உலகிலேயே தூய்மை சுற்றுச்சூழலை பேணுவதில் அமெரிக்க நாடே முதலிடம் வகிக்கிறது என்றும், மற்றைய நாடுகளில் மாசு பரவுவதை சரியாகக் கண்டு கொள்வதில்லை என்றும், அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.
அமெரிக்கா, பிரித்தானிய ஆகிய நாடுகளுக்கு இடையிலான உறவை வலுப்படுத்தும் விதமாக அமெரிக்க அதிபர் டிரம்ப் 3 நாள் பயணமாக பிரித்தானிய சென்ற அவர். அங்கு பிரிட்டிஷ் தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில் இவ்வாறு தெரிவித்தார்.
ஒரு நாட்டில் பொருளாதாரம் வளர்ச்சி என்பதை விட சுற்றுச்சூழல் மற்றும் பருவகால மாற்றம் குறித்து பல நாடுகள் கவலை கொள்வதில்லை என்றும் குறிப்பாக இந்தியா, சீனா, ரஷ்யா போன்ற நாடுகள் இதைப்பற்றி சிந்திப்பதே இல்லை வேண்டும் அவர் தெரிவித்துள்ளார் .
இந்தியா, சீனா, ரஷ்யா ஆகிய நாடுகள் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் தூய்மையான காற்று, தூய்மையான தண்ணீர் இல்லை. மாசு, தூய்மை போன்ற இயற்கையான விடயங்கள் குறித்து விழிப்புணர்வு இல்லை.பல நாடுகளுக்கு நீங்கள் சென்றால் அங்கு ( நாட்டின் பெயர்களை கூற மாட்டேன் ) என தெரிவித்த அவர் .அந்த நாடுகளில் முழு அளவில் சுவாசிக்க இயலாது . இயற்கையான விடயங்களில் பொறுப்பில்லாத நாடுகளாக உள்ளது எனவும் மிக கோபமாக கூறியுள்ளார் .
மேலும் நாங்கள் வாழும் அமெரிக்கா மிக தூய்மையான நாடாக திகழ்கிறது. இதற்கு சான்றாக பல புள்ளிவிவரங்கள் உள்ளன என்றும் டிரம்ப் கூறியுள்ளார் .