ரக்பி வீரர் வசிம் தாஜூடினின் கையடக்க தொலைபேசி தலவாக்கலை அக்கரபத்தனையில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
காவல்துறை ஊடக பேச்சாளர் ருவான் குணசேகர இதனை தெரிவித்துள்ளார்.
ரக்பி வீரர் தாஜூடினின் மரணம் இடம்பெற்ற தினத்தில் இருந்து மூன்று வாரங்களில், கிருலப்பனை ரொபட் குணதிலக்க மாவத்தையில் இருந்து, குறித்த கைதொலைபேசி ஒருவரால் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
அதனை அவர், அக்கரப்பத்தனையில் உள்ள தமது மகனுக்கு கொடுத்துள்ளார்.
இந்த நிலையில், அது கடந்த மூன்று வாரங்களுக்கு முன்னர் கைப்பற்றப்பட்டதாகவும் காவல்துறை ஊடக பேச்சாளர் ருவான் குணசேகர எமது செய்தி சேவைக்குத் தெரிவித்தார்.