ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பை கலைப்பதற்கான வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் ரீ.பி.ஏக்கநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.
எமது செய்தி சேவைக்கு வழங்கிய விசேட செவ்வி ஒன்றில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
சுதந்திரகூட்டமைப்பை கலைத்துவிட்டு பிறிதொரு அரசியல் வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றமை குறித்து அறியமுடிந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நிறைவேற்றுக் குழுவில் இருந்து முன்னாள் அமைச்சர் ரீ.பி.ஏக்கநாயக்க நீக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான கடிதங்கள் தமக்கு கிடைக்கப் பெற்றுள்ளதாக அவர் எமது செய்திப்பிரிவுக்கு தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு மற்றும் சிறிலங்கா சுதந்திர கட்சி என்பவற்றின் பொது செயலாளர்களால் இந்த கடிதங்கள் அவருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இதற்கு முன்னர் குமார வெல்கம, எஸ்.எம்.சந்திரசேன மற்றும் பவித்ரா வன்னியாராச்சி ஆகியோர் கூட்டமைப்பின் நிறைவேற்றுக் குழுவில் இருந்து நீக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.