ஹிந்தியில் முன்னணியிலும் அத்தோடு பல இதயங்களையும் இரசிகர்களையும் கவர்ந்துள்ள இளமைமையான நடிகர் ஷாகித் கபூர். இஸ்க் விஸ்க் திரைப்படத்தின் மூலம், சினிமாவில் அறிமுகமானவர் இவர். அறிமோகமான முதல் படத்திலேயே சிறந்த இளம் நடிகருக்கான ஃபிலிம்ஃபேர் விருதையும் பெற்றுக் கொண்டவர் ஷாகித்.
பின்னர் பல திரைப்படங்களில் உச்சத்துக்கு வந்தவர். அண்மையில் கூட இவர் நடிப்பில் வெளியான ஹைதர் படத்துக்கும் ஃபிலிம்ஃபேர் விருதை சூடிக்கொண்டார் என்பதும் முக்கியமானது.
இந்நிலையில், சாஹித்துக்கு எப்போது திருமனமென பலரும் கேட்டு நச்சரித்து வரும் நிலையில், முதன்முறையாக தனது திருமணம் தொடர்பாக வாய் திறந்துள்ளார் சாஹித். டெல்லியைச் சேர்ந்த மீரா ராஜ்புத் என்னும் மங்கையை விரைவில் மணக்க உள்ளார். எதிர்வரும் டிசம்பரில் இரு தரப்பும் இணைந்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்கள். ஆனாலும், திருமண திகதி பற்றி ஷாகித் வாய் திறக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
எப்பிடி ஆடினாலும், மாட்டித்தான் தம்பி ஆகணும் !!
-கோடம்பாக்கக் குருவி-
286 Views
சுசீந்திரன் இயக்கத்தில் விஷால் நடிக்கும் புதிய படத்துக்கு 'பாயும் புலி' என்று பெயரிட்டுள்ளார்கள். பரபரப்பான பெயராக படம் இருக்க வேண்டும் என்பதற்காகத் தான் இந்த பெயராம்.
அட ராமா!!
பாண்டிய நாடு வெற்றிக் கூட்டணி சுசீந்திரனும், விஷாலும் மீண்டும் இந்தப் படத்தில் இணைந்துள்ளனர். பல மடங்கு வெற்றிகளை இந்தப்படத்திலும் வழங்க வேண்டும் என்பது இவர்களது திடசங்கற்பம்.
இதில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் விஷால். விஷாலுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். சமுத்திரக்கனி விஷாலுக்கு மூத்த சகோதரராக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்பதும் முக்கியமானது. அத்தோடு பெங்களூரைச் சேர்ந்த புதுமுகம் வில்லனாக நடிக்கிறார். சூரி மற்றும் ஆனந்தராஜ் ஆகிய இருவரும் முக்கியமான பாத்திரங்களாக பளீரிட உள்ளார்கள். டி.இமான் இசையமைக்கும் இத்திரைப்படத்துக்கு இன்னும் எதிர்பார்ப்பலைகள் அதிகரித்துள்ளன.
போற போக்குல, இன்னும் நல்ல நல்ல படத் தலைப்புகளும் வரும் போல !
-கோடம்பாக்கக் குருவி-
269 Views
வருத்தப் படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தை தொடர்ந்து சிவ கார்த்திகேயனுடன் இயக்குனர் பொன் ராம் இணையும் "ரஜினி முருகன்" இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளதாக அறிவித்துள்ளார் இயக்குனர்.
சிவ கார்த்திகேயன் ரசிகர்கள் பலரின் எதிர் பார்ப்புக்கு பதில் வழங்கியுள்ளார் பொன் ராம் தனது டுவிட்டர் பக்கத்தில்.அதன் படி அதன் பெஸ்ட் லுக் அடுத்த மாதம் 25ம் திகதியும், திரைப்படத்தின் இசை வெளியீட்டை ஜூன் 7ம் திகதியும் இறுதி செய்துள்ளனர்.
திரைப்படம் எப்போது வெளி வரும் என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள பொன் ராம் எதிர்வரும் ரமலான் தினத்தன்று வெளியிட தீர்மானித்துள்ளோம் எனவும் பதில் வழங்கியுள்ளார்.
இமான் இசையமைக்க கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக கலக்குகிறார்.
-ஊரோடி-
270 Views
அமரகாவியம் திரைப்படத்தின் பின்னர் "இன்று நேற்று நாளை"திரைப்படத்தில் நடிகர் விஷ்ணுவுடன் இணைந்து நெஞ்சங்களை கட்டி போட்ட மியா மற்றும் அட்டகத்தி தினேஷ் ஆகியோரின் இணைவில் "ஒரு நாள் கூத்து"என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு, இம்மாதம் 30 ம் திகதி சென்னையில் ஆரம்பமாகின்றது.
முதல் தடவையாக நெல்சன் என்ற புதுமுக இயக்குனர் படத்தை இயக்க, "பண்ணையாரும் பத்மினியும்"படத்துக்கு இசை வழங்கிய ஜஸ்டின் இசை மழை பொழிய தாயாரகின்றார். மியா வுக்கு கிராமத்து பெண் வேடம் கிடைத்திருகின்றது. மண் வாசம் வீசும் கதைக் கருவை ஒரு நாள் கூத்து கொண்டிருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவிலேயே எல்லா படப்பிடிப்பையும் நடாத்தி முடிக்கவும் தீர்மானித்துள்ளதாக கூறபடுகின்றது.
-ஊர்கூடி-
241 Views
நம்ம தமிழ் நடிகர் என்று பெருமையோடு பேசிக்கொள்ளும் அளவுக்கு முன்னேறிய நடிகர் தனுஷுக்கு இப்பொழுது தமிழில் வாய்ப்புக்கள் கொட்டுவது மாத்திரமின்றி, ஹிந்தியிலும் குவிகிறது. அவரது நடிப்பை ஹிந்தி உலகமும் இரசித்துப் பாராட்டுகிறார்கள். அவரையே பல படங்களில் நடிக்க வைக்க விரும்புகிறார்கள்.
இந்நிலையில், 2013இல் வந்த ரான்ச்சனா படத்தின் மூலமாகத்தான், ஹிந்தியில் அறிமுகமானார் தனுஷ். அந்தப் படத்தில் நடிகை சோனம் கபூர் ஜோடியாக நடித்திருந்தார். படமும் பலரின் பாராட்டுகளைப் பெற்றதாக மாறியுள்ளது. இப்பொழுது, இரண்டு தமிழ் படங்களில் நடித்து வருகிறார். அந்தப் படங்களை முடித்து விட்டு, இந்திப் படங்களில் நடிக்க ஆயத்தமாகியுள்ளார் தனுஷ்.
அதற்க்கு இன்னும் இலகுவாக இருப்பதற்காக, மும்பையில் வீடும் வாங்கியுள்ளார் தனுஷ். இரண்டு மொழிகளிலும் கலந்து இனி நடிப்பில் கவனம் செலுத்தவுள்ளதாக சொல்லியுள்ளார்.
-கோடம்பாக்கக் குருவி-
480 Views
நாளை இந்திய ஆஸ்திரேலிய உலக கிண்ண யுத்தம் இடம்பெற உள்ள நிலையில், இந்திய பிரபல நடிகையும் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் விராட் கோஹ்லியின் காதலியுமான அனுஷ்கா சர்மா நாளைய போட்டி நடைபெற உள்ள சிட்னி நகருக்கு பறந்துள்ளார்.
இந்திய முக்கிய பிரபலங்கள் முதல் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் பலர் இப்போது சிட்னியில் ஆசனமிட்டிருக்கும் நிலையில், அனுஷ்கா சர்மாவின் பயணம் தான் அதிகளவாக பேசப்படுகிறது.
இதுவரைக்குமான போட்டிகளில் கோஹ்லியின் அதிரடியை போதுமான அளவு காண கிடைக்கவில்லை என்று தவிக்கும் ரசிகர்கள் ,அனுஷ்காவை கண்டதும் கோஹ்லி சூடாகிடுவர். நாளைய போட்டியில் சிறப்பாக விளையாடுவர் என்றும் ஆசைப் படுகிறார்கள்.
நாளைய போட்டியில் கோஹ்லியை மட்டுமல்லாமல் இந்திய வீரர்கள் அனைவரையும் உற்சாக படுத்த போகிறார் அனுஷ்கா சர்மா.
-ஊர்காவி-
571 Views
தென்னிந்திய சினிமாவில் தொடர்ந்து 10 வருடங்களுக்கு மேல் முன்னணியில் இருக்கும் நாயகி நடிகை நம்ம த்ரிஷா தான். இவருக்கு போட்டியான நடிகை இவரேதான் எனலாம். அந்தளவுக்கு இன்னும் அழகோடு மிளிரும் நடிகை அம்மணி.
இவர் அண்மையில் வழங்கிய நேர்காணல் ஒன்றில், தன்னுடன் நடித்த அனைத்து நடிகர்களை பற்றியும் மனம் திறந்துள்ளார். இதில் முக்கியமாக நடிகர் விஜய் பற்றி குறிப்பிடுகையில், ‘விஜய்யின் சண்டைக்காட்சிகள், வசம் பேசுகின்ற பாவனை, நடனம் என்பன என்னை மிகவும் கவர்ந்தவை , அவரிடம் இருந்து நிறைய நல்ல விஷயங்களை கற்று கொண்டேன்’ என்றுள்ளார்.
அத்தோடு அடிப்படையில் திரிஷா ஒரு அஜித் ரசிகை என்றாலும், விஜயின் நடிப்பை இரசிப்பது பற்றி மட்டுமே இந்த சந்தர்ப்பத்தில் கூறியுள்ளார்.
அத்தோடு, தமிழ் சினிமாவில் அனைவருடனும் போட்டி போட்டு நடிக்கும் ஒரு நடிகையும் த்ரிஷா என்று சொல்லலாம். , த்ரிஷா, விஜய்யுடன் ‘திருப்பாச்சி, கில்லி, ஆதி, குருவி ஆகிய படங்களில் ஜோடியாக நடித்தார் என்பதும் உங்களுக்கு நினைவிருக்கலாம்.
-கோடம்பாக்கக் குருவி-
316 Views
ஸ்ரீகாந்த் & ராய் லட்சுமி நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் சௌகார்பேட்டை. இதுவும் மர்ம திகில் திரைப்படங்களின் வரிசையில் வந்து கலக்கவுள்ள திரைப்படமென எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
ஸ்ரீகாந்துக்கும் ராய் லட்சுமிக்கும் நடிப்பில் நல்ல பெயரையும், எதிர்காலத்தில் இன்னும் அதிக வாய்ப்புக்களையும் பெற்றுக்கொடுக்கப் போகும் திரைப்படம் இதுவென சொல்லப்படுகிறது.
சௌகார்பேட்டை திரைப்பட புகைப்பட தொகுப்பு வெளியாகியுள்ளது. எனவே, முழுமையாக பார்வையிட சூரியனின் முகநூல் பக்கம் செல்லுங்கள்
-கோடம்பாக்கக் குருவி-
276 Views
இந்திய மத்திய அரசின் சினிமாத் துறைக்கான கௌரவமாக கருதப்படும், தேசிய விருதுகள் நேற்றைய தினம் வழங்கி வைக்கப்பட்டன. தமிழில் சிறந்த நடிகராக பாபி சிம்ஹா தெரிவு செய்யப்பட்டுள்ளார். அந்த பெயர் விபரங்களையும் நேற்று சூரியனின் இணையத்தில் தந்திருந்தோம். படித்திருப்பீர்கள், அறிந்திருப்பீர்கள்.
இப்பொழுது இன்னுமொரு கௌரவத்தை நடிகரும் இயக்குனரும் தயாரிப்பாளருமான மனோபாலா, பாபி சிம்ஹாவுக்கு வழங்கியுள்ளார். அதாவது பாம்புச்சட்டை எனும் படத்தில் பாபி சிம்ஹா நடித்து வருகிறார். இந்தப் படத்தை சரத்குமார் மற்றும் ராதிகா ரசத்குமார் மற்றும் மனோபாலாவின் நிறுவனங்களே இணைந்து தயாரித்து வருகின்றன.
இந்தப் படத்தில் சிறப்பாக பாபி நடித்து வருவதாகவும், அவரது நடிப்பால் ஈர்க்கப்பட்ட சாதாரண இரசிகன் நான் எனவும், மகிழ்ச்சி தெரிவித்த மனோபாலா, மிகப்பெரிய மாலை ஒன்றை அணிவித்து தனது சந்தோசத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
-கோடம்பாக்கக் குருவி-
243 Views
அஜித் விஜய் பற்றி பேசுவதென்றால், ஆஹா ஓஹோ என பேசிக்கொள்ளும் நம்ம இரசிகர்கள், அதே அளவுக்கு அகோரமாக சண்டையிட்டும் வார்த்தைகளால் மோதிக்கொண்டும் தமது எதிர்ப்புக்களையும் வெளிப்படுத்திக் கொள்வார்கள். இது தெரிந்ததே!
இந்நிலையில், எதிர்வரும் சித்திரைப் புத்தாண்டுக்கு அஜித் விஜய் படங்கள் தொடர்பான ஆரம்ப அம்சங்கள் வெளியாகி, இரசிகர்களுக்கு விருந்தளிக்கவுள்ளன. அதுவும் நிறைய நாட்களுக்குப் பின்னர், இவர்கள் இருவரின் படங்களும் ஒன்றாக வரவுள்ளன என எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய் நடித்து வரும் புலி, கேரளாவில் நடைபெற்று வருகிறது. மிக வேகமாக நடைபெற்று வரும் படப்பிடிப்புக்கள் 60சதவீதம் நிறைவடைந்துள்ளன. அதேபோல, படத்தின் முதல் லுக் சித்திரைப் புத்தாண்டு அன்று வெளியாகவுள்ளது.
அஜித்தின் படமும், மிக வேகமாக வளர்ந்து வருகிறது. இதே போலவே தல 56 பட ஆரம்ப விழாவும் இதே புத்தாண்டு தினத்தில் தான் நடைபெறவுள்ளது என படக்குழு அறிவித்துள்ளது.
எனவே, இரு பெரிய நட்சத்திரங்களும் தமிழ் புத்தாண்டு அன்று தமது படங்களுக்கான, நல்ல ஆரம்பத்தை ஏற்படுத்த ஆயத்தமாகியுள்ளன என்பது இரசிகர்களுக்கும் கொண்டாட்டம்தான்!
-கோடம்பாக்கக் குருவி-
284 Views
62 வது தேசிய விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில், திறமையும் தகுதியும் உள்ளவர்கள் பெரும்பாலனவர்களுக்கு விருதுகள் கிடைப்பது இல்லை சிலருக்கு மட்டுமே அந்த பொன்னான வாய்ப்பு சென்றடைகின்றது என்று இயக்குனர் பார்த்தீபன் தன் ஆதங்கத்தை கொட்டித்தீர்த்து இருக்கிறார்
62-வது தேசிய விருதுகள் பட்டியல் டெல்லியில் அறிவிக்கப்பட்டது. இப்பட்டியலில் தமிழில் சிறந்த படமாக 'குற்றம் கடிதல்'இ சிறந்த உறுதுணை நடிகராக 'பாபி சிம்ஹா'இ சிறந்த குழந்தைகள் படமாக 'காக்கா முட்டை' என தமிழ்ப் படங்களுக்கு 7 விருதுகள் கிடைத்திருக்கிறது.
தேசிய விருது தேர்வுக்காக பார்த்தீபன் இயக்கி வெளிவந்த “கதை திரைக்கதை வசனம்” அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் அந்தப்படத்துக்கு எந்தவொரு விருதும் கிடைக்கவில்லை. ஆறுதலுக்கு கூட ஒரு விருது கூட கிடைக்காமல் போனது துரதிஸ்டமே.
இந்த மன உடைவின் காரணமாக தன்னுடைய ஆதங்கத்தை பேஸ்புக் பக்கத்தில் வெளிப்படுத்தியுள்ளார்.
'The wolf of wall street' படத்தில் லியானார்டோ டி காப்ரியோ-வுக்கு ஆஸ்கார் கிடைக்குமென நாடே காத்திருக்க டி காப்ரியோ 10 வருடங்களாக அதற்காக வித்தியாசமான வேடங்களில் பின்னிஃமின்னி ஆவலோடு காத்திருக்கிறார்.
திறமையும் தேடலும் உள்ள அனைவருக்கும் விருது கிடைப்பதில்லை ஒரு சிலருக்கு மாத்திரமே விருது கிடைக்கின்றது
எனக்கும் 'மேல்விலாசம்' என்ற மலையாளப்படம் 'ஆயிரத்தில் ஒருவன்' படங்களில் சிறந்த நடிப்புக்கும் ’கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ சிறந்த இயக்குநர் திரைக்கதை இப்படி சில விருதுகள் கிடைத்திருக்கலாமென பாராட்டி மக்கள் 'பேசிய விருது' தேசிய விருதுக்கு ஒப்பானது.
இருப்பினும் தொடரும் உங்கள் ஆதரவோடு தொடர்கிறேன் என் வித்தியாச முயற்சிகளை. நன்றி" என்று பார்த்திபன் தெரிவித்திருக்கிறார்.
====== CASTRO RAHUL ======
260 Views
தொடர்ந்து இரண்டாவது முறையாக தேசிய விருது பெற்றது மகிழ்ச்சியளிப்பதாக பாடலாசிரியர் நா.முத்துக்குமார் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
"தங்க மீன்கள்' படத்துக்காக நான் எழுதிய 'ஆனந்த யாழை மீட்டுகிறாய்...' பாடல் முதல் முறையாக என்னை தேசிய விருது மேடைக்குக் கொண்டு சென்றது.
அதைத் தொடர்ந்து நிகழாண்டுக்கான தேசிய விருது பட்டியலிலும் எனது பெயர் சேர்ந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. தொடர்ந்து இரண்டாவது முறையாக தேசிய விருது பெறுவது கூடுதல் மகிழ்ச்சி.
'சைவம்' படத்தில் இடம் பெற்ற 'அழகே அழகு...' பாடல் வாழ்வின் சில உன்னத விஷயங்களைச் சொல்லியிருக்கும். அந்தப் பாடலுக்கான சூழலை உருவாக்கித் தந்த இயக்குநர் ஏ.எல்.விஜய்க்கும், இசையமைத்த ஜி.வி.பிரகாஷ்குமாருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
எனது அடுத்தடுத்த பயணங்களுக்கான எரிபொருளாக இந்த விருது அமையும். தொடர்ந்து தரப்படும் இந்த மாதிரியான அங்கீகாரங்கள் எனது பொறுப்புகளை அதிகமாக்கியுள்ளன," என்றார் நா.முத்துக்குமார்.
தொடர்ந்து 12 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் அதிக பாடல்களை எழுதி வருபவர் நா முத்துக்குமார்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
======CASTRO RAHUL =======
364 Views
நடிகைகளின் முகத்தை மார்ஃபிங் செய்து நிர்வாண படம் வெளியிடுபவர்கள் அற்ப சந்தோசம் அடைகின்றனர் என நடிகை ஸ்ரீதிவ்யா கொதித்து போயுள்ளார். வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலம் அறிமுகமான ஸ்ரீதிவ்யா புகழின் உச்சிக்குச் சென்றார்.
தொடர்ந்து வெள்ளைக்கார துரை, பென்சில், காக்கிசட்டை என வரிசையாக புக் ஆகி நடித்தார். சமீபத்தில் வெளியான காக்கிச் சட்டை படமும் ஹிட் ஆகியுள்ளது. இளம் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வரும் ஸ்ரீ திவ்யாவின். ஆபாசமான செல்ஃபி ஒன்று இணையத்தில் உலா வந்தது.
இது பற்றி அவர் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை, சிலர் இதை உண்மை என்றும், ஒரு சிலர் மார்ஃபிங் என்றும் கூறி வந்தனர்.
நான் கண்டுக்கலை
இது குறித்து முதல் முதலாக மனம் திறந்துள்ளார் ஸ்ரீ திவ்யா, அதையெல்லாம் நான் கேர் பண்ணவே இல்லை என்று கூறியுள்ளார்.
மார்ஃபிங்
பப்ளிசிட்டி இருக்கிற நடிகைகளைத்தானே இந்த மாதிரி ‘மார்ஃபிங்’ செஞ்சு விளையாடுவாங்க. ஆனா, இதனால அவங்களுக்கு என்ன கிடைக்கப் போகுதுனுதான் தெரியலை.
டைம் வேஸ்ட்
இவ்ளோ கஷ்டப்பட்டு மார்ஃபிங் பண்ற நேரத்தை நல்லது பண்றதுக்காக செலவழிச்சிருக்கலாம். அதை விட்டுட்டு இந்த வேலையை மெனக்கெட்டு செஞ்சிருக்காங்க.
அற்ப சந்தோசம்
சரி, விடுங்க… விடுங்க… அவங்களுக்கு ஒரு அற்ப சந்தோஷம் இவங்க எல்லாம்…… எனவும் சாபம் விட்டுள்ளார் ஸ்ரீ திவ்யா.
======CASTRO RAHUL ======
436 Views
விஜய் ரசிகர்களுக்கு புத்தாண்டுக்கு ஒரு ஸ்பெஷல் gift கொடுக்க புலியின் குழு முயற்சிக்கிறதாம்.. அதுதான் புலி படத்தின் first look !
சிம்புதேவன் இயக்கத்தில் ஹன்சிகா,ஸ்ருதி , ஸ்ரீதேவி என நட்சத்திர பட்டாளம் கொஞ்சம் அதிகம் புலியில்! படத்தை விஜய்யின் பிறந்த நாள் அன்று வெளியிட இப்போதைக்கு திட்டமாம்.
.அதற்கு முன் புத்தாண்டுக்கு first லுக்கை வெளியிட்டு புலிக்கான பில்டப்பை ஆரம்பிக்க முடிவு செய்துள்ளார்களாம் .
ஆக இப்போதே lightta புலி உறும ஆரம்பித்திருக்கிறது.
-கந்தப்பன் பிரஷாந்த்-
284 Views
தமிழின் தற்போதைய பிஸியான பாடலாசிரியர் நா.முத்துக்குமார்தான். எத்தனையோ பாடலாசிரியர்கள் வந்தார்கள், காணாமல் போனார்கள் . ஆனால் இன்று வரை ..தாக்கு பிடிப்பவர்களில் முக்கியமானவர் இவர் . இதற்கு காரணம் எழிமையான வரிகள் அழகிய கவிதை நயம் இவரின் பாடல்களில் தெரியும். பல வெற்றிப்பாடல்களுக்கு சொந்தக்காரர்.
பல இசையமைப்பாளர்களின் ஆஸ்தான கவிஞர். இவர் சென்ற வருடம் தங்கமீன்கள் படத்திற்காய் எழுதிய ஆனந்த யாழை மீட்டுகிறாய் பாடலுக்கு முதல் தேசிய விருதை பெற்றிருந்தார் .
மீண்டும் இவர் சைவம் படத்திற்காய் எழுதிய அழகே அழகே என்ற பாடலுக்காய் இந்தமுறையும் தேசிய விருதை பெற்றிருக்கிறார் .
ஆக இரட்டிப்பு மகிழ்ச்சியோடு இப்போது முத்துகுமார் .
வாழ்த்துவோம் நாமும் !!
-கந்தப்பன் பிரஷாந்த்-
264 Views