங்களாதேஷ் ஒருநாள் உலக சாம்பியன்களாகும்" என்றார்.


தொடரில் சிறப்பாக செயற்பட்ட வீரர்களுக்கும் அவர் வாழ்த்து தெரிவித்துள்ளதுடன் வீரர்களை கவலையடைய வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளார்.


மேலும் நாங்கள் எவ்வாறு தோற்கடிக்கப்பட்டோம் என்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள் எனவே கவலைப்பட தேவையில்லையெனவும் தெரிவித்துள்ளார்.


இதேவேளை பங்களாதேஷ் பிரதமரது கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நாட்டின் தலைவரொருவர் கிரிக்கெட் தொடர்பில் குறிப்பாக நடுவரின் தீர்ப்பு குறித்து கருத்து வெளியிடுவதானது ராஜதந்திர ரீதியில் ஏற்றுக்கொள்ளக் கூடியதொன்றல்லவென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

313 Views
 தன்னிகரில்லா  தலைவன் இத் தரணிக்கு விடை கொடுத்த நாள் இந்நாள் தன் தேசத்திற்கு ஒளியேற்றிய ஓர் சுடர்  ஒளியிழந்த நாள் இந்நாள்

ஆம் லீ குவான் யூ ! ..

ஆத்மார்த்தமாய் தன் தேசத்தை நேசித்த இணையற்ற பெரும் தலைவன், நேரிய பார்வை நிமிர்ந்த நடை பகை வரினும் மனம் தளராது  தன் தேசத்தின் மான்பிற்க்காகவும் எழுச்சிக்காகவும் போராடிய நற்குணம் இவை தான் இந்த தலைவனின் அடையாளங்கள்

1923 செப்டம்பர் 16 ஓர் குழந்தையின் ஜனனம் ஆனால் அந்தக் குழந்தை உலகத்தையே தன் பக்கம் ஈர்க்கப் போகும் மாபெரும் தலைவனாக மாறப் போகின்றான் என்று அப்போது யாரும் எண்ணியிருக்க மாட்டார்கள் ஆனாலும் மாற்றம் ஒன்றே தன் தேசத்தின் ஏற்றத்திற்கு தேவை என்பதை உணர்ந்தவராய் எத்தனையோ விமர்சனங்களையும் தாண்டி தன் இலக்கு நோக்கி நடை பயின்றார்,ஈற்றில் வெற்றியும் கண்டார் ..கடும் போக்கு வாதி என பலராலும் அறியப்பட்டாலும் கனிவான உள்ளம் கொண்ட லீ நெகிழ்வுப் போக்குடன் காலத்திற்கு தேவையான கொள்கைகளை வகுத்து காலத்தால் அழியாத தலைவனாகவும் மாறி விட்டார் ..
..பிரித்தானியாவின் காலனித்துவ பிடிக்குள் இருந்து விடுபட கடுமையாக போராடிய லீ குவான் மலேசியாவின் கரங்களில் இருந்து விடுபடவும் கரம் கொடுத்தார்  மூன்று தாசாப்ததிற்கு மேலாக ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த இத் தலைவனின் சரிதம் அவர் வாழ்ந்த காலத்தின் பிரதிபலிப்பு. இயற்கை வளங்கள் பெரிதளவில் இல்லா தேசத்தை உலகின் முன் பெருமை படுத்தி ஒரு சாதாரண துறைமுகம் என்ற நிலையில் இருந்து சிங்கபூரினை பிரகாசிக்கும் வர்த்தக மையமாக உருவாக்கி  ஒரு அபரிதமான மாற்றத்தையும்  ஏற்படுத்தினார்.
          இத்தகைய மக்கள் தலைவன் பங்குனி திங்கள் 23 ஆம் நாள் இப் பாரிட்க்கு விடை கொடுத்தாலும் காலம் உள்ள வரை காவியத் தலைவனாக மக்கள் மனங்களில் என்றும் வாழ்ந்து கொண்டே இருப்பார் ..............

375 Views
அட்டக்கத்தி மூலம், தமிழ் சினிமாவில் காலடி பதித்தவர் நடிகை நந்திதா. இதன்பின்னர் தனது தேர்ந்த நடிப்பால் பல படங்களை கையகப்படுத்தினார். அழகான பக்கத்து வீட்டுப் பொண்ணு போல வந்த நடிகைக்கு,இப்பொழுது நல்ல வரவேற்பை நம்ம சினிமா வழங்கியுள்ளது.

இப்பொழுது, நந்திதாவின் கைகளில் 4 படங்கள் இருப்பதாகவும், இன்னொரு பெயரிடப்படதாத படத்தில் நடிகர் சிவாவுடன் இணைந்து நகைச்சுவையில் வெளுத்து வாங்கியுள்ளதாகவும் சொல்கிறார் அம்மணி.

இவற்றோடு, அறிமுக இயக்குனர் திலீப் சுப்புராயன் இயக்கத்தில் அஞ்சல எனும் படத்தில் நடித்து வரும் நிலையில், இப்படத்தில் மதுரையைச் சேர்ந்த பெண்ணாக நடித்து அசத்தியுள்ளார் இந்த அட்டக்கத்தி நந்திதா. இப்பிடியே முன்னேறினால் நல்லது அம்மணி.

-கோடம்பாக்கக் குருவி-
725 Views
நீண்டகால இடைவெளிக்கு பின்னதாக நம்ம பிரஷாந்த் தனது தந்தை தியாகராஜன் தயாரிப்பில் நடித்துவரும் படம் சாகசம். மிகப்பெரும் நம்பிக்கையோடு காத்திருக்கிறார் தமிழ் சினிமாவில் விட்ட இடத்தை மீண்டும் கைப்பற்றிக் கொள்ள வேண்டும் எனது அவரது நோக்கம்.

தெலுங்கில் மிகப்பெரிய ஹிட் படமான ஹுலாஜி எனும் படத்தின் ரீமேக் தான் இந்தப்படம். இதில் பிரசாந்த், அபிதா, அபி சரவணன், நாசர், துளசி, தம்பி ராமையா, எம்.எஸ்.பாஸ்கர் உள்பட பலர் நடித்துள்ள இந்த திரைப்படத்தை அருண்விஜய் வர்மா இயக்குகிறார். இசைப் பணியை எஸ்.தமன் ஏற்றுக்கொண்டுள்ளார்.

இந்நிலையில், படப்பிடிப்புக்கள் நிறைவடைந்துள்ளதாகவும், இன்னும் இரண்டு பாடல்கள் மாத்திரமே மீதமுள்ளதாகவும் படக்குழு அறிவித்துள்ளது. அத்தோடு இந்தப் பாடல்களை ஜப்பான் மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளில் எடுக்கவுள்ளதாகவும் கூறுகிறார்கள்.

பிரஷாந்துடன் ஒரு பாடல் காட்சியில் அவுஸ்திரேலிய நடிகை ஒருவரை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் படக்குழு தெரிவித்துள்ளது. அப்போ பிரஷாந்துடன் அவுஸ்திரேலிய நடிகையும் இணைந்து சாகசம் செய்யவுள்ளார்கள் என்பது பொருத்தமானது.

-கோடம்பாக்கக் குருவி-
307 Views
[1]      «      1713   |   1714   |   1715      »      [1754]




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top