அலுவலகத்திற்கு குட்டைப் பாவாடை அணிந்து வரும் பெண் ஊழியர்களுக்கு அதிக சம்பளம் வழங்குவதாக ரஷ்யாவில் அலுமினியம் தயாரிக்கும் நிறுவனம் ஒன்று அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்த மாதம் 30 ஆம் திகதிவரை "Femininity marathon" என்ற பிரசாரத்தை மேற்கொண்டு வரும் குறித்த நிறுவனம், இதில்
பெண்களை மட்டுமே கலந்து கொள்ள முடியும் என்றும் கட்டுப்பாடு வித்தித்துள்ளது.
இதன்பிரகாரம் குறித்த நிறுவனத்திற்கு வரும் பெண்கள் தமது முட்டிக்கு 5cm கீழே இறங்காத அளவிலான குட்டைப் பாவாடை அணிந்து வந்தால், அவர்களுக்கு அதிக சம்பளம் வழங்கப்படும் என்று, அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. 30 நாட்கள் நடக்கும் இந்த விசித்திர பிரசாரத்தில் ஒவ்வொரு நாளும் இவ்வாறான ஆடைகள் அணிந்து வந்தால் அவர்களுக்கு 100 ரஷ்ய ரூபெல் பணத்தை அந்நிறுவனம் வழங்குகிறது.
இந்த புதிய நடைமுறையை ஊக்குவிக்கும் நோக்கத்தில், வழங்கப்பட்ட அளவில் குட்டைப்பாவாடை அணிந்து வருவதால் ஆடை ஒரு இடையூறான நிலையை பெண்களுக்கு தருவதில்லை என்பதை பெண்கள் இதன் மூலம் நன்கு உணருவார்கள் என்று குறித்த நிறுவனம் விளக்கம் கூறியுள்ளது.
ஆனால், நிறுவனத்தின் இந்த நடைமுறைக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பெண்களை குறைவான ஆடை அணியவைத்து அதற்கு அந்நிறுவனம் பணம் வழங்குவது மிகக் கீழ் தரமான செயல் என்று விமர்சிக்கும் பலரும், குறித்த நிறுவனத்தின் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறி வருகிறார்கள்.