தமிழகத்தின் பல திரையரங்குகளில் பெருமளவு எதிர்பார்ப்புக்களுடன் இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட விஷாலின் அயோக்யா திரைப்படம், இன்று வெளியிடப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தைப் பார்ப்பதற்காக பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் தமிழகத்தின் முன்னணி திரையரங்குகளுக்கு முன்னால் சூழ்ந்திருக்கும் நிலையில், சற்றுமுன் இந்த படம் இன்று வெளியிடப்படாது என்று அறிவிக்கப்பட்டது. இதனால் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றம் கிடைத்துள்ளது.
இந்த நிலையில், படத்தின் ரிலீசுக்காக அனைத்து முயற்சிகளும் எடுத்து விட்டேன், ஆனால் இன்று படம் வெளியாகவில்லை. எனினும் எனக்கு என ஒரு நாள் வரும், அதுவரை என் பயணத்தை தொடர்வேன்' என்று விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.
தயாரிப்பாளர் சங்கத்தின் தனி அதிகாரி நியமனத்தை எதிர்த்து விஷால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், இந்த படம் இன்று வெளியாகவில்லை.