அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள அடகுக் கடையொன்றுக்குச் சென்ற நபர் ஒருவர், தனது கைக்ககுழந்தையை பணத்திற்காக விற்பனை செய்யத் துணிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த நபர் அடகுக் கடையில் இருந்த கணக்காளரிடம், தனது கைக்குழந்தையைக் காட்டி, ''இவனால் எனக்கு பெரிய பயன் ஒன்றும் இல்லை. இவனை எவ்வளவு பணத்திற்கு வாங்குவீர்கள்'' ?, எனக்கு குழந்தையை விட பணமே முக்கியம்'' எனக் கூறியுள்ளார்.
இதனைக் கேட்டதும் அதிர்ந்து போன கணக்காளர், உடனடியாக அருகில் உள்ள காவல்துறையினருக்கு தகவல் வழங்கியுள்ளார்.
இதனை அடுத்து காவல்துறையினர் கடைக்குள் விரைந்து வந்த போது, தான் நகைச்சுவை செய்ததாகவும், அது புரியாமல் அடகுக் கடைக்காரர் காவல்துறையினருக்கு தகவல் வழங்கி விட்டதாகவும், கைக்குழந்தையின் தந்தை சிரித்தபடி கூறியுள்ளார்.
எனினும் அவரை கைது செய்த காவல்துறையினர், விசாரணைகளின் பின்னரே அவரை விடுத்ததாக, அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.