உலகப்புகழ் பெற்ற எவரெஸ்ட் சிகரத்தில் சுமார் 23 முறை ஏறி ஒருவர் சாதனை படைத்துள்ளார்.
நேபாள நாட்டின் ரீட்டா ஷெர்பா என்பவரே இவ்வாறு சாதனை படைத்துள்ளதாக தெரிய வருகின்றது. நேபாள நாட்டின் மலையேற்ற குழுவை சேர்ந்த 49 வயதான ரீட்டா ஷெர்பா, சொலுகும்பு மாவட்டத்தின் தேம் கிராமத்தில் வசித்து வருகிறார்.
இவர் 8,850 மீட்டர் உயரம் கொண்ட உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் கடந்த 1994 ஆண்டில் ஏற தொடங்கினார்.
பின்னர் தனது முயற்சியை கைவிடாமல் தொடர்ந்து எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி, கடந்த 2017ம் ஆண்டில் 21 முறை இச்சிகரத்தில் ஏறிய நபர் என்ற பெருமையை ரீட்டா ஷெர்பா பெற்றார்.
இந்த நிலையில், கடந்த 2018 ஆம் ஆண்டு காமி மீண்டும் மலையேறி சாதித்ததுடன், தொடர்ந்து இந்த வருடமும் மலையேறும் முயற்சியில் ஈடுபட்டார். இதன்படி இன்று காலை 23வது முறையாக சிகரத்தின் உச்சிக்கு சென்று ரீட்டா ஷெர்பா சாதனை படைத்தார்.