Christchurch ல் துப்பாக்கிச் சூடு மேற்கொண்ட குற்றவாளி தனக்குத் தானே வாதாட இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த வெள்ளிக்கிழமை பிரெண்டன் டரன்டுக்கு (Brenton Tarrant) என்பவர் மேற்கொண்ட இரக்கமற்ற வன்முறையான கொடூர துப்பாக்கிச் சூட்டு பிரயோகத்தில், 50 பேர் பலியாகியதுடன், சுமார் 20 க்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுக்கு இலக்காகினர்.
இந்த நிலையில் துப்பாக்கி சூட்டை மேற்கொண்ட தாக்குதல்தாரியை கைது செய்த அந்நாட்டு காவல்துறையினர், நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றார்கள்
இந்த நிலையில் குறித்த குற்றவாளி தனக்குத் தானே வாதாட இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன
குற்றவாளி பிரெண்டன் டரன்டுக்கு நியமிக்கப்பட்ட அரசாங்க வழக்கறிஞர் கூறும்போது, ''டரண்ட் மனதளவில் தடுமாறி இருக்கிறார். அவர் 4-ம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகும்போது பல குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள இருக்கிறார்'' என்று தெரிவித்தார். குற்றவாளி டரண்ட் தானே வாதாடுபவராக இருந்தால், அவர் தீவிரவாதக் கருத்துக்களை தனது வாதத்தின் மூலம் பரப்புவார் என்ற அச்சம் உருவாகியுள்ளது.