தனது இரண்டாவது பிள்ளை தனது காதலனுக்கு பிறந்ததாகவும் , அவரில்லாமல் தன்னால் வாழமுடியாதெனவும், இரண்டு பிள்ளைகளின் தாயாரொருவர் பொலிஸில் வைத்து கணவனை நிராகரித்த சம்பவமொன்று தலாது ஓய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
குறித்த பெண் கடந்த 5 வருடங்களுக்கு முன் திருமணம் முடித்துள்ளார். பின்னர் கணவனின் உறவினருடன் தொடர்பைப் பேணி வந்துள்ளார்.
இந்நிலையில் இவ்விவகாரம் கணவனின் பொலிஸ் முறைப்பாட்டையடுத்து பூதாகரமாகியுள்ளது.
பின்னர் பொலிஸிற்கு வந்த பெண் தனது இரண்டாவது பிள்ளையின் தந்தை , தனது காதலன் எனவும் அவரின்றி வாழமுடியாதெனவும் தெரிவித்துள்ளார். எனினும் காதலனின் பெற்றோர் இதனை பொய்யெனக் கூறியுள்ளனர்.