ஜோதிகா ஒரு காலத்தில் தமிழ் சினிமாவை கலக்கிய பெயர்தான்,ஒரு நிமிடத்துக்குள் இவர் திரையில் காட்டும் ஓராயிரம் முகபாவனைகளுக்கு .ரசிகர்கள் பலர் அடிமையானது உண்மைதான் !
சூர்யாவோடு திருமணம் பின் நடிப்புக்கு முழுக்கு . இரண்டு பிள்ளைகள் அழகிய குடும்பம் ஒதுங்கியிருந்த இவர், மீண்டும் .என்ற மலையாள வெற்றிப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்கிறார் . தமிழில் படத்தின் பெயர் 36 வயதினிலே. இதை சூர்யா தன் சொந்த தயாரிப்பு நிறுவனத்தினூடு தயாரிக்கிறார் மலையாளத்தில் இயக்கிய இயக்குனரே தமிழிலும் இயக்குகிறார்.
திருமணத்திற்கு பின்னரான ஜோதிகாவின் முதல் படம் என்பதால் எதிர்பார்ப்பு எக்கச்சக்கம். மனைவியின் படத்தை எப்படியாவது வெற்றிப்படமாக ஆக்கிவிட வேண்டும் என்று இப்பொழுதே அயராது உழைகிறாராம் இந்த அன்புக்கணவர் சூர்யா. அத்தோடு படத்தை எப்படியாவது நூறு நாட்கள் ஒட்டிவிட வேண்டும் என்பதும் சூர்யாவின் திட்டமாக அமைந்துள்ளது.
எனவே, ஜோதிகாவின் மீள் வருகையினால் நம்மை விட சூர்யா அதிகம் மகிழ்ச்சி கொண்டுள்ளார் என்பது புரிகிறது. ஆக ஆடிய காலும் பாடிய வாயும் சும்மா இருக்காது என்பது உண்மைதான்!!
-கந்தப்பன் பிரஷாந்த்-