நடிகை ஐஸ்வர்யா ராய் படத்துடன் சர்ச்சைக்குரிய பதிவை வெளியிட்டமைக்காக, நடிகர் விவேக் ஓபராய்க்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தேர்தலின் வாக்குப்பதிவுகள் முடிந்தவுடன் பல ஊடகங்களில் எக்சிட் போல் எனப்படும் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகின.
இந்நிலையில் இது பற்றி விவேக் ஓபராய் கருத்து தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டார். அதில், நடிகை ஐஸ்வர்யா ராய் படத்தைக் குறிப்பிட்டு மீம்ஸ் ஒன்றை இணைந்திருத்தார். அந்த மீம்ஸ் உருவாக்கிய நபரையும் ஓபராய் பாராட்டியிருந்தார்.
ஐஸ்வர்யா ராயை கொச்சையாக சித்தரித்து தயாரிக்கப்பட்ட அந்த பதிவுக்காக ஓபராயை சமூக வலைத்தளங்கள் கடுமையாக எதிர்த்தனர். அவர் மன்னிப்பு கோர வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.
இந்த விவகாரம் தொடர்பாக அவரிடம் விளக்கம் கேட்டு தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதனிடையே பேட்டி ஒன்றில் இது பற்றி குறிப்பிட்ட ஓபராய், “நான் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்கிறார்கள். மன்னிப்பு கேட்க நான் தயாராகவே இருக்கிறேன். ஆனால், நான் என்ன தவறு செய்தேன் என்று சொல்லுங்கள்?'' என்று தெரிவித்துள்ளார்.