கடலிலும் கிணறுகளிலும் ஏன் சருகுகளிலும், ஆமைகள் வாழும் தன்மை கொண்டவை. விக்கிபீடியாவின் தகவல்படி சுமார் 356 ஆமை இனங்கள் உலகம் முழுவதும் வாழ்வதாக அறிய முடிகின்றது. இந்தநிலையில், தாய்லாந்தில் இரட்டைத்தலை கொண்ட அரிய வகை ஆமை ஒன்று அதிக பார்வையாளர்களை கவர்ந்துள்ளதாக புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. தாய்லாந் தலைநகர் பாங்கொக்கைச் சேர்ந்த நூன் அவ்ஸானி என்பவர், அவரது வீட்டில் வளர்த்து வந்த ஆமை ஒன்று கடந்த மார்ச் மாதம் குட்டிகளை ஈன்றது. இதில் ஒரு குட்டி, இரு தலைகள் கொண்டதாகவும் அபூர்வப் பிறவியாகப் பிறந்துள்ளது.
இந்தத்தகவலை அறிந்த பலரும் அந்த அரிய வகை இரட்டை தலை ஆமையை பார்வையிட்டுச் செல்வதாக கூறப்படுகிறது. அத்துடன், அந்த இரட்டை தலை ஆமையை வாங்குவதற்கு பலரும் ஆர்வம் காட்டி வருகின்றார்கள்.
இதனையறிந்த குறித்த ஆமையின் உரிமையாளர் அந்த ஆமையை இலங்கை மதிப்பில் கிட்டத்தட்ட 55 லட்சம் ரூபாய்க்கு விற்க சம்மதித்துள்ளார்.