நல்லது செய்தாலும் சரி, தப்பு பண்ணினாலும் சரி ! அணிருத்துக்கு அடிக்கடி ஏதாவது நடந்துகொண்டேயிருக்கிறது. அண்மையில் இவரது இசையில் வந்த பாடல்களும் ஹிட், இவர் பாடிய பாடல்களும் செம்ம ஹிட். நல்ல பெயரும் புகழும் தமிழ் சினிமாவிலும் இரசிகர்களிடமும் அணிருத்துக்கு உண்டு.
இதனால், தெலுங்குப் படவுலகிலும் இவரை அறிமுகம் செய்ய எண்ணினார்கள். இதனால், ராம்சரண் தேஜா நடிக்கும் புதுப் படத்தில், அனிருத்தை ஒப்பந்தம் செய்தார்கள். ஆனாலும், அனிருத் தமக்கு இன்னும் முழுமையாக இசையமைத்து தரவில்லை என படக்குழு நாயகன் இயக்குனர் ஆகியோர் இணைந்து முணுமுணுத்த விஷயம், அனிருத் காதுக்கு எட்டி விட்டது.
உடனே, மறுபேச்சின்றி நான் படத்திலிருந்து விலகுகிறேன். எனக்கு தெலுங்கில் தான் இசையமைத்து பிழைப்பு நடத்த வேண்டும் என்னும் நோக்கம் மற்றும் தேவை இல்லையென கூறியவர், உடனடியாக படத்திலிருந்து விலகி விட்டார்.
மௌனம் காத்து வந்த படக்க்குளுவும், அனிருத்துக்குப் பதிலாக, தமனிடம் பொறுப்பை ஒப்படைத்துள்ளது. அங்கிருந்து ஆவேசமாக வந்தவர், அஜித்தின் அடுத்த படத்தின் இசைப்பணியை செய்து காட்டுகிறேன் எனும் சபதத்தோடு ஆரம்பித்துள்ளார்.
இப்பிடி இருக்கணும் கண்ணு !!
-கோடம்பாக்கக் குருவி-