3,994 Views
தனது ஆதரவு மஹிந்தவுக்கு இல்லையென சில வாரங்களுக்கு முன்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தமையானது மஹிந்தவின் காலை வாரி விட்டது போல் இருந்ததாக சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் கவலைப்பட்டுக்கொண்டிருக்கின்றனர்.
இச்சர்சை ஓய்வதற்கு முன்னர் அகுரஸ்ஸவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் மஹிந்தவின் கையை அங்கிருந்த ஒருவர் வாரி விட்டமையானது வேறொரு பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.
மரத்தில் இருந்து விழுந்தவனை மாடு ஏறி மிதித்தது போல இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது, மேலும் தற்போது அரசியல் மேடைகளில் அதிகம் பேசப்படும் விடயமாகவும் மாறியுள்ளது.
கையைப் பிடித்து இழுத்ததால் மஹிந்த ஆத்திரமடைந்தாரா? கை இழுக்கப்பட்டமையால் ஏற்பட்ட வலியால் அடிக்க முயன்றாரா? என உளவுத்துறை ரீதியிலான ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டுக்கொண்டிருக்கின்றன.
வெறும் வாய்க்கு அவல் கிடைத்த து போல அவரவர் அவருக்கு தெரிந்த வித த்தில் , தங்களது பார்வையில் இச்சம்பவ த்தை விபரிக்கின்றனர் ரஷோமான் திரைப்படத்தை போல.
உலகப் புகழ்பெற்ற திரைப்பட இயக்குனரான அகிரா குரோசோவாவின் இயக்கத்தில் 1950 இல் வெளிவந்த ஜப்பானியத் திரைப்படமான ரஷோமானில் , ஒரு சம்பவத்தை அதில் உள்ள கதாபாத்திரங்கள் தங்களது கோணத்தில் சொல்லும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டிருந்த து.
அதேபோல் மஹிந்தவின் கையைப்பிடித்து இழுத்த சம்பவமும் பலரால் பல்வேறு விதமாக தெரிவிக்கப்படுகின்றது ஏன் மஹிந்தவே இது தொடர்பில் வெவ்வேறான விடயங்களையே தெரிவித்துள்ளார்.
அவ்வாறு ஒவ்வொருவரும் இவ்விடயத்தை எவ்வாறு சொல்கின்றனர் என்று கேளுங்கள்.