அண்மையில் இசைஞானி இளையராஜாவை தாக்கி சிலேடையாக பேசியுள்ளார் அனிருத், அவருக்கு என்ன நெஞ்சழுத்தம் என, ராஜாவின் விசிறிகள் சிலர் சமூக வலைத்தளங்களில் கொந்தளித்து வருகிறார்கள்.
இப்படியே உலாவி வரும் வேளையில், நம்ம கண்ணில இந்த விஷயம் சிக்கிடிச்சு! விடுவமா நாம...? உள்ள இறங்கி அலசி ஆராயும் பொது இன்னும் சில வெளிவராத விஷயங்கள் கசிஞ்சிடுத்துங்கோ!
கடந்த இரு தினத்துக்கு முன்னம், நம்ம குட்டிப் பையன் அனிருத் தனது முகநூலில்தனது இரசிகர்களோடு சிலமணி நேரம் செலவழித்தார்.
அதிலே, ஒரு குசும்பு இரசிகர் கேட்டார் 'அனிருத்! உங்கள அடுத்த எ.ஆர்.ரகுமான் என்று கூறலாமா?'' என்றதுக்கு, பதிலளித்த அனிருத், ரஹ்மான் ஒரு ராஜா. நான் ஒரு மந்திரி மட்டுமே. அவரது இசையோடு என்னுடைய இசையை ஒப்பீடு செய்வது சரியல்ல.’ என்றுள்ளார்.

எங்கடா சிக்குவாங்கன்னு சிந்திச்சபடி அலையும் க்ரூப்புக்கு இது போதாதா? இசையுலகில் என்றும் ராஜா இளையராஜா மட்டும்தான். எப்படி, நேற்று வந்த அனிருத் இப்படி அவமரியாதையாக பேசலாம் என, தத்தமது சமூக வலைத்தளங்களில் அனிருத்தை ஒரு தரப்பு தாக்கி வருகிறது.
இது எந்தளவுக்கு பிரச்சினைச் சுவாலையை ஏற்படுத்தி விடப் போகிறது என்றும், அனிருத் இதற்கு என்ன பதிலளிக்க போகிறார் என்றும் பொறுத்திருந்து பார்ப்போம் !
சும்மாவே ராஜா - ரஹ்மான் ரசிகர் சண்டைகள் இணையத்தில் களைகட்டும்...
இப்போது புதுசா அனிருத்...
இது எப்படி போகிறது என்று கவனிப்போம்.